திருநெல்வேலி மாநகராட்சி நெல்லை மண்டலம் வார்டு எண் 23 ல் ரூபாய் 40 இலட்சம் மதிப்பீட்டில் புதிய சிமெண்ட் சாலை அமைக்கும் பணியை நெல்லை மண்டல தலைவர் மகேஸ்வரி துவக்கி வைத்தார்.
இந்நிகழ்வில் 23 வது வார்டு மாமன்ற உறுப்பினர் அனார்கலி சுபஹாணி,25 வது வார்டு மாமன்ற உறுப்பினர் த.ராமகிருஷ்ணன் (எ) கிட்டு, 18வது வார்டு மாமன்ற உறுப்பினர் சுப்பிரமணியன், 24வது வார்டு மாமன்ற உறுப்பினர் ரவீந்தர், 22 வது வார்டு மாமன்ற உறுப்பினர் மாரியப்பன், 19 வது வார்டு மாமன்ற உறுப்பினர் அல்லா பிச்சை,21 வது வார்டு மாமன்ற உறுப்பினர் ராஜேஸ்வரி, நெல்லை பகுதி கழக துணை செயலாளர் அப்துல் சுபஹாணி , உதவி செயற்பொறியாளர் லெனின் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.