மென்பொருள் துறையில் பணி யாற்றும் ருத்ரன் (பாபி சிம்ஹா),பணிச்சுமை தரும் பெரும்
மன அழுத்தத்துடன் மனைவிக்குக் கூட நேரம் ஒதுக்கமுடியாமல் ஓடிக்கொண்டே இருக்கிறார். அவர் உடல்நலனைக் கருத்தில் கொள்ளும் மனைவி நிலா (காஷ்மீரா பர்தேசி), அழுது, அடம்பிடித்து ருத்ரனைமலைப்பகுதி ஒன்றுக்குச் சுற்றுலா அழைத்துச் செல்கிறார். சுற்றுலா முடித்து வரும் வழியில் உள்ள பழைய ஹோட்டலில் தங்குகிறார்கள்.
அங்கே வில்லேந்திய ஓர் உருவம் அவர்களைத் தாக்கிக் கொல்ல முயல்கிறது. அதனிடமிருந்து தப்பிக்க ருத்ரன் ஆடும் அதிரடி ஆட்டமும் வில்லேந்திய உருவத்துக்குள் ஒளிந்திருப்பது யார் என்கிற பின்னணியுமே கதை.‘டைம் லூப்’ என்கிறகால வளையத்
துக்குள் சிக்கி, திரும்பத் திரும்ப ஒரே நிகழ்வுகளை எதிர்கொண்டு,அதிலிருந்து மீள முயலும் முதன்மைக் கதாபாத்திரங்களின் ‘ஜீவ-மரண’ போராட்டம் போல் திரைக்கதையை அமைத்திருக்கிறார்.அறிமுக இயக்குநர் ரமணன்புருஷஷோத்தமா. உண்மையில் அது ‘கால வளைய’க் கருத்தாக்கம் இல்லை என்பதை நிறுவும் இறுதிக் காட்சியின் மூலம், இயக்குநர் தனது உயரிய சமூக அக்கறையை வெளிப்படுத்தியிருக்கிறார். நடிகர்கள் தேர்வு, கலை இயக்கம், ஒளிப்பதிவு, இசை ஆகிய அம்சங்களுடன் முதல் தரமான ‘மேக்கிங்’ மூலம் தடுமாற்றம் இல்லாததிரை அனுபவத்தைக் கொடுத்திருக்கிறார்கள்.
மென்பொருள் துறை தரும்அழுத்தம் குறித்து பாடம் நடத்திக் கொண்டிருக்காமல், சில காட்சிகள், ஒரு பாடல் ஆகியவற்றின் மூலம் ருத்ரனின் சிக்கலை நிறுவிய விதம் நேர்த்தி.
அதேநேரம், தீவிர மன அழுத்தம்,ஒருவருக்கு அசுர உடல் பலத்தைக் கொடுக்கும் என்கிறதொடக்கக் காட்சி, அச்சு அசலாக ‘ஹீரோயிச’க் குப்பை. அதேபோல், ருத்ரனும் நிலாவும் தங்கும் விடுதியின் பழமையானத் தோற்றம்,வில்லேந்தி வரும் உருவம் கம்ப்யூட் டர் கேம்களில் வருவதுபோல் வடி வமைக்கப்பட்டிருப்பது ஆகியவற்றை தொடர்புபடுத்துவதற்கான தொடர்பையும் ருத்ரன் கதாபாத்திரத்துடன்
இணைக்கத் தவறி இருக்கிறார் இயக்குநர்.ரஜினியின் உடல்மொழித் தாக்
கத்தை தன் நடிப்பில் பல காலம் பின்பற்றி வந்திருக்கும் பாபி சிம்ஹா
இதில் ‘ருத்ரன்’ என்கிறகதாபாத்திரமாக உணர வைத்திருக்கிறார். கனவுகளுடன் கைப்பிடித்தகணவனை, பணி அழுத்தங்களிலிருந்து காப்பாற்றப் போராடும்
மனைவியாக காஷ்மீரா பரதேசியின்பங்களிப்பு கச்சிதம். அளவான கிளாமர்
நடிப்பிலும் கவர்கிறார்.ஆர்யா இரண்டு காட்சிகளில் வந்தாலும் முதிர்ச்சியான நடிப்பைத் தந்துபோகிறார். விடுதியின் வரவேற்பரைஊழியராக நடித்துள்ள கொச்சுபிரேமன், மருத்துவராக வரும் சரத் பாபுஆகியோர் கவனிக்க வைக்கிறார்கள்.மென்பொருள் துறையின் பணிவாழ்க்கை என்பது வேறொருஉலகமாக இருப்பதை, மருத்துவக்
கண்ணோட்டத்துடன் புதிய களத்தில்சுவாரசியமாகச் சொல்ல முயன்று,அதில் வெற்றியும் பெற்றுள்ள ‘வசந்தமுல்லை’யை நுகர்ந்து ரசிக்கலாம்
