• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

ஏணி சின்னத்திற்கு வாக்கு சேகரித்த யூனியன் சேர்மன் ராதிகா பிரபு

இந்தியா கூட்டணியின் இராமநாதபுரம் பாராளுமன்ற வேட்பாளர்
நவாஸ்கனிக்கு ஆதரவாக ஆர்.எஸ். மங்கலம் ஒன்றிய பெருந்தலைவர் ராதிகா பிரபு சோழந்தூர், வடவயல் பகுதிகளில் ஏணி சின்னத்திற்கு  வீடு வீடாகச் சென்று வாக்குகள் சேகரித்தார். இந்த நிகழ்வில் ஒன்றிய மாணவர் அணி அமைப்பாளர் மனோகரன், சோழந்தூர் கிளைச் செயலாளர் நாசர், நூர்முகமது, பிச்சங்குறிச்சி கிளை செயலாளர் ஜெயராஜ், வடவயல் கிளைச் செயலாளர் முனியசாமி, சீனாங்குடி கிளைச் செயலாளர் தென்னரசு, களவான்குடி கிளைச் செயலாளர் கார்மேகம், கொத்தமங்கலம் கிளைச் செயலாளர் கருணாநிதி மற்றும் கிளைக் கழக நிர்வாகிகள் ராக்கு, கணபதி, புல்லானி, கமல், அழகுமுத்து, பொன்னி, அய்யாச்சாமி மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள்  ஆகியோர் கலந்து கொண்டு ஏணி சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர்.