விருதுநகர் 14 வார்டில் உள்ள திருவள்ளூவர் தெருவில் உள்ள அருள் மிகு பத்திர காளி அம்மன் கோவிலில் உள்ள உண்டியலை சில மர்ம நபர்கள் நேற்று இரவு உடைக்க முயற்சி செய்துள்ளனர்,

கோவில் அருகில் படுத்து இருந்த ஒருவர் சத்தம் போடவே மர்ம நபர்கள் ஓடி விட்டனர். இது பற்றி கோவில் விழா தலைவர் பூபதி கூறுகையில் இதற்கு முன்பு இரண்டு முறை கோவில் உண்டியல் பூட்டை உடைக்க முயற்சி செய்தனர், இது மூன்றாவது முறையாகும், இனிமேலும் இது போன்று நடவாமல் இருக்க போலீசார் இரவு ரோந்து (NIGHT ROUNTS) வர வேண்டும் என்று பொது மக்கள் சார்பில் கேட்டுக்கொள்கிறேன் என்றார்.