- மாலை அணிந்து கொடுங்கலூர் சென்ற பக்தர்கள்நீலகிரி மாவட்டம் மஞ்சூர் சுற்று வட்டார பகுதிகளிலிருந்து நூற்றுக்கணக்கான கொடுங்கலூர் பகவதி அம்மன் கோவிலுக்கு மாலை […]
- ராகுல் காந்திக்கு வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து மஞ்சூரில் ஆர்ப்பாட்டம்நீலகிரி மாவட்டம் மஞ்சூர் பஜார் பகுதியில் குந்தா வட்டார காங்கிரசின் சார்பில் ராகுல்காந்தி அவர்கள் மீது […]
- குந்தா அணையில் குப்பைகளை அகற்ற முன்னோட்டம்நீலகிரி மாவட்டம் மஞ்சூர் குந்தா அணையில் தங்கி உள்ள குப்பைகள் செடி, கொடி இலை அகற்றும் […]
- 2022-2023 ஆம் ஆண்டிற்கான கணிதக் கண்காட்சிநீலகிரி மாவட்டம் மஞ்சூர் மகாகவி பாரதியார் நூற்றாண்டு விழா நினைவு அரசு பெண்கள் உயர்நிலைப் நிலைப் […]
- தேசிய பங்குசந்தை பட்டியலில் வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல்தமிழ் திரையுலகில் அதிக படங்களை தயாரித்து வரும் நிறுவனங்களில் ஒன்றான வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் லிமிடெட், […]
- மதுரை அருகே சந்தன கட்டைகள் கடத்திய 2 பேர் கைதுமதுரை மாவட்டம் பாலமேடு பகுதியில் சந்தன மரங்கள் உள்பட ஏராளமான மரங்கள் உள்ளன இவற்றை கடநத்தி […]
- லைஃப்ஸ்டைல்:புதினா சுருள்சப்பாத்தி: தேவையானவை:கோதுமை மாவு – 2 கப், நெய் – ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு […]
- காவிய நாயகி வேடத்தில் சமந்தா..!காளிதாஸ் எழுதிய புராண கதையான சகுந்தலம் என்ற திரைப்படத்தில் காவிய நாயகி வேடத்தில் சமந்தா நடித்துள்ளார்.தென்னிந்தியாவின் […]
- சூதாட்டத்தை ஆடிவிட்டு அதற்கு ஆதரவாக நடிகர்கள் விளம்பரம் செய்யவேண்டும்-விக்கிரமராஜா பேட்டிஆன்லைன் சூதாட்டத்தை கவர்னர் தடை செய்வதற்கு அனுமதி அளிக்க வேண்டும் ஆன்லைன் வெளிநாட்டு நிறுவனங்களையும் ஒட்டு […]
- ராகுல் காந்தி எம்பி பதவி பறிக்கப்பட்டதுராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அவரது எம்.பி பதவியை பறித்து […]
- முதல்வரின் பிறந்தநாளை முன்னிட்டு மாணவர்களுக்கு திருக்குறள் புத்தகம் வழங்கல்தமிழக முதல்வரின் பிறந்தநாளை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு திருக்குறள் புத்தகம் வழங்கியமதுரை 70 வது […]
- ஏப்ரல் மாதம் வெளியாகும் ” ரஜினி ” படம்வைத்தியநாதன் பிலிம் கார்டன் பட நிறுவனம் சார்பில் V.பழனிவேல், கோவை பாலசுப்பிரமணியம் இருவரும் இணைந்து தயாரித்திருக்கும் […]
- N4 திரை விமர்சனம்சென்னை காசிமேடு பின்னணியில் உருவாகியுள்ள படம். அங்குள்ள காவல்நிலையத்தின் எண், என்4 என்பதால் படத்துக்கு இந்தப்பெயர். […]
- படித்ததில் பிடித்ததுசிந்தனைத்துளிகள் யாரையும் நம்பி யாருக்காகவும் யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள்;இறுதியில் நம்மை கோமாளி ஆகிவிட்டு அவர்கள் ஒன்றாக […]
- இன்று நோபல் பரிசு பெற்ற பீட்டர் யோசப் வில்லியம் டெபி பிறந்த தினம்X-கதிர் சிதறலில் சிறப்பான பங்களிப்புகளுக்காக நோபல் பரிசு பெற்ற பீட்டர் யோசப் வில்லியம் டெபி பிறந்த […]