• Mon. Aug 24th, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

சோழவந்தான் அருகே பாம்பு கடித்து தோட்டத் தொழிலாளி உயிரிழந்த சோகம்..,

ByKalamegam Viswanathan

Aug 24, 2026

சோழவந்தான் அருகே தச்சம்பத்து நெடுங்குளம் ரோட்டில் தோட்டத்தில் பாலமுருகன் 57 என்பவர் தோட்ட வேலை செய்து வருகிறார்.நேற்று இரவு இவரை பாம்பு கடித்து உள்ளது. இவரை சோழவந்தான் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்துள்ளனர்.

அங்கு பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே பாலமுருகன் இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இதுகுறித்து சோழவந்தான் சப்-இன்ஸ்பெக்டர் சண்முகவேல் பிணத்தை கைப்பற்றி உடல் கூறு ஆய்வுக்காக வாடிப்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.