டிடி சினிமா ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சார்பில் உருவாகும் புதிய படம் ‘சூரியனும் சூரியகாந்தியும்’.இப்படத்தில் தேசிய விருது பெற்ற அப்புக்குட்டி, ஸ்ரீஹரி, விக்ரம் சுந்தர் ஆகிய மூவரும் கதையின் நாயகர்களாக நடிக்கிறார்கள். ரிதி உமையாள் கதையின் நாயகியாக நடிக்கிறார்.இவர்களுடன் இயக்குநர் சந்தானபாரதி, இயக்குநர் செந்தில்நாதன், குட்டிப்புலி புகழ் ராஜசிம்மன், மங்களநாத குருக்கள், அழகு, சேஷு, மிப்புசாமி, உடுமலை ரவி, ரிந்து ரவி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க, இயக்குநர் ஏ.எல்.ராஜா மிக முக்கியமான வேடம் ஒன்றில் நடிக்கிறார்.திருவாரூர் ராஜா ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு ஆர்.எஸ்.ரவி பிரியன் இசையமைத்திருக்கிறார். வீரசெந்தில்ராஜ் படத்தொகுப்பு செய்ய, மஸ்தான் நடனக் காட்சிகளை வடிவமைத்திருக்கிறார். ஏ.எல்.ராஜா, கவிஞர் செங்கதிர் வாணன் பாடல்கள் எழுத, ஸ்பீடு மோகன் சண்டைக் காட்சிகளை வடிவமைத்துள்ளார். கலை இயக்குநராக ஜெயசீலன் பணியாற்றியுள்ளார். இணைத் தயாரிப்பாளராக டெய்லி குருஜி பணியாற்ற, பத்திரிகை தொடர்பாளர் பணியை கோவிந்தராஜ் கவனிக்கிறார்.
கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குவதோடு, படத்தை தயாரிக்கவும் செய்திருக்கிறார் இயக்குநர் ஏ.எல்.ராஜா. இவர் பார்த்திபன், தேவயானி நடிப்பில் உருவான ‘நினைக்காத நாளில்லை’, ‘தீக்குச்சி’ மற்றும் தெலுங்கில் ‘அக்கிரவ்வா’ ஆகிய படங்களை இயக்கியவர்.சமூகத்தில் நடந்த பல உண்மை சம்பவங்களின் தொகுப்பாக மட்டும் இன்றி, இதுவரை தமிழ் சினிமாவில் வெளியான சாதி படங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு படமாக இப்படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர்.சாதி பாகுபாட்டால் பல்வேறு துறையை சார்ந்த பல திறமையாளர்கள் நசுக்கப்பட்டு புறக்கணிக்கப்படுவதை மையப்படுத்தி எழுதிய கதையில், காதல், காமெடி, ஆக்ஷன் என அனைத்து கமர்ஷியல் அம்சங்களையும் கலந்து சொல்லியிருக்கிறார் இயக்குநர் ஏ.எல்.ராஜா.படம் குறித்து இயக்குநர் ஏ.எல்.ராஜா கூறுகையில், “இந்தப் படத்தில் இடம் பெறும் சம்பவங்கள் அனைத்தும் உண்மை சம்பவங்கள்தான்.பொதுவாக நான் இயக்கும் படங்கள் அனைத்திலும் சமூகத்திற்குத் தேவையான விஷயங்களைத்தான் கமர்ஷியலாக சொல்வேன். ‘தீக்குச்சி’ படத்தில் கல்வியை எப்படி வியாபாரமாக்குகிறார்கள் என்பதை சொல்லியிருந்தேன்.அதேபோல், ’நினைக்காத நாளில்லை’ படத்தில் நட்பு என்றால் எப்படி இருக்க வேண்டும்? காதல் என்றால் என்ன..? என்பதற்கான விளக்கத்தை கொடுத்திருப்பேன்.அதுபோல், இந்த ‘சூரியனும் சூரியகாந்தியும்’ படத்தில் சாதியால் திறமையானவர்கள் எப்படி பாதிக்கப்படுகிறார்கள் என்பதை சொல்லியிருக்கிறேன்.
மதுரை மற்றும் சென்னைதான் படத்தின் கதைக் களம். பொதுவாக தமிழ்ச் சினிமாவில் நாயகர்கள் மதுரையில் இருந்துதான் சென்னைக்கு வருவார்கள். ஆனால், இந்த கதையில் ஹீரோ, சென்னையில் இருந்து மதுரைக்கு செல்வது போல் வைத்திருக்கிறோம்.
கதையின் நாயகனாக நடித்திருக்கும் அப்புக்குட்டி மிக சிறப்பாக நடித்திருக்கிறார். ‘அழகர்சாமியின் குதிரை’ படத்திற்கு பிறகு அப்புக்குட்டிக்கு சரியான வாய்ப்பு கிடைக்கவில்லை என்ற வருத்தம் இருக்கிறது. ஆனால், இந்த படம் அந்த வருத்தத்தை போக்கி அவருக்கு மீண்டும் விருது வாங்கித் தரும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. இயக்குநர் சந்தானபாரதி சாரின் கதாபாத்திரமும் மிக சுவாரஸ்யமானதாகவும், அவர் இதுவரை நடிக்காத வேடமாகவும் இருக்கும்.இந்தப் படத்தை பொருத்தவரை கதைதான் ஹீரோ. வித்தியாசமான கதைக் களத்தில் சாதியை மையப்படுத்திய படமாக இது இருக்கும். தற்போது தமிழ் சினிமாவில் சாதி படங்கள் இயக்குவது ரெண்டாகிவிட்டாலும், இதுவரை வந்த சாதி படங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டு இந்த படம் இருக்கும்.
சாதிப் படங்கள் எடுத்தாலே பல சர்ச்சைகள் எழும். ஆனால் அந்த சர்ச்சைகள் அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமானால் “சாதியே வேண்டாம். அதைத் தூக்கி எறிய வேண்டும்” என்பதுதான் என் கருத்து. அதைத்தான் இந்தப் படத்திலும் சொல்லியிருக்கிறேன்.எல்லோரும் சாதியைப் பற்றிப் பேசும் படங்களை எடுக்கிறார்கள். ஆனால், அதில் “என் சாதி உயர்ந்த சாதி”, “உன் சாதி தாழ்ந்த சாதி” என்றுதான் பேசுகிறார்களே தவிர, அதில் இருக்கும் பாதிப்பு மற்றும் தீர்வு குறித்து பேசுவதில்லை. சாதி என்ற ஒரு விஷயத்தையே தூக்கியெறிந்துவிட்டு மனிதனாக வாழ வேண்டும் என்று சொல்வதுதான் இந்த கதை.சாதியால் இன்றும் பலர் பாதிக்கப்படுகிறார்கள். அதாவது, ஒருவனின் திறமையை பார்ப்பதைவிட அவனுடைய சாதியை பார்க்கும் அளவுக்கு இன்று மக்கள் மனதில் சாதி பிரிவினை வளர்ந்திருக்கிறது.சினிமா துறையில்கூட சாதி பார்த்துதான் படம் கொடுக்கிறார்கள். கதை நல்லா இருக்கா.. இயக்குநர் திறமையானவரா.. என்றெல்லாம் பார்க்காமல் இயக்குநர் என்ன சாதி? என்று கேட்டு அவருக்கு படம் கொடுக்கப்படுகிறது. சினிமாவில் மட்டும் அல்ல.. இந்தப் பிரச்சனை தற்போது அனைத்து துறைகளிலும் அதிகரித்து வருகிறது.அப்படிப்பட்ட சாதி பிரிவினையால் பல்வேறு துறைகளில் பல திறமையானவர்கள் இன்றும் புறக்கணிக்கப்பட்டு வருகிறார்கள், என்ற உண்மையை சொல்வதோடு, சாதியே வேண்டாம் என்பதை வலியுறுத்தும் சமூகத்திற்கு தேவையான ஒரு படமாகவும் இருக்கும்.
சாதிப் பிரச்சனையை மையப்படுத்திய கதை என்றாலும் அதை முழுக்க, முழுக்க நகைச்சுவை உணர்வோடு நகர்த்தி சென்றிருக்கிறேன். சாதி பற்றி பேசினாலும், படத்தின் அடுத்தடுத்த காட்சிகளும், இறுதிக் காட்சியும் ரொம்பவே வித்தியாசமாகவும், யூகிக்க முடியாதபடியும் இருக்கும்.என் படங்களில் வடிவேலு நடித்திருத்திருந்தார். முதல்முறையாக அவர் இல்லாத படமாக இது இருப்பதால் காமெடியை கதையோடு சேர்த்து சொல்லியிருக்கிறேன். திரைக்கதை மற்றும் காட்சிகளை கையாண்ட விதம், எதிர்பார்க்காத கிளைமாக்ஸ் ஆகியவை படத்தை நிச்சயம் ரசிக்க வைக்கும்…” என்றார் நம்பிக்கையுடன்..!மதுரை, தேனி, திண்டுக்கல், மைலம், திருவண்ணாமலை, சென்னை ஆகிய பகுதிகளில், 35 நாட்களில் படமாக்கப்பட்டுள்ள இந்த ‘சூரியனும் சூரியகாந்தியும்’ படத்தின் முழு படப்பிடிப்பும் நிறைவு பெற்று, தற்போது படத்தின் இறுதிக் கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன”
- முதல்வர் , நிதி அமைச்சருக்கு புனித ஜார்ஜ் பேராலயத்தில் சிறப்பு பிரார்த்தனைபேராலயத்திற்கு வளர்ச்சிப் பணிக்காகவும் , சீரமைப்பு பணிக்காகவும் பட்ஜெட் அறிக்கையில் நிதி ஒதுக்கியதற்கு நன்தெரிவிக்கும் விதமாக […]
- 36ஒன்வெப் செயற்கைகோள்களை வெற்றிகரமாக ஏவிய இஸ்ரோஇந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் இஸ்ரோ 36 OneWeb செயற்கைக்கோள்களின் (ISRO 36 OneWeb) இரண்டாவது […]
- இன்று இயற்பியலுக்கான முதலாவது நோபல் பரிசு வென்ற வில்லெம் ரோண்ட்கன் பிறந்த நாள்இயற்பியலுக்கான முதலாவது நோபல் பரிசு வென்ற, எக்ஸ் கதிர்களை கண்டுபிடித்த வில்லெம் ரோண்ட்கன் பிறந்த நாள் […]
- டெல்லியில் சத்தியாகிரக போராட்டம்- தடையை மீறி கார்கே-பிரியங்கா பங்கேற்புஇந்தியா முழுவதும் காங்கிரசார் சத்தியாகிரக போராட்டம்- டெல்லியில் தடையை மீறி கார்கே-பிரியங்கா பங்கேற்புபிரதமர் மோடியை ராகுல்காந்தி […]
- விண்ணில் பாய்ந்தது ‘எல்.வி.எம்3-எம்3 ராக்கெட்’வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த எல்.வி.எம்.3 ராக்கெட் செயற்கைகோள்களை சுற்றுவட்டபாதையில் நிலை நிறுத்தியது.இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் […]
- பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிடுவேன்- ஓ.பன்னீர்செல்வம்அ.தி.மு.க.வில் பழைய விதிகள் தொடர்ந்தால் பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிடுவேன் எனஓ.பன்னீர்செல்வம் அதிரடி அறிவிப்புமயிலாடுதுறை அ.தி.மு.க. ஓ.பி.எஸ். […]
- சோழவந்தான் நகர அரிமா சங்கம் சார்பில் இலவச கண் மருத்துவ முகாம்சோழவந்தான் நகர அரிமா சங்கம் சார்பில்.இலவச கண் மருத்துவ முகாம் நடைபெற்றது.மதுரை மாவட்டம் சோழவந்தானில் நகர […]
- திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் […]
- ‘பருந்தாகுது ஊர்க் குருவி’ – சினிமா விமர்சனம்டிஜிட்டல் மார்க்கெட்டிங் துறையில் முன்னணி நிறுவனமாக வலம் வரும் Lights On Media நிறுவனம், தனது […]
- உலக வலிப்பு நோய் தின விழிப்புணர்வு சைக்கிள் பேரணிஉலக வலிப்பு நோய் தின விழிப்புணர்வு சைக்கிள் பேரணியில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை 500க்கும் […]
- சிறப்பாக பணியாற்றிய தூத்துக்குடி காவல்துறையினர்க்கு பாராட்டுதூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த மாதம் சிறப்பாக பணியாற்றிய 3 காவல் ஆய்வாளர்கள் உட்பட 54 காவல்துறையினர், […]
- மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் நரம்பியல் தீவிர சிகிச்சை பிரிவுதென்னிந்தியாவில் முதன்முறையாக மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் நரம்பியல் தீவிர சிகிச்சை பிரிவு தொடங் கப்பட்டு உள்ளது […]
- பாஜக 99 -ஆவது மனதின் குரல் நிகழ்ச்சி விழிப்புணர்வு பிரச்சாரம்சோழவந்தானில் பாஜக 99 ஆவது மனதின் குரல் நிகழ்ச்சி பிரச்சார விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது.மதுரை மாவட்டம் […]
- மஞ்சூரில் அனைத்து அரசியல் கட்சி சங்கங்கள் கூட்டு நடவடிக்கை குழுகூட்டம்மஞ்சூர் குந்தா வட்டம் அனைத்து அரசியல் கட்சி சங்கங்கள் கூட்டு நடவடிக்கை குழுகூட்டம் மஞ்சூரில் நடைபெற்றதுகுந்தா […]
- நூறு சதவிகிதம் இந்தி மொழியை அமலாக்கம் தொடர்பான சுற்றரிக்கையை திரும்பபெறுக சு. வெங்கடேசன் எம்.பிதென்னக ரயில்வேயின் 169 ஆவது அலுவல் மொழி அமலாக்க குழு கூட்ட சுற்றறிக்கையைப் பார்த்தேன். அதில் […]