ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் 1947ஆம் ஆண்டு இந்திய பிரிவினையின்போது ஏற்பட்ட குழப்பத்தில் பிரிந்து சென்று, சுமார் 74 ஆண்டுகளுக்குப் பின் தற்போது இணைந்துள்ள நெகிழ்ச்சியான சம்பவம் நடந்தேறியுள்ளது.
பாகிஸ்தானின் கர்தார்பூரில் உள்ள குருத்வாரா தர்பார் சாஹிப் வளாகத்தில், இந்த உணர்வுப்பூர்வ சந்திப்பு நடந்துள்ளது. பஞ்சாபி செய்தி சேனலில் வெளியான தகவலை அடிப்படையாகக் கொண்டு, பிரிந்து சென்று இரண்டு குடும்பங்களும் ஒருவரை ஒருவர் அடையாளம் கண்டு, 74 ஆண்டுகளுக்குப் பின் இணைவதற்கு கர்தார்ப்பூர் வளாகம் நிலையான சாட்சியாக அமைந்திருந்தது.
நங்கனா மாவட்டத்திலிருந்து இதற்காக, ஷாஹித் ரஃபீக் மித்து, தனது 40 பேர் கொண்ட குடும்ப உறுப்பினர்களுடன் கர்தார்பூர் வந்திருந்தார். பஞ்சாப் மாநிலம் அமிருதசரசைச் சேர்ந்த ஷாஹ்பூர் தோக்ரானில் வசித்து வந்த சோனோ மிது, தனது 8 பேர் கொண்ட குடும்பத்துடன் அங்கு வந்திருந்தார்.
பிரிந்த போது பார்த்துக் கொண்ட முதல் தலைமுறை உறவினர்களுடன் தற்போது இரண்டாம் தலைமுறை உறவுகளும் என இரண்டு குடும்ப உறுப்பினர்களும் ஒருவரை ஒருவர் பார்த்து கட்டியணைத்து, உணர்ச்சிப் பெருக்கால் கண்ணீர் விட்டு அழுத காட்சி, பார்ப்போரின் கண்களையும் ஈரமாக்கியது.
1947 பிரிவினையின் போது, ஷாஹித் ரஃபீக் பாகிஸ்தானுக்கும், அவரது சகோதரர் இக்பால் பஞ்சாப்பிலும் தங்கிவிட்டனர். ஒரு செய்தி சேனலில் ஷாஹித் ரஃபீக், பிரிவினை காலம் குறித்த அனுபவங்களை நேர்காணலில் சொன்னதைப் பார்த்த அவரது சகோதரர்கள், பல்வேறு கட்ட முயற்சிகளின் நிறைவாக சந்தித்துக் கொண்டுள்ளனர். இரு குடும்பத்தினரும் தங்களது பழைய கதைகளை பரிமாறிக் கொள்ளவும், புதிய கதைகளை பேசி முடிக்கவும் இன்னும் சில ஆண்டுகள் ஆகும் என்று கருதப்படுகிறது.
