உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் தாக்குதல்களில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். லட்சக்கணக்கானோர் வீடுகளையும் உடைமைகளையும் பறிகொடுத்து தவித்து வருகின்றனர்.
இந்த சூழலில் ரஷ்ய டாங்கிகள் உக்ரைன் தலைநகர் கீவை நெருங்கி இருக்கின்றன. கடந்த 5 நாட்களில் மட்டும் கீவை நோக்கி 80 கி.மீ தொலைவு வரை ரஷ்ய படைகள் முன்னேறி இருக்கின்றன.
எப்போது குண்டு விழும்? போரின் முடிவில் நாம் உயிர் பிழைப்போமா? பழைய அமைதியான வாழ்க்கை நமக்கு கிடைக்குமா? நமது குடும்பத்தினர், நண்பர்கள் உயிரோடு இருப்பார்களா? என்பன போன்ற மில்லியன் டாலர் கேள்விகளோடும் அச்சத்தோடும் நாட்களை கடத்தி வருகின்றனர் உக்ரைன் மக்கள். அங்கு நிலவும் போர் பதற்றத்தின் தீவிரத்தை கீழ்காணும் சில சம்பவங்களும், உரையாடல்களும் உங்களுக்கு உணர்த்தும்.
அது ஒரு ஆள்நடமாட்டம் இல்லாத சேவை மையம்… தலைநகர் கீவிலிருந்து வடகிழக்கு திசை நோக்கிய சாலையோரம் அமைந்துள்ளது. அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள உக்ரைன் அதிகாரி, அவ்வழியாக வாகனத்தில் செல்லும் ஓட்டுநரிடம், “இதற்கு மேல் செல்லாதே… அங்கு ரஷ்ய படையினர் உள்ளார்கள். ரஷ்யாவின் டாங்கிகள் வெறும் 2 கி.மீ. தூரத்தில்தான் உள்ளன. வாகனத்தை திருப்பிக்கொண்டு வந்த வழியில் சென்றுவிடு… ரஷ்யாவின் தாக்குதல்களில் இருந்து தப்பிக்க ZIG ZAG கோணத்தில் வாகனத்தை ஓட்டிச் செல்…” என அறிவுறுத்துகிறார். அதன் பின்னர் தனது பணிக்கு திரும்பும் அந்த உக்ரைன் அதிகாரி, ரஷ்ய டாங்கிகள் கீவை நோக்கி நெருங்கிவிட்டதாக எச்சரிக்கை விடுக்கிறார்.
கீவுக்கு அருகே உள்ள கிராமம் வெலிகா டைமெர்கா… “போர் தொடங்கியவுடன் அங்கிருந்த பெரும்பாலான பெண்கள் மற்றும் குழந்தைகள் வேறு பகுதிகளுக்கு தப்பிச் சென்றுவிட்டனர். ஆண்கள் மட்டுமே அங்கு எஞ்சி இருக்கிறார்கள்.” எனக்கூறுகிறார் அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வரும் தன்னார்வலரான ஒலெக்.
“2 நாட்களுக்கு முன்புதான் கீவுக்கு அருகேயுள்ள செவ்சென்கோவ் மற்றும் போடனிவ்கா ஆகிய கிராமங்களை ரஷ்யா தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது. செவ்வாய்கிழமை ரஷ்யா எங்கள் மீது தாக்குதல் நடத்தியது. ஏவுகனைகள் எங்களை நோக்கி விழுந்தன.” என வேதனையுடன் கூறுகிறார் அவர்.
“ரஷ்யா நடத்திய தாக்குதலில் இங்கிருந்த எங்களின் 2 மாடி வீடு இடிந்து விழுந்தது. என் தந்தையும் தாயும் பாதுகாப்பான இடத்துக்கு தஞ்சம் புகுந்ததால் உயிர் பிழைந்தனர்” என கண்கலங்குகிறார் வாடிம் என்ற கிராமவாசி.
“இன்று இந்த ஊர் அமைதியாக இருக்கிறது… நேற்று அப்படியில்லை… 40 டாங்கிகள் உட்பட 70 வாகனங்களுடன் 300 ரஷ்ய வீரர்கள் நேற்று இந்த கிராமத்துக்குள் புகுந்தனர். அவர்கள் வீடுகளை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினர். அப்பாவிகளை அச்சுறுத்தினர். கையில் கிடைத்ததையெல்லாம் திருடிச் சென்றனர்.” எனக் கூறுகிறார் யுரி என்ற நாய் பயிற்சியாளர். மேற்குலக நாடுகளின் உதவி உக்ரைனுக்கு அவசியம் தேவைப்படுகிறது என அவர் கேட்டுகொண்டார்.
ரஷ்யாவின் தாக்குதல்களை எதிர்கொள்ள உக்ரைன் பொதுமக்களுக்கு ராக்கெட் லாஞ்சர்களை பயன்படுத்தும் விதம் குறித்து சில ராணுவ வீரர்கள் பயிற்சியளித்துக் கொண்டிருந்தனர். அந்த பயிற்சியில் பங்கேற்றுள்ள ஒலெக்சியிடம், இந்த கிராமத்தை ரஷ்ய படையினர் ஆக்கிரமித்தால் என்ன செய்வீர்கள்? என செய்தியாளர் கேள்வி எழுப்புகிறார். “50க்கு 50” என்ற பதில் மட்டுமே அவரிடமிருந்து வருகிறது… சோகம் கலந்த சிரிப்புடன்.
