• Mon. Aug 24th, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

டெல்டா மாவட்டத்தில் 764 நீர்நிலைகளில் 720 நீர்நிலைகள் முற்றிலும் வறண்டு காணப்படுகிறது ஆர்.பி. உதயகுமார்..,

ByKalamegam Viswanathan

Aug 24, 2026

தமிழ்நாட்டில் மொத்தம் 39,202 ஏரிகளும், 36 முக்கிய ஆறுகளும், 90க்கும் மேற்பட்ட பெரிய அணைகளும் உள்ளன;

இந்தியாவிலே தமிழ்நாட்டில்தான் 13,629 ஏரிகள்,43,837 குளம் மற்றும் குட்டைகள், பாசனப் தொட்டிகள் உள்ளன. மொத்தத்திலே தமிழ்நாட்டில் ஏரிகள், குளங்கள், குட்டைகள் மற்றும் அணைகள் உட்பட மொத்தம் 1,06,957 நீர்நிலைகள் உள்ளன.தமிழ்நாட்டில் உள்ள மொத்த நீர்நிலையில் பாதி அளவு நீர்நிலைகள் மட்டுமே தற்போது பயன்பாட்டில் இருப்பது கவலை அளிக்கிறது..

50 சதவீதம் நீர்நிலைகள் வறண்டு போனதாலும், தூர் வாரப்படாததாலும், ஏற்படுகிற வண்டல் மண் படிவு, ஆக்கிரமிப்புகள் மற்றும் கட்டுமானங்கள் போன்றவற்றால் 50 சதவீதம் நீர்நிலைகள் தற்போது பயன்பாட்டில் இல்லாமல் இருப்பது கவலையை அளிப்பதாக இருக்கிறது.

அவற்றில் தமிழ்நாடு முழுவதும் நீர்வளத்துறை பராமரிப்பிலே 14,141 நீர்நிலைகளில் தற்போது 4,208 நீர்நிலைகள் முற்றிலும் வறண்டு உள்ளன. மேலும் 5,814 நீர்நிலைகளில் 1 முதல் 25 சதவீதம் மட்டுமே நீர் இருப்பு உள்ளது. பருவமழை பொய்த்ததாலும், கோடை வெப்பத்தின் தாக்கம் அதிகரித்தாலும், தமிழகம் முழுவதும் 10,000க்கு மேற்பட்ட நீர்நிலைகளில் நீர் இருப்பு குறைந்துள்ளது.

நீர்வளத்துறை பராமரிப்பில் உள்ள 14,141 நீர்நிலைகள், அதேபோல ஏரிகள், குளங்கள் மற்றும் பாசனப் தொட்டிகள், நீரின்றி தற்போது காணப்படுகின்றது. அதிலும் குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் நிலைமை இன்னும் மோசமாக உள்ளன.

டெல்டா மாவட்டத்தில் 764 நீர்நிலைகளில் 720 நீர்நிலைகள் முற்றிலும் வறண்டு காணப்படுகின்றன. மொத்த கொள்ளளவான 6.7 டிஎம்சி நீர், ஆனால் தற்போது அதிலே 0.176 டிஎம்சி அளவு மட்டுமே தண்ணீர் உள்ளது; கவலை அளிப்பதாக இருக்கிறது. மொத்த கொள்ளளவிலே வெறும் 2.62 சதவீதம் மட்டுமே நீர் இருப்பு உள்ளது; மேலும் பல பகுதிகளில் ஏரிகள், குளங்கள் வறண்டு உள்ளதால் நிலத்தடி நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது.

மேட்டூர் அணையிலிருந்து ஜூன் 12ஆம் தேதி முதல்வர் விஜய் வழக்கம் போல் தண்ணீர் திறக்கப்படாததால், கர்நாடகத்திலிருந்து காவிரி நீர் வரத்து தாமதமானதால், நீர்நிலைகள் வளர்ச்சிக்கு முக்கிய காரணம் என விவசாயிகள் கவலை தெரிவித்து வருகின்றார்கள். நீர்நிலைகள் வறண்டதாலும், ஆறுகள், கால்வாய்கள் வழியாக நமக்கு கிடைக்கும் பாசன நீரை நம்பி இருந்த விவசாயிகள், தற்போது நிலத்தடி நீரை நாட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இதற்காக ஆள்துளை கிணறுகளை மேலும் ஆழப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது; இதனால் விவசாயிகளுக்கு கூடுதல் பொருளாதார சுமை அதிகரித்து வருவது மொத்தத்தில் வறட்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது தமிழகம்.

