

ஜெயங்கொண்டம் அடுத்துள்ள ஆண்டிமடம் ஒன்றியத்தில் 78.03 கோடி மதிப்பீட்டில் 10 புதிய வளர்ச்சித் திட்டப் பணிகளை கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தலைமை வகித்தார். எம் எல் ஏகண்ணன் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக
போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் கலந்துகொண்டு துவக்கி வைத்தார். ஆண்டிமடம் ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சித் துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறையின் சார்பில் மருதூர் ஊராட்சியில் நெடுஞ்சாலைத்துறை – நபார்டு மற்றும் கிராம சாலைகள் அலகு சார்பில் ஊராட்சி ஒன்றிய சாலைகளை இதர மாவட்ட சாலைகளாக தரம் உயர்த்துதல் திட்டத்தின் கீழ் 3 கோடியே 40 லஞ்சம் மதிப்பீட்டில் மருதூர் – நாகல்குழி சாலை வரை தரம் உயர்த்துதல், முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 34.67 லட்சம் மதிப்பீட்டில் 1 கி.மீ நீளத்திற்கு மருதூர் தெற்குப்பட்டி சாலை, கொடுக்கூர் ஊராட்சியில் 222.86 லட்சம் மதிப்பீட்டில் 2.63 கி.மீ நீளத்திற்கு கொடுக்கூர் – பொன்பரப்பி சாலை,வல்லம் ஊராட்சியில் 78.62 லட்சம் மதிப்பீட்டில் 1.85 கி.மீ நீளத்திற்கு வல்லம் – அய்யூர் சாலை.
தெற்கு நத்தம் கிராமத்தில்.137.21 இலட்சம் மதிப்பீட்டில் 3.56 கி.மீ நீளத்திற்கு குளத்தூர் – அய்யூர் சாலை, நெடுஞ்சாலைத்துறை – நபார்டு மற்றும் கிராம சாலைகள் அலகு சார்பில் ஊராட்சி ஒன்றிய சாலைகளை இதர மாவட்ட சாலைகளாக தரம் உயர்த்துதல் திட்டத்தின் கீழ் 541.00 லட்சம் மதிப்பீட்டில் ஆண்டிமடம் – தேவனூர் – வாரியங்காவல் சாலை முதல் குவாகம் வரை தரம் உயர்த்துதல். வாரியங்காவல் ஊராட்சியில் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 36.60 லட்சம் மதிப்பீட்டில் 0.66 கி.மீ நீளத்திற்கு எஸ். ஜே சாலை – விருத்தாசலம் ராஸ்தா தெரு வரை சாலை அமைக்கும் பணியினையும், வடுகர்பாளையம் உடையார் தெருவில் 86.71 லட்சம் மதிப்பீட்டில் 2.25 கி.மீ நீளத்திற்கு வடுகர்பாளையம் உடையார் தெரு சாலை. குடிகாடு கிராமத்தில் .123.93 லட்சம் மதிப்பீட்டில் 2.18 கி.மீ நீளத்திற்கு ஜே வி சாலை – குடிகாடு சாலை. கூவத்தூர் ஊராட்சியில் நெடுஞ்சாலைத்துறை (கட்டுமானம் மற்றும் பராமரிப்பு) சார்பில் 62 கோடி மதிப்பீட்டில் விருத்தாசலம் – கும்பகோணம் சாலை (பகுதி – II) அமைக்கும் பணி ஆகிய அனைத்து பணிகளையும் துவக்கி வைத்து மழைக்காலத்திற்குள் தரமானதாக பணிகள் முடிய சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் ஆர்.டி.ஓ பரிமளம், கோட்டப் பொறியாளர் (நபார்டு மற்றும் கிராம சாலைகள் திருச்சி) வடிவேல், நெடுஞ்சாலைத் துறை (கட்டுமானம் மற்றும் பராமரிப்பு) கோட்டப் பொறியாளர் உத்தண்டி, ஊரக வளர்ச்சித் துறை செயற்பொறியாளர் பிரபாகர், நெடுஞ்சாலைத்துறை நபார்டு உதவிக் கோட்டப் பொறியாளர் அரியலூர் சரவணன், உதவி பொறியாளர் ராஜா, உதவி கோட்டப் பொறியாளர் கருணாநிதி, பி டி ஓ ஸ்ரீதேவி ஊராட்சிமன்றத் தலைவர் டேவிட் உட்பட பலர் உடன் இருந்தனர்.
ஜெயங்கொண்டம் அடுத்துள்ள கூவத்தூரில், விருத்தாசலம் கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்றும் இரண்டாம் கட்ட பணியை அமைச்சர் துவக்கி வைத்தார் உடன் கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா, எம்.எல்.ஏ கண்ணன் உட்பட பலர்.
