சென்னை, செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனோ தொற்று எண்ணிக்கை கூடிக்கொண்டு இருக்கிறது. காவல்துறை, சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கண்காணிப்பு பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர் என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் சூழலில், மூன்றாவது அலை துவங்கியது என்று வைத்துக்கொள்ளலாம் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை சைதாப்பேட்டை ஐந்துவிளக்கு அருகே 17வது மெகா தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்த பின்னர் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், டெல்டாவும் ஓமைக்ரானும் சேர்ந்து தற்போது மூன்றாவது அலையாக சுனாமி அலை போல பரவி வருகிறது.
எனவே தொடர்ந்து மக்கள் ஒத்துழைப்பு என்பது தேவை. முக கவசம் அணிந்து தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்.
மாந்தோப்பு ஆண்கள் மற்றும் மாந்தோப்பு பெண்கள் மேல்நிலை பள்ளிகளில் நாளை ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகளுக்கு நாளை தடுப்பூசி போடப்படவுள்ளது. இதனை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைக்கவுள்ளார். இதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் 15 வயதை கடந்த மாணவ மாணவிகளுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும்.
60 வயது கடந்தவர்கள் மற்றும் முன் களபணியாளர்களுக்கு வரும் 10ம் தேதியில் இருந்து பூஸ்டர் தடுப்பூசி செலுத்த திட்டம். 2 தடுப்பூசி செலுத்தி 9 மாத காலம் நிறைவடைந்தவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட இருக்கிறது. ஓமைக்ரான் பாதித்தவர்கள் 5 நாளில் தொற்று பாதிப்பில் இருந்து விடுபடுகிறார்கள். ரெண்டு தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு ஓமைக்ரான் பாதிப்பு ஏற்பட்டால் வீட்டிலிருந்து மருத்துவ சிகிச்சை பெற ஏற்பாடு செய்யப்படும்.
அனைவரும் மருத்துவமனைக்கு வந்தால் தேவையற்ற பதற்றம் ஏற்படும் எல்லோருக்கு ஏ சிம்டம் என்பதால் மருத்துவ சிகிச்சை வீட்டில் இருந்தே பெறலாம். பொதுமக்களின் மருத்துவ ஆலோசனைகளுக்கு மாநகராட்சி சார்பாக 25384520, 46122300 தொலைபேசி எண்கள் வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
- பொதுக்குழு வழக்கின் தீர்ப்பிற்கு பின் முகத்தை காட்டாத இபிஎஸ்…அதிமுக பொதுக்குழு வழக்கின் தீர்ப்பை நேற்று சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியது. அதில் இடைக்கால பொதுச் செயலாளராக […]
- இபிஎஸ்-ன் அடுத்த கட்ட நகர்வு.. அவசர வழக்காக மேல்முறையீடு!!சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அதிமுக பொது குழு தொடர்பான வழக்கை விசாரித்து ஜூலை 11ஆம் தேதி […]
- அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம்.. அழைப்பு விடுத்த ஓபிஎஸ்!!!அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என உத்தரவிடப்பட்ட நிலையில் இணைந்து செயல்படலாம் என ஓ.பன்னீர்செல்வம் சசிகலா […]
- ரெயிலில் குழந்தைகளுக்கு டிக்கெட் வாங்க வேண்டுமா?ரெயிலில் குழந்தைகளுக்கு டிக்கெட் வாங்க வேண்டுமா? என்ற கேள்விக்கு ரெயில்வே அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.ரெயில்களில் பயணம் […]
- மாற்றம் இல்லாத பெட்ரோல், டீசல் விலை..சென்னையில் இன்று (ஆகஸ்ட் 18) ஒரு லிட்டர் பெட்ரோல் 102.63 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த […]
- ஆன்லைன் ரம்மி – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை முக்கிய முடிவுஆன்லைன் ரம்மியை தடைசெய்ய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை ஆலோசனை கூட்டம்ஆன்லைன் ரம்மி விளையாட்டுகளால் உயிரை […]
- இனி பேருந்தில் செல்ல சில்லறை தேவையில்லை… ஒரு க்யூஆர் கோட் போதும்!தமிழக அரசு போக்குவரத்து கழக பேருந்துகளில் தானியங்கி முறையில் பயணச்சீட்டு வழங்கும் முறை அறிமுகம் செய்யப்படவுள்ளதாக […]
- 35 ஆயிரத்தை கடந்த குரங்கு அம்மை பாதிப்புஉலக அளவில் குரங்கை அம்மை பாதித்தோரின் எண்ணிக்கை 35 ஆயிரத்தைகடந்துவிட்டதாக அதிரச்சி தகவல் வெளியாகி உள்ளது.ஆப்பிரிக்க […]
- அழகு குறிப்புகள்மென்மையான சருமத்திற்கு: குழந்தையைப் போல மென்மையான சருமத்தைப் பெறுவதற்கு, 2 ஸ்பூன் கொத்தமல்லி சாறுடன் 2 […]
- சமையல் குறிப்புகள்சோயா உருண்டைக்குழம்பு: தேவையான பொருட்கள்: தாளிக்க :சீரகம் : 1 டீஸ்பூன், கடுகு, உளுந்தம்பருப்பு, சோம்பு […]
- கோத்தபய ராஜபக்சே இலங்கை திரும்புகிறார்இலங்கையில் அந்த நாட்டு மக்கள் நடத்திய போராட்டம் காரணமாக வெளிநாடுகளுக்கு தப்பிச்சென்ற கோத்தபய ராஜபக்சே அடுத்தவாரம் […]
- கிசான் திட்டம்… அடுத்த மாதம் 12ஆம் தவணை..இந்தியாவில் உள்ள ஏழை விவசாயிகளுடைய நலனைக் கருத்தில் கொண்டு PM kisan திட்டத்தின் மூலமாக விவசாயிகளுக்கு […]
- இலக்கியம்நற்றிணைப் பாடல் 19: இறவுப் புறத்து அன்ன பிணர் படு தடவு முதல்சுறவுக் கோட்டன்ன முள் […]
- படித்ததில் பிடித்ததுசிந்தனைத்துளிகள் • “அன்போடு இருங்கள் பிறரை பாராட்டுங்கள்.. இருப்பதை நினைத்து மனமகிழ்வோடு வாழுங்கள்.. வாழ்க்கை மிக […]
- பொது அறிவு வினா விடைகள்சலவைத்தூள் தயாரிக்க பயன்படும் சாதனம் எது?பெக்மென் சாதனம் கற்பூரம் எரியும் போது உருவாகும் வாயு எது?கார்பன் […]