இதைப் பற்றி எல்லாம் அக்கறை செலுத்த வேண்டிய முதல்வர்க்கு, இதைப் பற்றி கவலைபட வேண்டிய முதல்வர் விஜய்க்கு எங்கே நேரம் இருக்கிறது?

தவெக கட்சி ஆரம்பித்த இரண்டு ஆண்டுகளில் தமிழ்நாட்டு முதல்வர் அரியணையில் அமர்ந்துள்ள விஜய் இன்னும் மூன்று ஆண்டுகளில் இந்த நாட்டின் பிரதமர் அரியணையை தான் அலங்கரிக்க வேண்டும் என்ற டிஜிட்டல் பிராண்டிங் திட்டத்திற்காக விஜய் நேரம் போதாமல் இருக்கிறது.

இதில் தவெக ஆட்சி அமைக்க முட்டுக்கொடுத்த காங்கிரஸ் கட்சிதான் தற்போது அதிர்ச்சியில் உறைந்து போய், மனக்கசப்பு அதிகரித்துக் கொண்டிருக்கிறது. தவெக கட்சியின் விசுவாச தற்குறி படைகள் தயாராகிவிட்டது.

இந்தியாவின் பிரதமர் பதவிக்கு விஜய்யை அலங்கரிக்க வேண்டும் என்ற ப்ராஜெக்ட்டை கனக்கச்சிதமாக முடிக்க தற்போது தமிழ்நாட்டில் மூளைச்சலவை செய்வதில் கின்னஸ் சாதனை படைத்த ரூட் மீடியா, வாய்ஸ் ஆஃப் காமன்ஸ், தற்போது வடநாட்டு களத்தில் இறக்கிவிடப்பட்டிருப்பதை உறுதி செய்வதற்காகத்தான் அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின். சட்டசபை பேச்சு வருகின்ற தேர்தலில் தென் நாட்டிலிருந்து இந்தியாவுக்கு பிரதமர் வரவேண்டும் என்று கூறியது.
இந்த டிஜிட்டல் பிளாட்பார்மின் மூளைச்சலவை திட்டத்தின் அதிரடி திட்டத்தின் அரங்கேற்றம் தான் அந்த பேச்சு.

இதில் தமிழ்நாட்டு மக்கள் எக்கேடு கெட்டுப் போனால் எங்களுக்கு என்ன, எங்களுக்கு டிஜிட்டல் பிளாட்பார்ம் மூலம் மக்களை மூளைச்சலவை செய்வதற்கும் ,மூளையை முடக்கிப் போடுவதற்கும் எங்களிடத்திலே டிஜிட்டல் பிளாட்பார்ம் பிராண்டிங் அட்வெர்டைஸ்மென்ட் மீடியா தயாராக இருக்கிறது. தமிழ்நாட்டுக்கு முக்காடு போட்டது போல இந்தியாவிற்கு முக்காடு போட தயாராகிக் கொண்டிருக்கிறது

முதல்வர் விஜய்யின் ஆதரவு படையான ரூட் மீடியா, வாய்ஸ் ஆஃப் காமன்ஸ், காவேரி,மேகதாவது, முல்லை பெரியாறு, பாலாறு ,பெண்கள் பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு ,போதை பொருள் நடமாட்டம், லாக்கப் மரணம் என்று எதைப் பற்றியும் கவலையும் கொள்ளாமல் அக்கறையும் இல்லாமல் இது குறித்து சட்டசபையில் பதிலும் சொல்லாமல் மௌனமொழி பேசி வருகிற முதல்வர் இந்தியாவிற்கு அதிரடி காட்ட தயாராகிவிட்டார்.

அதிர்ஷ்டத்தால் வந்த அரியணைக்கு ஆயுட்காலம் எத்தனை நாட்கள் என்பது பார்ப்போம் அதுவரை பிரதமர் அரியணைக்கான நகர்வுகள் ரூட் மீடியா ,வாய்ஸ் ஆஃப் காமன்ஸ் மூலம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும். பொறுத்திருந்து பார்ப்போம் என கூறினார்.