Christian families uniting at a Gurdawara after 75 years. Such a beautiful and heart warming scene. Kartarpur has become icon of love & peace. #KartarpurCorridor #Pakistan #India pic.twitter.com/nNtECjE8Hx
— Zaigham (@aviramza) February 19, 2022
- இனி ரேஷன் கடைகளிலும் ‘மீண்டும் மஞ்சள் பை’…தமிழக முதல்வர் ஸ்டாலின் கடந்த சில நாட்களுக்கு முன் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்கக்கூடிய வகையில் ‘மீண்டும் […]
- ஒராண்டில் திமுக எந்த சாதனையும் செய்யவில்லை- பிரேமலதா விஜயகாந்த் பேட்டிகோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வருகை தந்த பிரேமலாத விஜயகாந்த் திமுக அரசு கடந்த ஒராண்டில் […]
- சார்ஜிங் பூத்… ஆப் மூலம் பணம் செலுத்தி சார்ஜிங் செய்துக்கொள்ளலாம்…கேரளா மாநிலம், கோட்டயம் அடுத்த உழவூர் ஊராட்சியில் மின்சார வாகனங்களை சார்ஜ் செய்ய மின்கம்பத்தில் சார்ஜிங் […]
- மரம் அறுக்கும் ரம்பத்தால் மனைவி,பிள்ளைகளை கொலை செய்த ஐடி ஊஉழியர் தற்கொலைசென்னையில் பயங்கரம் மரம் அறுக்கும் ரம்பம் வாங்கி மனைவி, பிள்ளைகளின் கழுத்தை அறுத்து கொலை செய்த […]
- ஏழுமலையானை தரிசிக்க 15 மணிநேரம் காத்திருக்கும் பக்தர்கள்..திருப்பதியில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் தரிசனத்துக்காக 15 மணி நேரம் காத்திருப்புஉலகப்புகழ் பெற்ற எழுமலையான் கோயிலில் […]
- கழுகுமலையில் ரேசன் அரிசி பதுக்கல் -4 பேர் கைதுகழுகுமலையில் ரேசன் அரிசி பதுக்கி விற்பனை செய்த மில் உரிமையாளர் உள்பட 4 பேர் கைது. […]
- தமிழக காங்கிரசுக்கு அடுத்த தலைவர் விஜயதாரணியா -ஜோதிமணியா?தமிழக காங்கிரசில் மாநில தலைவர் பதிவிக்கு அடுத்து பெண் ஒருவருக்கு வாய்ப்பு கொடுக்கபடலாம் என்று பேசப்படுகிறது. […]
- முதல்வரின் குரல் பாஜகவுக்கு பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது..மதுரையில் நடைபெற்ற பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியின் போது திராவிடர் விடுதலைக் கழகம் […]
- சிரித்த முகத்துடன் பிறந்த அதிசய குழந்தை…. வைரலாகும் புகைப்படங்கள்…ஆஸ்திரேலியாவில் ஒரு குழந்தை எப்போதும் சிரித்துக்கொண்டிருப்பது போன்ற முக அமைப்புடன் பிறந்திருக்கிறது.உலக நாடுகளில் ஒவ்வொரு நாளும் […]
- சாண்ட்விச் தான் உணவே… 23 ஆண்டுகளாக சாண்ட்விச் சாப்பிட்ட இளம்பெண்..இங்கிலாந்தில் கடந்த 23 ஆண்டுகளாக இளம்பெண் ஒருவர் சாண்ட்விச் மட்டுமே சாப்பிட்டு உயிர்வாழ்ந்து வரும் சம்பவம் […]
- இதை செய்யாவிட்டால் ரேஷனில் பொருள் வாங்க முடியாது.ஜூன் 30-ம் தேதிக்குள் ரேஷன் கார்டுடன் ஆதார் கார்டை இணைக்காவிட்டால் ரேஷன் பயன்களைப் பெற முடியாது […]
- திமுக ஆலோசனைக் கூட்டம்… முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்…சென்னை அறிவாலயத்தில் இன்று முதல்வர் ஸ்டாலின் தலைமையில் திமுகவின் மாவட்ட செயலாளர் கூட்டம் நடைபெற்றது. இந்த […]
- 79,000 மாணவ,மாணவிகளுக்கு பணி நியமன ஆணைகள்முதலமைச்சர்உத்தரவின் கீழ் தமிழகம் முழுவதும் அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் நடைபெற்று வரும் தனியார் துறையின் […]
- சொதி:தேவையானவை: பாசிப்பருப்பு – 200 கிராம், உருளைக்கிழங்கு, சின்ன வெங்காயம் – தலா 200 கிராம், […]
- புத்துணர்வு தரும் ஏற்காடு கோடை விழா…கடந்த இரண்டு ஆண்டுகளாக நடத்தப்படாமல் இருந்த ஏற்காடு கோடைவிழா மே 25 தொடங்கி ஜூன் 1 […]