முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக டெண்டர் முறைகேட்டு விவகாரத்தில் எஸ்.பி.வேலுமணி எதிராக நூறு சதவீதம் வலுவான ஆதாரங்கள் உள்ளது என்று உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்தது. உள்ளாட்சித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் அமைச்சராக இருந்த எஸ்.பி.வேலுமணி கை காட்டும் நபர்களுக்கு ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டதாகவும், அமைச்சரின் சகோதரர்கள், நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள், பினாமிகளின் நிறுவனங்களுக்கு பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஒப்பந்தங்கள் சட்ட விரோதமாக வழங்கப்பட்டதாகவும் குற்றம்சாட்டி அவர் மீது வழக்குப்பதிவு செய்ய திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அதேப்போன்று அறப்போர் இயக்கமும் எஸ்.பி.வேலுமணி மீது வழக்கு தொடர்ந்திருந்தது. இதையடுத்து, வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், அதிமுகவின் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான டென்டர் முறைகேடு வழக்கில் புலன் விசாரணையை முடித்து பத்து வாரங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிட்டு அதுதொடர்பான அனைத்து மனுக்களையும் முடித்து வைத்திருந்தது. இதையடுத்து, இந்த உத்தரவுக்கு எதிராக எஸ்.பி.வேலுமணி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் கடந்த ஜனவரி 6ம் தேதி மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில், கொள்கை ரீதியாக மட்டுமே தான் நடந்து கொண்டதாக தெரிவித்திருந்தார். இதையடுத்து வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி என்.வி.ரமணா அமர்வு, இந்த விவகாரம் தொடர்பாக தமிழக காவல்துறை மற்றும் அறப்போர் இயக்கம் ஆகியோர் பதிலளிக்க வேண்டும் என்று கடந்த மாதம் 7ம் தேதி நோட்டீஸ் பிறப்பித்து வழக்கை இரண்டு வாரத்திற்கு ஒத்திவைத்தது. இந்நிலையில், மேற்கண்ட விவகாரத்தில் தமிழக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜோசப் அரிஸ்டாட்டில் நேற்று உச்ச நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அதில், ‘டெண்டர் முறைகேடு விவகாரத்தை பொருத்தமட்டில் எஸ்.பி.வேலுமணி பொய்யான தகவல்களை உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். அவர் மீதான குற்றச்சாட்டுக்கு நூறு சதவீதம் வலுவான ஆதாரங்கள் உள்ளது. அதனால் தான் இதுதொடர்பான வழக்கை உயர் நீதிமன்றம் விசாரிக்க உத்தரவிட்டுள்ளது. இதில், எஸ்.பி.வேலுமணி மட்டுமில்லாமல் அவருடன் முறைகேட்டில் ஈடுபட்ட 16 பேர் மீது ஆதாரங்கள் உள்ளது. அதனால், இந்த விவகாரத்தில் எஸ்.பி.வேலுமணிக்கு எந்தவித சலுகையும் வழங்காமல் அவரது மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்,’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, எஸ்.பி.வேலுமணி தொடர்பான டெண்டர் முறைகேடு விவகாரத்தில் சீலிடப்பட்ட கவரில் தாக்கல் செய்யப்பட்டுள்ள முதல்கட்ட விசாரணை அறிக்கையை 3 வாரத்தில் சமர்பிக்குமாறு சென்னை உயர் நீதிமன்ற பதிவாளருக்கு உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம் வழக்கு விசாரணையை தள்ளி வைத்தது.