தலைநகர் கீவிலிருந்து சில கிலோ மீட்டர் தொலையில் உள்ள சிறிய நகரம் ப்ரோவரி… கிழக்கு திசையிலிருந்து கீவுக்குள் நுழைய இதை கடக்க வேண்டும். அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள 22 வயது உக்ரைன் ராணுவ வீரர் லாடிஸ்லாவ் கூறுகையில், “ரஷ்ய படையினரிடம் உணவு மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அவர்கள் மண்டியிட்டுள்ளனர். எனவே குண்டுவீசி இதை முடிக்க முயல்வார்கள்.” என்கிறார். இதுகுறித்து ராணுவ உயர் அதிகாரி சுலிம் தெரிவிக்கையில், “ரஷ்ய படைகள் தொடர்ந்து முன்னேறுவார்கள். ஆனால், ரஷ்ய அதிகாரிகள் மனநிலையில் மாற்றம் தென்படுகிறது. ஏதாவது நடக்கும் என்ற எதிர்பார்ப்பு சிறிதளவு உள்ளது.” என்கிறார் நம்பிக்கையுடன்.
- தூத்துக்குடியில் களவு போன 13 சவரன் தங்க நகைகள் மீட்புதூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வீடு புகுந்து தங்க நகைகளை திருடிய வழக்கில் […]
- தமிழக வேளாண் பட்ஜெட் -மதுரை மாவட்ட மல்லிகை பூ விவசாயிகள் வரவேற்புதமிழக வேளாண் பட்ஜெட்டில் மதுரை மல்லிகைப் பூ விவசாயத்தை மேம்படுத்த அறிவிப்பு வெளியிட்டதற்கு மதுரை மாவட்ட […]
- ஸ்மார்ட் காவலர் செயலியை சிறப்பாக செயல்படுத்தி வரும் காவலர்களுக்கு பரிசுதிருநெல்வேலி மாவட்ட காவல் துறையில் “ஸ்மார்ட் காவலர் செயலியை சிறப்பாக செயல்படுத்தி வரும் காவலர்களுக்கு பரிசு […]
- சத்குருவிற்கு நன்றி சொன்ன பழங்குடி மாணவிகள்“பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கி உள்ள நாங்கள் ஈஷாவின் உதவி இல்லாமல் கல்வி கற்று இருக்க […]
- பழனியில் தங்கும் விடுதிகளை மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வுபழனி முருகன் கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர் பக்தர்கள் பழனியில் தங்கி முருகனை […]
- உலக காடுகள் தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகளை நடவுஉலக காடுகள் தினத்தை முன்னிட்டு உதகை சுபாஷ் சந்திரபோஸ் பூங்காவில் நகராட்சி கமிஷனர் காந்திராஜ் மரக்கன்றுகளை […]
- மத்திய அரசின் நலத் திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு முகாம்நீலகிரி மாவட்டம் உதகை கிழக்கு மண்டல் தும்மனாடா கிராமத்தில் மத்திய அரசின் நலத் திட்டங்கள் குறித்து […]
- தவறான செய்திகளை வெளியிட வேண்டாம் – பவர்ஸ்டார் சீனிவாசன் வேண்டுகோள்புகழேந்தி புரொடக்சன்ஸ் எனும் பட நிறுவனம் மூலம் தமிழரசி புலமைப்பித்தன் தயாரித்து வெளியிடும் திரைப்படம் ‘எவன்’. […]
- மது போதை தாறுமாறாக ஓடிய கார்… பலர் காயம்-மதுரையில் பரபரப்புமதுரை பழங்காநத்தம் பகுதியில் இருந்து இரவு 9:15 மணி அளவில்TN59CL555 என்கின்ற கார் பைபாஸ் சாலையில் […]
- ஆலயங்களின் வழிபாட்டு முறையில் இந்து அறநிலையத்துறை தலையிடக்கூடாது -ஹிந்துஸ்தான் தேசிய கட்சியின் தலைவர் பேட்டி+2 வரை அனைவருக்கும் இலவச கல்வி என்கிற சட்டம் இயற்ற வேண்டும், ஆலயங்களின் வழிபாட்டு முறையிலும், […]
- இன்றைய வேளாண் பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்2023 – 2024 ஆண்டிற்கான பட்ஜெட்டை வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம். கடந்தாண்டை […]
- பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் உண்டியல் எண்ணிக்கைபழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் முதல் நாள் உண்டியல் காணிக்கை 2 கோடியே 91 லட்சத்து […]
- இலக்கியம்நற்றிணைப் பாடல் 141: இருஞ் சேறு ஆடிய கொடுங் கவுள் கய வாய்மாரி யானையின் மருங்குல் […]
- அதிமுக சார்பாக நீர் மோர் பந்தல்- கே.டி. ராஜேந்திர பாலாஜி திறந்து வைத்தார்ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோவில் பூக்குழி திருவிழா அதிமுக சார்பாக நீர் மோர் பந்தலை முன்னாள் […]
- மது பாட்டில் உள்ளே லேபிள்… குடிமகனின் குமுறல் -வைரலாகும் வீடியோமது பாட்டில் உள்ளே லேபிள் கவர்மெண்ட் இப்படி செய்யலாமா? குடிமகனின் குமுறல் – சமூக வலைதளங்களில் […]