
உக்ரைனுக்கு எதிராக, ரஷிய படைகள் கடந்த பிப்ரவரி 24-ந்தேதி போர் தொடுத்தது. ராணுவ நடவடிக்கை என்ற பெயரிலான இந்த போரில் இரு நாடுகளின் வீரர்களும் பெருமளவில் உயிரிழந்தனர். போரை முடிவுக்கு கொண்டு வர இரு தரப்பில் நடந்த பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்தன. இரு நாடுகளையும், இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் தூதரக பேச்சுவார்த்தை நடத்தி போரை முடிவுக்கு கொண்டு வர வலியுறுத்தி வருகின்றன. ஆனால், போரானது பல மாதங்களாக நீடித்து வருகிறது. இந்த போரில், உக்ரைனின் முக்கிய நகரங்களான கீவ், கார்கிவ், கெர்சன், மரியுபோல் மற்றும் லிவிவ் உள்ளிட்ட பல நகரங்கள் ரஷிய ஏவுகணை தாக்குதலில் சேதமடைந்தன. கட்டிடங்கள் உருக்குலைந்து போயின. எனினும், பல நகரங்களை ரஷியாவின் பிடியில் இருந்து சாமர்த்தியமுடன் செயல்பட்டு உக்ரைன் மீட்டது. இதன்படி சமீபத்தில், ரஷிய படையிடம் இருந்து கெர்சன் நகரை உக்ரைன் மீட்டது. தொடர்ந்து கடுமையாக சண்டை நீடித்து வருகிறது. இந்த நிலையில் கெர்சன் நகரில் இருந்து படைகளை வாபஸ் பெறும்
அறிவிப்பை ரஷியா வெளியிட்டு அதன் படைகள் வெளியேறின.
இந்த நிலையில், நேட்டோ உறுப்பு நாடுகளில் ஒன்றான போலந்து நாட்டின் மீது ரஷிய ஏவுகணைகள் மழையாக பொழிந்துள்ளன. போலந்தின் 12-க்கும் மேற்பட்ட பெரிய நகரங்களில் குண்டுவெடிப்புகள் நடந்த சப்தங்கள் எழுந்துள்ளன என தகவல் வெளியானது. இந்த சம்பவத்தில் போலந்து நாட்டில் குடிமக்களில் 2 பேர் உயிரிழந்து உள்ளனர் என அமெரிக்க புலனாய்வு பிரிவு அதிகாரி தெரிவித்து உள்ளார். ஆனால், போலந்து தரப்பில் உடனடியாக பதில் அளிக்கப்படவில்லை. இதனை தொடர்ந்து, போலந்து அதிபர் ஆண்டிரெஜ் துடா மற்றும் அமெரிக்க அதிபர் பைடன் இருவரும் அவசர பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர் என போலந்து அதிபர் வட்டாரங்கள்
தெரிவித்தன. இதேபோன்று அதிபர் பைடன் வெளியிட்ட டுவிட்டர் செய்தியில், போலந்து அதிபர் துடாவிடம் பேசியுள்ளேன். போலந்தின் கிழக்கே மக்கள் உயிரிழந்ததற்கு எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து கொண்டேன். இந்த குண்டுவெடிப்பு பற்றிய விசாரணைக்கு போலந்துக்கு முழு ஆதரவை வழங்குவோம். அடுத்து எடுக்க வேண்டிய முறையான நடவடிக்கைகள் பற்றி முடிவு செய்ய தொடர்ந்து நாங்கள் போலந்துடன் தொடர்பில் இருப்போம் என அவர் தெரிவித்து உள்ளார்.
இந்த நிலையில், போலந்து நாட்டை தாக்கியது, ரஷிய ராக்கெட்டை நடுவழியில் மறித்து, வீழ்த்துவதற்காக அனுப்பப்பட்ட உக்ரைன் படையின் ராக்கெட் என முதல் கட்ட ஆய்வின்படி தெரிய வந்துள்ளது என்று அமெரிக்க அதிகாரிகள் இன்று தெரிவித்து உள்ளனர். இதேபோன்று, அமெரிக்க அதிபர் பைடன், ஜி7 நாட்டு தலைவர்களிடம் கூறும்போது, உக்ரைனில் இருந்து ஏவப்பட்ட, ரஷிய ராக்கெட்டை தாக்கி அழிக்கும் ராக்கெட் என்பதற்கான அடையாளங்கள் காணப்படுகின்றன என கூறினார். இதனை டி.பி.ஏ. செய்தி நிறுவனம் தனது டுவிட்டரில் தெரிவித்து உள்ளது. போலந்தின் லுபெல்ஸ்கை மாகாணத்தில் ரூபீஸ்ஜவ் மாவட்டத்தில் பிரிஜிவோடோ கிராமத்தில் ரஷியாவில் தயாரான ராக்கெட் ஒன்று நேற்று பிற்பகல் 3.40 மணியளவில் தாக்குதல் நடத்தி உள்ளது. இதில், போலந்து குடியரசின் மக்கள் 2 பேர் உயிரிழந்து உள்ளனர் என வெளியுறவு அமைச்சக அறிக்கை தெரிவித்தது. எனினும், ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் இதனை மறுத்ததுடன், உக்ரைன் மற்றும் போலந்து நாட்டு எல்லை பகுதியில் எங்களது ராணுவம் சார்பில் எந்த தாக்குதல்களும் நடத்தப்படவில்லை என தெரிவித்து இருந்தது.
