மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தென்காள் கம்மாய் முனியாண்டிபுரம் பகுதியில் தற்பொழுது அப்பகுதியில் நீரின்றி வறண்டு காணப்படுகிறது. இதனால் புல்களும் முள் செடிகளும் அதிக அளவு அதிக அளவு வளர்ந்து உள்ளது அடிக்கடி இது தீ விபத்து ஏற்படுகிறது.

இதனால் கரும்புகை ஏற்படுவது உடன் அப்பகுதி மக்கள் அச்சத்தில் ஆர்த்தி உள்ளது. இது போன்ற சம்பவம் அடிக்கடி ஏற்படுகிறது. இதே போன்ற நிகழ்வு நேற்று இரவு எட்டு மணி அளவில் தீ விபத்தானது.

மிகப்பெரிய அளவில் ஏற்பட்டது இது குறித்து சம்பவம் அறிந்த திருப்பரங்குன்றம் நிலைய அலுவலர் உதயகுமார் தலைமையிலான தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இது சம்பவம் குறித்து திருநகர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இதுபோன்று நிகழ்வு அடிக்கடி நிகழ்வுதான் இதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.





