• Sat. Dec 20th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

திருச்சி அமமுக வேட்பாளர் ப.செந்தில்நாதன் Bio-Data

Byகதிரவன்

Mar 24, 2024

தேசிய ஜனநாயக் கூட்டணி (‘National Democratic Alliance (NDA), கூட்டணியில்,அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பாக திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும், ப.செந்தில்நாதன் BE, MBA(UK), அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் திருச்சி மாநகர் மாவட்ட செயலாளராகவும் திருச்சிராப்பள்ளி மாமன்ற உறுப்பினராகவும் பணியாற்றுகிறார்.

பாரதிய ஜனதா கட்சி கூட்டணியில் உள்ள அம்மா மக்கள் முன்னேற்றக் கழக திருச்சி வேட்பாளர் செந்தில்நாதன்

திருச்சி கேகே நகரில் வசித்து வரும், முக்குலத்தோர்-கள்ளர் வகுப்பைச் சேர்ந்த இவரின் தந்தை மறைந்த காவல் துறை கண்காணிப்பாளர் தி.பஞ்சநாதன். தாயார் ருக்மணி அம்மாள் விரிவுரையாளராக (புதுகை மன்னர் அரசு கல்லூரி மற்றும் திருச்சி ஈவேரா அரசு கல்லூரி) பணிபுரிந்துள்ளார்.

இவரது பெற்றோர் பணி நிமித்தமாக புதுக்கோட்டையில் இருந்த பொழுது, புதுகை அரசு மருத்துவமனையில் பிறந்தார்.  தொடக்க கல்வியை புதுக்கோட்டையிலும் (PSK matriculation, பிரகதாம்பாள் பள்ளி), பின்னர் திருச்சியில் ( St.John’s Vestry, Campion Anglo Indian school) பள்ளி படிப்பை முடித்தார்.

கல்லூரி படிப்பில் இளங்கலையாக கெமிக்கல் இன்ஜினியரிங் ( BE, அண்ணாமலைப் பல்கலைக்கழகம்) 98-ல் படித்துள்ளார். சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழ்த்தில் படிக்கும் பொழுது புரட்சித்தலைவியால் ஈர்க்கப்பட்டு, 1996 ஆம் ஆண்டு அதிமுகவில் அடிப்படை உறுப்பினராக இணைந்தார்.

பின்னர் முதுகலை வணிக மேலாண்மை படிப்பை லண்டனில் (MBA University of Wales, Cardiff UK) முடித்துள்ளார்.

முதுகலை பட்டம் படிக்கும் பொழுதே சிங்கப்பூரில் வேலை கிடைத்து, 1999 முதல் 2004 ஆண்டு வரை தனியார் மற்றும் சிங்கப்பூர் அரசு சம்பந்தப்பட்ட நிறுவனங்களில் மென்பொருள் வல்லுனராக வேலை பார்த்துள்ளார்.

2004 முதல் புனேவில் உள்ள Tata கம்பெனிகளிலும், 2006 ஆண்டு முதல் பெங்களூரில் உள்ள மென்பொருள் நிறுவனங்களிலும் வேலை பார்த்து வந்தார்.

1996 முதல் தமிழகமெங்கும் நடந்த தேர்தல் மற்றும் கட்சிப் பணிகளில் அடிப்படை உறுப்பினராக பணியாற்றி வந்த இவர், 2018-ல் அதிமுகவில் அன்றைய காலகட்டத்தில் நிலவி வந்த சூழ்நிலையில்,  மக்கள்செல்வர் TTV தினகரன் பால் ஈர்க்கப்பட்டு, தலைமை ஏற்று, அதுவரை பார்த்து வந்த மென்பொருள் வேலைகளை விட்டுவிட்டு முழு நேர அரசியலில் ஈடுபடுத்திக் கொண்டார்.