- சூப்பர் சிங்கர் ஜூனியரில், சர்ப்ரைஸ் விசிட் அடித்த மாரி செல்வராஜ் !! சூப்பர் சிங்கரில் கலக்கிய இளம் பாடகி ஹர்ஷினி நேத்ரா, கட்டியணைத்துப் பாராட்டிய மாரி செல்வராஜ் !! சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில், மாமன்னன் பாடலால் நிகழ்ந்த அற்புதம் !!தமிழில் இசை உலகில் பல மாற்றங்களை ஏற்படுத்தி வரும் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். தற்போது கோலாகலமாக … Read more
- கள்ளக்காதலில் கருத்து வேறுபாடு அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்ட ரயில்வே காவலர்கள்…கள்ளக்காதலனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இரண்டு பிள்ளைகளுடன் ரயில்வே பெண் காவலர் மதுரை அருகே … Read more
- ராஜபாளையம் அருகே மூதாட்டி கொலை.., குற்றவாளிகள் 2 பேருக்கு ஆயுள் தண்டனை…விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகேயுள்ள செட்டியார்பட்டி, இந்திரா நகரைச் சேர்ந்தவர் காசியம்மாள் (65). மூதாட்டி காசியம்மாள் … Read more
- முன்னாள் அமைச்சர் ஆர். பி. உதயகுமார் உடன் அலங்காநல்லூர் பகுதி நிர்வாகிகள் சந்திப்பு..,மதுரை புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் முன்னாள் முப்பெரும் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் உடன், … Read more
- அனைத்து மதத்தினரையும் சமமாக மதித்தவர் ஸ்ரீ மகா பெரியவர்… எழுத்தாளர் இந்திரா சௌந்தரராஜன் பேச்சு..,அனைத்து மதத்தினரையும் சமமாக மதித்தவர் ஸ்ரீ மகா பெரியவர் என்று அனுஷ வைபவ விழாவில் எழுத்தாளர் … Read more
- சமுத்திரக்கனி நடிக்கும் “திரு.மாணிக்கம்” ஃபர்ஸ்ட் லுக் !!இயக்குநர் நந்தா பெரியசாமி இயக்கத்தில், சமுத்திரக்கனி நடிக்கும் “திரு.மாணிக்கம்” ஃபர்ஸ்ட் லுக். இயக்குநர் நந்தா பெரியசாமி … Read more
- இலக்கியம்:நற்றிணைப் பாடல் 254: வண்டல் தைஇயும், வரு திரை உதைத்தும்,குன்று ஓங்கு வெண் மணற் கொடி … Read more
- படித்ததில் பிடித்தது தத்துவங்கள் 1.புதிய சிந்தனைகளை உருவாக்குவதில் இருக்கும் சிக்கல்களை விட பழைய சிந்தனைகளில் இருந்து வெளியே வருவதில் … Read more
- பொது அறிவு வினா விடைகள்1. எந்த இந்திய விமான நிலையம் அதன் செயல்பாடுகளை இயக்க சூரிய சக்தியை மட்டுமே பயன்படுத்துகிறது?கொச்சி … Read more
- குறள் 531இறந்த வெகுளியின் தீதே சிறந்தஉவகை மகிழ்ச்சியிற் சோர்வு பொருள் (மு.வ): பெரிய உவகையால் மகிழ்ந்திருக்கும்போது மறதியால் … Read more
- “இந்த கிரைம் தப்பில்ல” முதல் பார்வை போஸ்டரை வெளியிட்ட தொல்.திருமா வளவன்மதுரியா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பாளர் திரு மனோஜ் கிருஷ்ணசுவாமி தயாரிப்பில், “இந்த கிரைம் தப்பில்ல” என்ற திரைப்படத்தின் … Read more
- சுமார் ஒரு மணி நேரமாக பெய்த கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு..,மதுரை சோழவந்தான் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் சுமார் ஒரு மணி நேரமாக பெய்த கனமழையால் பொதுமக்களின் … Read more
- ஆட்டோ டிரைவர் தூக்கிட்டு தற்கொலை… போலீஸார் விசாரணை..,மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே கோவில்குருவித்துறை கிராமத்தைச் சேர்ந்த பெருமாள் மகன் சுந்தரபாண்டியன் வயது 25. … Read more
- அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் எந்த பிரச்சனையும் இல்லை எனவும், மானத்தை, ரோஷத்தை இழந்து எடப்பாடி பழனிச்சாமி பாஜகவிடம் செல்ல மாட்டார் என்றும் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டி…அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் எந்த பிரச்சனையும் இல்லை எனவும், மானத்தை, ரோஷத்தை இழந்து எடப்பாடி பழனிச்சாமி பாஜகவிடம் … Read more
- ரயில்வே பெண் காவலர் இரு குழந்தைகளுடன் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை..!மதுரை மாவட்டம் தேனூர் அருகேயுள்ள கிராமத்தை சேர்ந்த ரயில்வே காவல்துறை பெண் காவலரான ஜெயலெட்சுமி என்பவர் … Read more