ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் பேரறிவாளன் உள்ளிட்டோர் விடுதலையை வலியுறுத்தி 11 ஆண்டுகளுக்கு முன்னர் இளம்பெண் செங்கொடி தீக்குளித்து உயிர் தியாகம் செய்தது உலகத் தமிழர்களை பேரதிர்ச்சிக்குள்ளாக்கியது.
அன்று எந்த கனவுகளுக்காக எந்த கோரிக்கைக்காக செங்கொடி தீக்குளித்து மாண்டாரோ இன்று அந்த கோரிக்கை நிறைவேறி பேரறிவாளனுக்கு ஜாமீனில் கிடைத்துள்ளது.
ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த பேரறிவாளன் உள்ளிட்டோர் ஜனாதிபதியிடன் கருணை மனு கொடுத்திருந்தனர். ஆனால் 12 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த கருணை மனுக்கள் மீது ஜனாதிபதிகளாக பதவி வகித்தவர்கள் எந்த முடிவும் எடுக்காமலேயே இருந்தனர்.
2011-ம் ஆண்டு நாட்டின் ஜனாதிபதியாக இருந்த பிரதீபா பாட்டீல் பேரறிவாளன் உள்ளிட்டோர் கொடுத்திருந்த கருணை மனுவை தள்ளுபடி செய்து அறிவித்தார். ஆகஸ்ட் 12-ந் தேதி 7 பேரின் கருணை மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதால் செப்டம்பரில் பேரறிவாளன் உள்ளிட்டோர் தூக்கிலிடப்படுவர் என அறிவிக்கப்பட்டு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதனால் ஒட்டுமொத்த தமிழகமே கொந்தளித்துப் போனது. தமிழகம் முழுவதும் தமிழர் தூக்கை ரத்து செய்யக் கோரி உணர்ச்சிப்பூர்வமான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
இப்போராட்டங்களின் உச்சமாக 2011-ம் ஆண்டு ஆகஸ்ட் 28-ந் தேதி காஞ்சிபுரத்தில் 21 வயது இளம்பெண், காஞ்சி மக்கள் மன்றத்தின் சமூக செயற்பாட்டாளர் பறை இசைக் கலைஞர் என பன்முகம் கொண்ட செங்கொடி தீக்குளித்து தன்னையே மாய்த்துக் கொண்டார். தமிழர்களின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்ற ஒற்றை கோரிக்கைக்காக தமது உயிரையே தீக்கு தாரை வார்த்துக் கொடுத்த செங்கொடியின் தியாகம் உலகம் முழுவதும் தமிழர்களை பேரதிர்ச்சிக்குள்ளாக்கியது.
மொழி ஆதிக்க எதிர்ப்புக்காக, ஈழத் தமிழர்களுக்காக, தமிழர் உரிமை பிரச்சனைகளுக்கு தங்களது தேக்குமர தேகங்களை தின்ன கொடுத்த தமிழகத்தில் இளம் பெண் தம்மையே தீக்கு கொடுத்து அண்ணன்கள் செங்கொடியின் இறுதி பயணத்தில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் பங்கேற்று தங்களது நன்றியைத் தெரிவித்தனர். இந்த செங்கொடியின் நினைவாகவே பேரறிவாளன் ஜோலார்பேட்டை இல்லத்துக்கு செங்கொடி இல்லம் என்றே பெயரிடப்பட்டுள்ளது.
- தூத்துக்குடியில் களவு போன 13 சவரன் தங்க நகைகள் மீட்புதூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வீடு புகுந்து தங்க நகைகளை திருடிய வழக்கில் […]
- தமிழக வேளாண் பட்ஜெட் -மதுரை மாவட்ட மல்லிகை பூ விவசாயிகள் வரவேற்புதமிழக வேளாண் பட்ஜெட்டில் மதுரை மல்லிகைப் பூ விவசாயத்தை மேம்படுத்த அறிவிப்பு வெளியிட்டதற்கு மதுரை மாவட்ட […]
- ஸ்மார்ட் காவலர் செயலியை சிறப்பாக செயல்படுத்தி வரும் காவலர்களுக்கு பரிசுதிருநெல்வேலி மாவட்ட காவல் துறையில் “ஸ்மார்ட் காவலர் செயலியை சிறப்பாக செயல்படுத்தி வரும் காவலர்களுக்கு பரிசு […]
- சத்குருவிற்கு நன்றி சொன்ன பழங்குடி மாணவிகள்“பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கி உள்ள நாங்கள் ஈஷாவின் உதவி இல்லாமல் கல்வி கற்று இருக்க […]
- பழனியில் தங்கும் விடுதிகளை மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வுபழனி முருகன் கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர் பக்தர்கள் பழனியில் தங்கி முருகனை […]
- உலக காடுகள் தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகளை நடவுஉலக காடுகள் தினத்தை முன்னிட்டு உதகை சுபாஷ் சந்திரபோஸ் பூங்காவில் நகராட்சி கமிஷனர் காந்திராஜ் மரக்கன்றுகளை […]
- மத்திய அரசின் நலத் திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு முகாம்நீலகிரி மாவட்டம் உதகை கிழக்கு மண்டல் தும்மனாடா கிராமத்தில் மத்திய அரசின் நலத் திட்டங்கள் குறித்து […]
- தவறான செய்திகளை வெளியிட வேண்டாம் – பவர்ஸ்டார் சீனிவாசன் வேண்டுகோள்புகழேந்தி புரொடக்சன்ஸ் எனும் பட நிறுவனம் மூலம் தமிழரசி புலமைப்பித்தன் தயாரித்து வெளியிடும் திரைப்படம் ‘எவன்’. […]
- மது போதை தாறுமாறாக ஓடிய கார்… பலர் காயம்-மதுரையில் பரபரப்புமதுரை பழங்காநத்தம் பகுதியில் இருந்து இரவு 9:15 மணி அளவில்TN59CL555 என்கின்ற கார் பைபாஸ் சாலையில் […]
- ஆலயங்களின் வழிபாட்டு முறையில் இந்து அறநிலையத்துறை தலையிடக்கூடாது -ஹிந்துஸ்தான் தேசிய கட்சியின் தலைவர் பேட்டி+2 வரை அனைவருக்கும் இலவச கல்வி என்கிற சட்டம் இயற்ற வேண்டும், ஆலயங்களின் வழிபாட்டு முறையிலும், […]
- இன்றைய வேளாண் பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்2023 – 2024 ஆண்டிற்கான பட்ஜெட்டை வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம். கடந்தாண்டை […]
- பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் உண்டியல் எண்ணிக்கைபழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் முதல் நாள் உண்டியல் காணிக்கை 2 கோடியே 91 லட்சத்து […]
- இலக்கியம்நற்றிணைப் பாடல் 141: இருஞ் சேறு ஆடிய கொடுங் கவுள் கய வாய்மாரி யானையின் மருங்குல் […]
- அதிமுக சார்பாக நீர் மோர் பந்தல்- கே.டி. ராஜேந்திர பாலாஜி திறந்து வைத்தார்ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோவில் பூக்குழி திருவிழா அதிமுக சார்பாக நீர் மோர் பந்தலை முன்னாள் […]
- மது பாட்டில் உள்ளே லேபிள்… குடிமகனின் குமுறல் -வைரலாகும் வீடியோமது பாட்டில் உள்ளே லேபிள் கவர்மெண்ட் இப்படி செய்யலாமா? குடிமகனின் குமுறல் – சமூக வலைதளங்களில் […]