• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

திருவள்ளுவர் தினம்! மத்திய அமைச்சர்களின் தமிழ் ட்வீட்!

திருவள்ளுவர் தினமான இன்று பிரதமர் மோடி, குடியரசுத் துணை தலைவர் வெங்கையா நாயுடு ஆகியோர் திருவள்ளுவரின் சிறப்பு குறித்து தமிழில் ட்வீட் செய்துள்ளனர்!

ஆண்டு தோறும் தை-2 (ஜன.15) ஆம் தேதி தமிழர்களால் திருவள்ளுவர் தினம் கொண்டாடப்படுகிறது. இதைப் போற்றும் விதமாக பிரதமர் நரேந்திர மோடி தன் டிவிட்டர் பக்கத்தில்,’ திருவள்ளுவர் தினத்தில் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன். அவரது கோட்பாடுகள் அறிவுத்திறன்மிக்க நடைமுறைக்கேற்றவை. பன்முகத்தன்மை & அறிவுசார் ஆழத்திற்காக அவை தனித்து நிற்கின்றன. கடந்த ஆண்டு நான் கன்னியாகுமரியில் எடுத்த திருவள்ளுவர் சிலை & விவேகானந்தர் நினைவகத்தின் காணொலியை பகிர்கிறேன்’ எனத் தமிழில் ட்வீட் செய்துள்ளார்!

இதேபோல், குடியரசுத் துணை தலைவர் வெங்கையா நாயுடு தனது ட்விட்டர் பக்கத்தில், மிகச்சிறந்த தத்துவ அறிஞர், பெரும் ஞானி மற்றும் தமிழ் புலவரான திருவள்ளுவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன்! காலத்தால் அழிக்க முடியாத திருக்குறளை அனைவரும் வாசிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று தமிழில் ட்வீட் செய்துள்ளார்!

திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு மத்திய அமைச்சர்கள் தமிழில் ட்வீட் செய்துள்ளது, இணையத்தில் வைரலாகி வருகிறது!