• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

தெப்பக்குளத்தினை சீரமைக்கும் பணி..,

சுசீந்திரம் தாணுமாலய சுவாமி திருக்கோயில் தெப்பக்குளத்தினை சீரமைக்கும் பணி நடைபெற்று வரும் வேளையில் தொடர் மழை காரணமாக மண் ஈர்ப்பு நிலையில் தொப்பக்குளத்தின் வடக்கு பக்ககரையில் ஒரு பகுதி திடீரெ இடிந்து விழுந்து விட்டது.

இந்தசெய்தினை அறிந்த நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் சேதமடைந்த பகுதியினை பார்வையிட்டு இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்து, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு அவர்களுக்கு தகவல் அளித்து விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை வைத்தார்.
உடன் இணை ஆணையர் ஜாண்சி ராணி, அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய செயலாளர் பாபு சுசீந்திரம் பேரூர் செயலாளர் சுந்தர் மற்றும் திமுக நிர்வாகிகள் அதிகாரிகள் உடனிருந்தனர்.