


கரூர் அருகே அரசுப்பள்ளி ஆசிரியர், சுனிதா வில்லியம்ஸ் ஐ வரவேற்று ஓவியம் வரைந்து வாழ்த்து தெரிவித்தார்.
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டம், ஈசநத்தம் பகுதியில் அமைந்துள்ள அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் இடைநிலை ஆசிரியையாக பணியாற்றுபவர் சம்சாத் பானு, உலகளவில் போற்றப்பட்ட விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் ஐ வரவேற்றும், அவரை பாராட்டியும், ஓவியம் வரைந்து அதனை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகின்றது.


