சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டிய அவசியம் என்ன? சவுக்கு சங்கரால் தேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தலா? தமிழ்நாடு அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.
சவுக்கு சங்கரின் தாயார் கமலா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்தது உச்சநீதிமன்றம். சவுக்கு சங்கரை ஏன் இடைக்கால ஜாமினில் விடுவிக்ககூடாது? சவுக்கு சங்கரை விடுவித்தால் பொது ஒழுங்கு கெடும் -என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
“சவுக்கு சங்கர் மீது 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன”. குண்டர் சட்டத்தின் கீழான கைதுக்கு எதிரான விசாரணையை தள்ளிவைத்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம் இருப்பினும், அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட உச்சநீதிமன்றம்
,தமிழ்நாடு அரசு பதில் அளிக்க உத்தரவிட்டு, விசாரணை வரும் 18ஆம் தேதிக்கு வைத்துள்ளது.