ரஜினி மற்றும் விஜய் ரசிகர்களுக்கு பிப்ரவரி 10ம் தேதியான நாளை டபுள் ட்ரீட் தர சன் பிக்சர்ஸ் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் ரசிகர்கள் சோஷியல் மீடியாவை தெறிக்கவிட்டு வருகின்றனர்!
சன் பிக்சர்ஸ் அடுத்தடுத்து டாப் ஹீரோக்களின் படங்களை தயாரித்து வருகிறது. ரஜினியின் அண்ணாத்த படத்தை தொடர்ந்து சூர்யாவின் எதற்கும் துணிந்தவன், விஜய்யின் பீஸ்ட் என வரிசையாக அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களை தயாரித்து வருகிறது.
இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தியேட்டரில் ரிலீசாக போகும் சூர்யா படம் என்பதால் எதற்கும் துணிந்தவன் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த படம் மார்ச் 10 ம் தேதி தியேட்டர்களில் ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டு விட்டது. இதனால் சன் பிக்சர்ஸ் அடுத்து இயக்கி வரும் விஜய்யின் பீஸ்ட் படம் பற்றி ரசிகர்கள் தொடர்ந்து அப்டேட் கேட்க துவங்கி விட்டனர்.
இந்நிலையில் பீஸ்ட் படத்தின் ஃபஸ்ட் சிங்கிள் பிப்ரவரி 14 ம் தேதி வெளியிடப்பட உள்ளதாக ஸ்பெஷல், மாஸ் வீடியோவுடன் இரண்டு நாட்களுக்கு முன் அறிவிப்பு வெளியிட்டது சன் பிக்சர்ஸ். இந்நிலையில் லேட்டஸ்ட் தகவலாக, அரபிக் குத்து பாடலின் செகண்ட் ப்ரோமோ வீடியோவை பிப்ரவரி 10 ம் தேதி வெளியிட சன் பிக்சர்ஸ் முடிவு செய்திருக்கிறதாம். முதல் ப்ரோமோவில், நாளை முழு பாட்டோடு வீட்டுக்கு வாங்க என விஜய் பேசுவதை போல் அமைக்கப்பட்டிருந்தது. அதனால் இரண்டாவது ப்ரோமோவில் அனிருத், நெல்சன், சிவகார்த்திகேயனுடன் விஜய்யும் இருப்பார். ஃபஸ்ட் சிங்கிளான அரபிக்குத்து பாடலை விஜய் தனது சொந்த குரலில் பாடுவது போல் ப்ரோமோ அமைக்கப்பட்டிருக்கும் என கூறப்படுகிறது.
பிப்ரவரி 10 ம் தேதி வெளியாக உள்ள முதல் ட்ரீட், அரபிக்குத்து பாடலுக்கான இரண்டாவது ப்ரோமோ என்றால், இரண்டாவது ட்ரீட் அதை விட செமயாக உள்ளது. ரஜினியின் அடுத்த படமான தலைவர் 169 படத்தை டைரக்டர் நெல்சன் திலீப்குமார் இயக்க போவதாக சமீபத்தில் தகவல் வெளியானது. தலைவர் 169 படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் நாளை வெளியிட சன் பிக்சர்ஸ் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவல் வெளியானதும், இது என்ன செம சர்ப்ரைஸ் ட்ரீட்டா இருக்கே என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
- அடுத்த முதல்வர் உதயநிதி ஸ்டாலின்தான்- அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் பேச்சு.ஸ்டாலினுக்கு பிறகு அடுத்த முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தான் என கே..கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் பேசியுள்ளார்.விருதுநகர் மாவட்டம் […]
- ஓலா, ஊபர் நிறுவனங்களுக்கு நோட்டீஸ்…ஓலா, ஊபர் நிறுவனங்களுக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பெருநகரங்களில் ஓலா, ஊபர் போன்ற வாகனங்கள் […]
- காங்கிரஸ் குறித்து பிரசாந்த் கிஷோர் பரபரப்பு டூவிட்குஜராத், இமாச்சல் தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியை சந்திக்கும் பிரசாந்த் கிஷோர் பரபரப்பு தகவல்கடந்த சில தினங்களுக்கு […]
- ரெயில்வே ஊழியர்கள் தமிழ்மொழியை கற்றுக்கொள்ள வேண்டும்தமிழகத்தில் பணிபுரியும் ரெயில்வே ஊழியர்கள் தமிழ்மொழியை கற்றுக்கொள்ள வேண்டும்- என மத்திய ரெயில்வே அமைச்சர்அஸ்வினி வைஷ்ணவ் […]
- முப்பம்தரத்து இசக்கியம்மன் கோயில் கொடை விழாகழுகுமலையில் முப்பம்தரத்து இசக்கியம்மன் கோயில் கொடை விழாகொடியேற்றத்துடன் துவங்கியது .அதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.கழுகுமலை மேலக்கேட் […]
- இரு ரயில்வே சங்க நிர்வாகிகளுக்கிடையே அடிதடிமதுரையில் ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலகத்தில், இரு ரயில்வே சங்க நிர்வாகிகள் அடிதடி ஈடுபட்டதால் பரபரப்பு.’சதர்ன் […]
- மீண்டும் வருகிறாள் சந்திரமுகி… விரைவில்சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘சந்திரமுகி’ திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக கடந்த ஆண்டே […]
- காங்கிரஸ் கட்சிக்கு அவமானமாக இல்லையா…? குஷ்பு சாடல்இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் ஆயுள் தண்டனை பேரறிவாளன் அனுபவித்து வந்தார். […]
- கள்ளச்சாரயத்தை ஒழிக்க வீதியில் இறங்கி போராடுவோம் – எடப்பாடிபழனிசாமிதமிழக அரசு கள்ளச்சாராயத்தை முற்றிலும் ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி அறிக்கை […]
- வாட்ஸ்-அப் பயனாளிகளுக்கு விரைவில் புதிய வசதிவாட்ஸ் அப் இல்லைஎன்றால் உலகமே முடங்கிவிடும் அளவுக்கு அதன் பயன்பாடு அதிகரித்துவருகிறது.புகைப்படங்கள்,வீடியோக்கள்,வீடியோகாலில் பேச, என தனிப்பட்ட […]
- பல வெற்றிகளை குவித்த குத்துச்சண்டை வீரர், மரணத்திடம் தோல்வி..குத்துச்சண்டையில் இதுவரை தோல்வியை சந்திக்காத ஜெர்மனி வீரர் மூசா யாமக் போட்டிக்களத்திலேயே மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த […]
- பாலியல் குற்றச்சாட்டு-எலான்மஸ்க் மறுப்புவிமான பணிப்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு தந்த எலான் மஸ்க் பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது.உலகின் முதன்மை பணக்காரர்களுள் […]
- மொழியை வைத்து சர்ச்சை… பிரதமர் விமர்சனம்…இந்தியாவில் அண்மைக்காலமாக மொழியை வைத்து சர்ச்சையை கிளப்ப முயற்சி நடப்பதாக பிரதமர் மோடி விமர்சனம் செய்துள்ளார். […]
- முன்கூட்டியே துவங்குகிறது தென்மேற்கு பருவமழைதென்மேற்கு பருவமழை ஜூன் முதல் அல்லது 2 வாரத்தில் துவங்கும். ஆனால் இந்த ஆண்டு 10 […]
- திவாலான இலங்கை அரசு… இலங்கை மத்திய வங்கி அறிவிப்பு…இலங்கை அரசு திவால் ஆகிவிட்டதாக அந்த நாட்டின் மத்திய வங்கி பரபரப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. […]