• Fri. Jun 26th, 2026
WhatsAppImage2026-06-18at2309102
previous arrow
next arrow
Read Now

விஏஓ-வை தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை – இருவர் கைது

ByKalamegam Viswanathan

Mar 14, 2025

திருமங்கலத்தில் கிராம நிர்வாக அலுவலரின் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை – சகோதரர் இருவரை கைது செய்து போலீசார் விசாரணை.
(விஏஓ உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு , சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் பானு தியேட்டர் அருகே வசித்து வரும் உரப்பனூர் கிராம நிர்வாக அலுவலர் முத்துப்பாண்டி (45) – க்கும், திருமங்கலம் முகமதுசாபுரம் தெருவை சேர்ந்த சம்ரத் பீவி (42) சம்ரத்தீவி இடப்பிரச்சனை ஒன்று இருப்பது அதை முடித்து தாருங்கள் என விஏஓவிடம் கேட்டுள்ளார்கள். இதற்கு இடையில் நீண்ட நாட்களாக இட பிரச்சனை முடியாததால் இவர்களிடையே பிரச்சனை ஏற்பட்டது. மகன் ரபீக் ராஜா உள்ளதை கண்டு, விஏஓ முத்து பாண்டியின் வீட்டிற்கு நள்ளிரவு சென்று ரபிக் ராஜா மற்றும் அவரது 15 வயது சகோதரர் ஆகிய இருவரும் அங்கிருந்த அம்மிக்கல்லை எடுத்து, முத்து பாண்டி மீது தலையில் போட்டதால் உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.

சம்பவம் குறித்து திருமங்கலம் நகர் காவல் துறையினர் சம்ரத் பீவியின் மகன்கள் இரண்டு பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.