- அதிமுக வெளி நடப்பு என்பது ஒரு சடங்கு -கே.எஸ்.அழகிரிநிதிநிலை அறிக்கையின்போது அதிமுக வெளி நடப்பு குறித்த கேள்விக்கு.அதிமுக வெளி நடப்பு என்பது ஒரு சடங்கு […]
- மதுரை செல்லம்பட்டி அருகே சாலையில் பாலை கொட்டி போராட்டம்மதுரை செல்லம்பட்டி அருகே.பால் கொள்முதல் விலையை உயர்த்தி தரக் கோரி பால் உற்பத்தியாளர்கள் சாலையில் பாலை […]
- ௭ண்ணும் ௭ழுத்தும் கற்றலை போற்றுவோம் விழாமதுரை மாவட்டம் தங்களாச்சேரி கிராமத்தில் உள்ள நடுநிலைப்ள்ளியில் ௭ண்ணும் ௭ழுத்தும் கற்றலை போற்றுவோம் விழா நடைபெற்றது. […]
- ரூ.1000 உரிமைத்தொகையை பெறுவதற்கான தகுதி என்ன? எடப்பாடி பழனிசாமிஇன்று தாக்கல் செய்யப்பட்ட பொதுபட்ஜெடில் அறிவிக்கப்பட்டரூ.1000 உரிமைத்தொகையை பெறுவதற்கான தகுதி என்னவென்று தெரிவிக்கவில்லை என எடப்பாடி […]
- சோழவந்தானில் பங்குனி மாத பிரதோஷ விழா திரளான பக்தர்கள் பங்கேற்புசோழவந்தான் வைகை கரையில் அமைந்துள்ள பிரளய நாதர் சுவாமி சிவன் கோவிலில் பங்குனி மாத பிரதோஷ […]
- விஜய் சேதுபதி நற்பணி இயக்கம் நடத்திய கிரிக்கெட் போட்டிஇன்றைய இளைஞர்களை சீரழிக்கும் செல்போன், மது போதை இவைகளில் இருந்து இளைஞர்களை விடுவிக்கும் விதமாக நடிகர் […]
- திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் சிலம்பம் சுற்றிய மணமக்கள்..!கும்பகோணம் அருகே பாபநாசத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மணமக்கள் சிலம்பம் […]
- தஞ்சாவூரில் இயற்கை மாற்றுப் பொருள் கண்காட்சி..!தஞ்சாவூரில் பிளாஸ்டிக் பொருள்களுக்கு மாறாக இயற்கை மாற்றுப் பொருள் கண்காட்சி நடைபெற்று வருகின்றன.தமிழகத்தில் ஒருமுறை பயன்படுத்தப்படும் […]
- நெல்லையில் ஹெல்மெட் அவசியம் குறித்து விழிப்புணர்வு பேரணி..!நெல்லையில் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.திருநெல்வேலி மாநகர காவல் துறை, கோபாலசமுத்திரம் […]
- 8ம் வகுப்பு மாணவர் ஜம்பிங் ஜாக்ஸ் செய்து உலக சாதனை முயற்சிராஜபாளையத்தை சேர்ந்த 8ம் வகுப்பு மாணவர் மணிகண்டன் தொடர்ச்சியாக இரண்டு மணி நேரம் ஜம்பிங் ஜாக்ஸ் […]
- பேராபத்தை சந்திப்போம்-ரியல் எஸ்டேட் மாநாட்டில் சத்குரு பேச்சு!“குறைந்த நிலப்பரப்பும், அதிகப்படியான மக்கள் தொகையும் கொண்ட நம் நாட்டில் கடந்த காலங்களை போல் கட்டுமானங்கள் […]
- மதுரை மெட்ரோ திட்டம்- எஸ்எம்எஸ் அனுப்பிய தமிழக அரசுமதுரை மக்களுக்கு 8,500 கோடி மதிப்பீட்டில் மெட்ரோ ரயில் திட்டம் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் எஸ்எம்எஸ் மூலமாக […]
- அதானி பற்றி பேசினால் அது தேச துரோகமா.? மதுரை விமான நிலையத்தில் கே எஸ் அழகிரி பேட்டி..மதுரையில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே […]
- இந்தியாவிலேயே அதிக கோயில்கள் கொண்ட மாநிலங்களில்..
முதலிடம் பெற்றுத் திகழ்வது தமிழ்நாடுதான்..!இந்தியாவிலேயே அதிக கோயில்கள் கொண்ட மாநிலங்களில் முதலிடத்தில் இருப்பது தமிழ்நாடுதான் என்பது தமிழர்களுக்கு கிடைத்த பெருமை […] - லைஃப்ஸ்டைல்உடற்பருமனும் அதனைக் குறைக்கும் வழிகளும்: