• Sat. Apr 20th, 2024

தமிழ் இயக்குநர்களில் படங்களில் நடிக்க ஆசைப்படும் விஜய் தேவரகொண்டா

இந்தி திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான Dharma Productions உடன் இணைந்து Puri connects நிறுவனம் தயாரிக்க, பிரபல இயக்குநர் பூரி ஜெகன்னாத் இயக்கத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டா, அனன்யா பாண்டே நடித்துள்ள திரைப்படம் லைகர் (Saala Crossbreed).

பிரமாண்டமாக உருவாகியுள்ள இப்படம் 25 ஆகஸ்ட் 2022 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. தமிழ் பதிப்பை தயாரிப்பாளர் விநியோகஸ்தர் RK சுரேஷ் தனது Studio 9 நிறுவனம் சார்பில் வெளியிடுகிறார்.

பட வெளியீட்டை ஒட்டி நாயகன் விஜய் தேவரகொண்டா, நாயகி அனன்யா பாண்டே, தயாரிப்பாளர் விநியோகஸ்தர் RK சுரேஷ் ஆகியோர் சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்

நாயகி அனன்யா பாண்டே பேசியதாவது…

நான் உங்களை காதலிக்கிறேன். உங்களுக்காக இந்த வார்த்தைகளை தமிழில் சொல்ல கற்றுக்கொண்டு வந்தேன். இந்தப்படம் மிகப்பிரமாண்டமான மாஸான திரைப்படம். இத்திரைப்படம் அனைத்து தரப்பினரையும் கவரும். இப்படியானதொரு படத்தில் எனக்கு வாய்ப்பு கிடைத்தது பெருமை. இத்திரைப்படம் மிகச்சிறப்பான அனுபவத்தை தந்தது. இப்படத்தை பார்த்து ரசியுங்கள் என்றார்

நடிகர் விஜய் தேவரகொண்டா பேசியது…

தமிழகத்திற்கு வந்து ரொம்ப காலம் ஆகிவிட்டது. நோட்டா படத்தின் போது என் மீது தமிழக மக்கள் காட்டிய அன்பு மறக்க முடியாதது. இந்தப்படம் ஒரு அற்புதமான ஆக்சன் படம். உலகெங்கிலும் உள்ள அனைத்து ஆக்சன் ரசிகர்களையும் கவரும் வண்ணம் படம் உருவாகியுள்ளது. நான் தமிழ் படங்களை தொடர்ந்து கவனித்து வருகிறேன். தமிழ் இயக்குநர்களுடன் பணிபுரிய ஆசை உள்ளது. பா ரஞ்சித், வெற்றி மாறன், லோகேஷ் போன்றோருடன் உரையாடி இருக்கிறேன் வரும் காலத்தில் அவர்களது படங்களில் கண்டிப்பாக நடிப்பேன். லைகர் பொறுத்தவரை இந்தியா முழுவதும் உள்ள அனைத்து ரசிகர்களும் ரசிப்பார்கள் என்றார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *