மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதிகளில் பிஜேபி மதுரை மேற்கு மாவட்ட தலைவர் சசிகுமாரை, பதவி நீக்கம் செய்யக்கோரி அக்கட்சியினர் கண்டனம் தெரிவித்து போஸ்டர் ஒட்டியுள்ளனர்.
பிஜேபிக்கும், பெண்களுக்கும் அவப்பெயரை ஏற்படுத்திய சசிகுமார் மீது நடவடிக்கை எடுத்து அவரை பதவி நீக்கம் செய்யக்கோரி, பிஜேபி கட்சியினரால் அடித்து ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு, பிஜேபி மதுரை மேற்கு மாவட்ட தலைவர் சசிகுமாருக்கும், அவரது மனைவி செல்விக்கும் ஏற்பட்ட குடும்ப பிரச்சனையால், மேலும் சசிக்குமாருக்கும் உசிலம்பட்டி பகுதியைச் சேர்ந்த பிஜேபி பெண் நிர்வாகி ராஜேஸ்வரிக்கும் தொடர்பு இருப்பதாக சசிக்குமாரின் மனைவி செல்வி, திருமங்கலம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள சம்பவமும் சர்ச்சையை ஏற்பட்டுள்ளது.