• Mon. May 6th, 2024

விஜய்வசந்துக்கு மீண்டும் வாய்ப்பு கொடுத்த காங்கிரஸ்

கன்னியாகுமரி மக்களவை தேர்தல்களில் காங்கிரஸ் அதிக முறை வெற்றி பெற்ற கட்சியாக திகழ்கிறது. குமரி தந்தை மார்சல் நேசமணி காங்கிரஸ் கட்சியின் வெற்றியை தொடங்கி வைத்தார்.

1969-ல் நேசமணியின் மறைவுக்கு பின் நடைபெற்ற இடைத்தேர்தலில். காமராஜர் போட்டி இட்டு வெற்றி பெற்றார். தொடர்ந்து வந்த 1971_நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் இரண்டாவது முறையாக காமராஜர் வெற்றி பெற்றார்.

காமராஜர் மறைவுக்கு பின் நடந்த தேர்தலில் குமரி அனந்தன் வெற்றிபெற்றார் ஜனத்தளம் கட்சியின் சார்பில், குமரி அனந்தனுக்கு அடுத்து டென்னிஸ் 5_முறை காங்கிரஸ் கட்சியின் சார்பிலும்,1-முறை தமாகா சார்பிலும் வெற்றி பெற்றார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஏ.பி.பெல்லார்மின் ஒரு முறையும் (இவை எல்லாம் நாகர்கோவில் மக்களவையாக இருந்த காலகட்டம்).

தொகுதிகள் மறு சீரமைப்புக்கு முன் வரை குமரி மாவட்டத்தில் 7_சட்டமன்ற தொகுதிகள் இருந்தது. மறு சீரமைப்பு காரணமாக திருவட்டாறு சட்டமன்ற தொகுதி இல்லாமல் போனது(இந்த காலக் கட்டத்தில் கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதி திருச்செந்தூர் நாடாளுமன்றத்தினுடன் இருந்தது)

தொகுதி மறு சீரமைப்பிற்கு பின் நடந்த கன்னியாகுமரி மக்களவைத் தேர்தலில் தி மு க வை சேர்ந்த ஹெலன் டேவிட்சன் வெற்றி பெற்றார்.

விஜய்வசந்த்

இதே தொகுதியில் வசந்தகுமார் இரண்டு முறை போட்டியிட்டார். முதல் தேர்தலில் தோல்வி அடைந்தவர்,இரண்டாவது முறை வெற்றி பெற்றார்.

இப்போதைய மக்களவை தேர்தலில் பாஜக சார்பில்,பொன். இராதாகிருஷ்ணன் 10-வது முறையாக போட்டி இடுகிறார். இதில் இரண்டு மக்களவை தேர்தல்களில் வெற்றி பெற்ற பொன். இராதாகிருஷ்ணன் மத்திய அமைச்சரவையில் இரண்டு முறை இணை அமைச்சராகவும் இருந்தவர்.

பொன். இராதாகிருஷ்ணன்

ஒரு முறை பொன். இராதாகிருஷ்ணன் நாகர்கோவில் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு அ தி மு க., வேட்பாளர் நாஞ்சில் முருகேசனிடம் தோல்வி அடைந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *