ஏழைகளின் அத்தியாவசியக்கனவு ஒரு சொந்தவீடு.எதார்த்தம் புரிந்தவர்கள் அந்தக்கனவை மனசுக்குள் புதைத்துவிட்டு நடமாடிக்கொண்டிருப்பார்கள். ஆனால் குழந்தைகள் அப்படியிருக்காது என்பதைச் சொல்வதோடு அதன் விளைவுகள் குறித்தும் பேசியிருக்கும் படம் ராஜாமகள்.ஏராளமான படங்களில் நாயகனின் நண்பராக வந்து நகைச்சுவை செய்து கொண்டிருந்த ஆடுகளம் முருகதாஸ் இந்தப்படத்தில் நாயகன். கதைக்கேற்றவர். வாடகை வீட்டில் மனைவி மற்றும் ஒரு பெண்குழந்தையுடன் வசிக்கும் அவர் வீட்டில் வறுமை இருக்கிறது. ஆனால் மகள் மீது காட்டும் பாசத்தில் அவர் கோடீசுவரர். மகள் என்ன கேட்டாலும் வாங்கிக் கொடுப்பார்.அந்த மகள் ஒரு பெரியவீட்டை சொந்தவீடாக்கிக் கொள்ள ஆசைப்படுகிறார். அதையும் நிறைவேற்ற முயல்கிறார் முருகதாஸ்.அதனால் என்னவெல்லாம் நடக்கிறது? என்பதைச் சொல்லியிருக்கிறது படம்.முருகதாஸ் நடுத்தரவர்க்கத்தினராக நல்ல கணவராக பாசமிக்க அப்பாவாக ஆகிய எல்லாப்பாத்திரங்களிலும் நிறைவாக இருக்கிறார். கதாநாயகன் என்பவர் கதைக்கேற்றவராக இருக்கவேண்டும் என்பதற்கு இந்தப்படத்தையும் இவர் வேடத்தையும் எடுத்துக்காட்டாகச் சொல்லலாம்.முருகதாசின் மனைவியாக நடித்திருக்கும் பிராங்க்ளினும் நடுத்தரக்குடும்பப் பெண்களைப் பிரதியெடுத்திருக்கிறார்.மகளின் ஆசையையும் கணவரின் தவிப்பையும் சுமந்துகொண்டு அவர் படும்பாடு கலங்க வைக்கிறது.


சிறுமி பிரதிக்ஷாவின் வேடமும் நடிப்பும் சிறப்பு. இந்தச் சின்னவயதில் இவ்வளவு இயல்பாக நடித்திருப்பது பார்ப்போரை வியக்கவைக்கிறது.ஹென்றி.ஐ எழுதி இயக்கியிருக்கிறார். கதையிலும் கதாபாத்திரத் தேர்வுகளிலும் வெற்றி பெற்றிருக்கிறார். மகளுக்கு இவ்வளவு செல்லம் கொடுக்கலாமா? என்று ஆடுகளம் முருகதாஸ் மீது பார்வையாளர்களுக்குக் கோபம் வருவது இயக்குநருக்குக் கிடைக்கும் பாராட்டு எனலாம்.
ஏழைளின் கனவை சொல்கிறது ராஜா மகள்…..
- தூத்துக்குடியில் களவு போன 13 சவரன் தங்க நகைகள் மீட்புதூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வீடு புகுந்து தங்க நகைகளை திருடிய வழக்கில் […]
- தமிழக வேளாண் பட்ஜெட் -மதுரை மாவட்ட மல்லிகை பூ விவசாயிகள் வரவேற்புதமிழக வேளாண் பட்ஜெட்டில் மதுரை மல்லிகைப் பூ விவசாயத்தை மேம்படுத்த அறிவிப்பு வெளியிட்டதற்கு மதுரை மாவட்ட […]
- ஸ்மார்ட் காவலர் செயலியை சிறப்பாக செயல்படுத்தி வரும் காவலர்களுக்கு பரிசுதிருநெல்வேலி மாவட்ட காவல் துறையில் “ஸ்மார்ட் காவலர் செயலியை சிறப்பாக செயல்படுத்தி வரும் காவலர்களுக்கு பரிசு […]
- சத்குருவிற்கு நன்றி சொன்ன பழங்குடி மாணவிகள்“பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கி உள்ள நாங்கள் ஈஷாவின் உதவி இல்லாமல் கல்வி கற்று இருக்க […]
- பழனியில் தங்கும் விடுதிகளை மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வுபழனி முருகன் கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர் பக்தர்கள் பழனியில் தங்கி முருகனை […]
- உலக காடுகள் தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகளை நடவுஉலக காடுகள் தினத்தை முன்னிட்டு உதகை சுபாஷ் சந்திரபோஸ் பூங்காவில் நகராட்சி கமிஷனர் காந்திராஜ் மரக்கன்றுகளை […]
- மத்திய அரசின் நலத் திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு முகாம்நீலகிரி மாவட்டம் உதகை கிழக்கு மண்டல் தும்மனாடா கிராமத்தில் மத்திய அரசின் நலத் திட்டங்கள் குறித்து […]
- தவறான செய்திகளை வெளியிட வேண்டாம் – பவர்ஸ்டார் சீனிவாசன் வேண்டுகோள்புகழேந்தி புரொடக்சன்ஸ் எனும் பட நிறுவனம் மூலம் தமிழரசி புலமைப்பித்தன் தயாரித்து வெளியிடும் திரைப்படம் ‘எவன்’. […]
- மது போதை தாறுமாறாக ஓடிய கார்… பலர் காயம்-மதுரையில் பரபரப்புமதுரை பழங்காநத்தம் பகுதியில் இருந்து இரவு 9:15 மணி அளவில்TN59CL555 என்கின்ற கார் பைபாஸ் சாலையில் […]
- ஆலயங்களின் வழிபாட்டு முறையில் இந்து அறநிலையத்துறை தலையிடக்கூடாது -ஹிந்துஸ்தான் தேசிய கட்சியின் தலைவர் பேட்டி+2 வரை அனைவருக்கும் இலவச கல்வி என்கிற சட்டம் இயற்ற வேண்டும், ஆலயங்களின் வழிபாட்டு முறையிலும், […]
- இன்றைய வேளாண் பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்2023 – 2024 ஆண்டிற்கான பட்ஜெட்டை வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம். கடந்தாண்டை […]
- பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் உண்டியல் எண்ணிக்கைபழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் முதல் நாள் உண்டியல் காணிக்கை 2 கோடியே 91 லட்சத்து […]
- இலக்கியம்நற்றிணைப் பாடல் 141: இருஞ் சேறு ஆடிய கொடுங் கவுள் கய வாய்மாரி யானையின் மருங்குல் […]
- அதிமுக சார்பாக நீர் மோர் பந்தல்- கே.டி. ராஜேந்திர பாலாஜி திறந்து வைத்தார்ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோவில் பூக்குழி திருவிழா அதிமுக சார்பாக நீர் மோர் பந்தலை முன்னாள் […]
- மது பாட்டில் உள்ளே லேபிள்… குடிமகனின் குமுறல் -வைரலாகும் வீடியோமது பாட்டில் உள்ளே லேபிள் கவர்மெண்ட் இப்படி செய்யலாமா? குடிமகனின் குமுறல் – சமூக வலைதளங்களில் […]