திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் லியோ படம் வெற்றி பெற வேண்டி அர்ச்சனை செய்து அன்னதானம் வழங்கிய ரசிகர்கள்.
மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் லியோ படம் வெற்றி பெற வேண்டி விஜய் ரசிகர்கள் அர்ச்சனை செய்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ திரைப்படம் நாளை மறுநாள் திரையரங்கில் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு உச்சகட்டை எதிர்பார்ப்பு இருந்து வரும் நிலையில் படத்தின் பிரமோஷன் வேலைகள் பரபரப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் திருப்பரங்குன்றம் நகர் மாணவர் அணி சார்பாக விஜயின் லியோ படம் வெற்றி பெற வேண்டி திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் அர்ச்சனை செய்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கிய விஜய் மக்கள் இயக்கத்தினர் மதுரை முத்துப்பாண்டி ஏற்பாட்டில் விஜய் மக்கள் இயக்க மதுரை தெற்கு மாவட்ட மாணவர் அணி தலைவர் யு.பி.எம்.ஆனந்த் தலைமையில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.