• Tue. Aug 4th, 2026
WhatsAppImage2026-07-30at222010
previous arrow
next arrow
Read Now

தேவாலயம் முற்றத்தில் இயேசுவுடன் “செல்ஃபி”பகுதி..,

கன்னியாகுமரியில் அலங்கார உபகார மாதா திருத்தல தேவாலயம்,குமரி பகவதியம்மன் கோவில் இரண்டு இடங்களும் அனைத்து மாநிலத்தை சேர்ந்த சுற்றுலா பயணிகள் வந்து வணங்கும் இடமாக உள்ளது.

தேவாலாயத்தின் முன் நின்று ஏராளமான சுற்றுலா பயணிகள் செல்ஃபி எடுத்துக் கொள்வது அன்றாடம் நிகழ்கிறது.

கன்னியாகுமரி அலங்கார உபகார மாதா அதிபர் அருட்பணி உபால்ட் மற்றும் நிர்வாக குழு, பங்கு பேரவையினர், இறைமக்கள் எல்லோரும் பங்கேற்ற சொலஃபி, பாயிண்டை.

அலங்கார உபகார மாதா திருத்தல அதிபர் அர்ச்சித்து திறந்து வைத்ததுடன்.

இறை இயேசுவின் காக்கும் கரங்களில் மக்கள் என்பதை உணர்த்தும் வகையில் ஆன இயேசுவின் சிலையில் முதல் செல்ஃபியை பங்கு தந்தை உபால்ட் எடுத்து தொடங்கி வைத்தபின் ஏராளமான பேர் இயேசுவின் சிலையுடன் செல்ஃபி எடுத்துக்கொண்டார்கள்.