உத்தரப்பிரதேச மாநிலம், அமேதியில் 16 வயது பட்டியலின சிறுமி ஒருவர் மிகக் கொடூரமாகத் தாக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்தச் சம்பவம் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானியின் தொகுதியில் நடந்திருப்பது தங்களுக்கு அதிர்ச்சியளிப்பதாகக் குழந்தைகள் நல ஆர்வலர்கள் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வைரல் வீடியோவில், இரண்டு பேர் சிறுமி ஒருவரைத் தரையில் வைத்துப் பிடித்திருக்கின்றனர். மூன்றாவது நபர் ஒருவர் தடியால் சிறுமியின் உள்ளங்காலில் தொடர்ந்து அடிக்கிறார். வலியால் அலறித் துடித்த அந்தச் சிறுமி அவர்களிடம் கெஞ்சுகிறார். ஆனால், அதைக் காதில் வாங்கிக் கொள்ளாதவர்கள், அவரை தொடர்ந்து கொடூரமாகத் தாக்குகிறார்கள். இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், அந்தச் சிறுமி தாக்கப்பட்டதன் பின்னணி தற்போது தெரியவந்திருக்கிறது. அந்த நபர்களால் தாக்கப்பட்ட சிறுமி, பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்றும், அவரை அந்த நபர்கள் மொபைல் போன் திருடிய குற்றத்துக்காகத் தாக்கியதாகவும் கூறப்படுகிறது.
ஆனால், ஒருதரப்பினர் சிறுமி பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவர் மீது மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த சிலர் வீண்பழி சுமத்தி, தாக்கியதாகக் கூறிவருகின்றனர். இந்த நிலையில், இந்தச் சம்பவத்துக்கு பல்வேறு தரப்பினரும் தங்கள் கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.
சிறுமி தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், அமேதி காவல்துறையினர் சிறுமியைத் தாக்கியவர்கள் மீது வழக்கு பதிவு செய்திருக்கின்றனர். இது தொடர்பாக அமேதி காவல்துறையினர் தங்களின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “சிறுமியைத் தாக்கியவர்கள் மீது போக்சோ, எஸ்.சி / எஸ்.டி சட்டங்களின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளான சூரஜ் சோனி, சிவம், சகால் ஆகியோர் விரைவில் கைது செய்யப்படுவார்கள்” என்று பதிவிட்டிருக்கிறது.
- விருதுநகர் சந்தையில் பருப்பு விலை உயர்வுகர்நாடக உள்ளிட்ட வெளி மாநிலங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக விருதுநகர் சந்தையில் பருப்பு விலை […]
- எம்ஜிஆர் – ஜெயலலிதா எண்ணம் உறுதியாக நிறைவேறும் -ஓபிஎஸ்அதிமுகவை மாபெரும் இயக்கமாக மாற்றிய எம்.ஜி.ஆர், ஜெயலலிதா எண்ணம் உறுதியாக நிறைவேறும் என மதுரை விமான […]
- மாநிலங்களவை இன்றுடன் நிறைவுமாநிலங்களவை அறிவிக்கப்பட்ட தேதிக்கு 4 நாட்கள் முன்னதாகவே நிறைவு பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.மழைக்கால கூட்டத்தொடரின் மாநிலங்களவை இன்றுடன் […]
- பொறியியல் கலந்தாய்வு வரும் 25-ம் தேதி முதல் தொடங்கும் – அமைச்சர் பொன்முடிதமிழகத்தில் பொறியியல் கலந்தாய்வு வரும் 25ம் தேதி முதல் தொடங்கும் என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.தமிழகத்தில் […]
- சமூக சேவகர் ஆர்.வி. மகேந்திரன் –க்கு சிறந்த மக்கள் சேவைக்கான டாக்டர் பட்டம் …மக்கள் சேவையில் சிறப்பாக பணியாற்றயதற்காக மகேந்திரன் அவர்களுக்கு சிறந்த மக்கள் சேவைக்கான டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. […]
- சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு தேசியக்கொடி வழங்கிய அர்ஜூன் சம்பத்…சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு சுவாமி தரிசனத்திற்காக வந்த இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் […]
- மதுரையில் சமூநீதி மாநாட்டில் முதல்வருக்கு கோரிக்கை..மதுரையில் நேற்று நடந்த சமூநீதி மாநாட்டில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அரசு சமூகநீதியை உண்மையாக […]
- கருணாநிதியின் கொள்கைகளை அவரது பேரன் உதயநிதி கைவிட்டுவிட்டார் – அண்ணாமலைகருணாநிதி கொள்கையை கைவிட்ட அவரது பேரன் உதயநிதி ஸ்டாலின் அண்ணாமலை கிண்டல் டுவிட்டர்தமிழக பா.ஜனதா தலைவர் […]
- மாடுகளுக்கு ஏற்பட்டுள்ள வித்தியாசமான நோய்… உரிமையாளர்கள் அதிர்ச்சி!ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் மாடுகள் வித்தியாசமான நோயினால் பாதிக்கப்பட்டு இறந்து வரும் சம்பவம் அதிர்ச்சியை […]
- வெளியானது ஜே.இ.இ. மெயின் தேர்வு முடிவுகள்…ஜே.இ.இ. மெயின் தேர்வு 2-வது அமர்வின் முடிவுகளை இன்று தேசிய தேர்வு முகமை வெளியிட்டது. தேசிய […]
- தியான நிலையில் இபிஎஸ்… ஓபிஎஸ்-ஐ மிஞ்சிடுவார் போல..அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமி, பழனி முருகன் கோயிலில் சிறப்பு பூஜையில் பங்கோற்றுள்ளார். […]
- உலகப்போரில் வீசப்பட்ட குண்டு இத்தாலியில் மீட்பு…இரண்டாம் உலகப்போரின் போது வீசப்பட்ட வெடிகுண்டு ஒன்று 70 ஆண்டுகளுக்கு பிறகு இத்தாலியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 1942ல் […]
- சீதாராமம் – விமர்சனம்தனது தாத்தா கொடுத்த கடிதம் ஒன்றை இந்தியாவில் இருக்கும் சீதா மகாலட்சுமியிடம் (மிருனாளின் தாக்கூர்) கொடுக்க […]
- ஆளுநரிடம் அரசியல் குறித்துப் பேசிய நடிகர் ரஜினிகாந்த்..,தமிழக ஆளுநரை சந்தித்து நடிகர் ரஜினிகாந்த் அரசியல் குறித்துப் பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தமிழகம் […]
- விடியல் ஆட்சியை வீட்டிற்கு அனுப்ப நேரம் வந்துவிட்டது-இபிஎஸ்அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமி, பழனி முருகன் கோயிலில் சிறப்பு பூஜையில் கலந்து […]