தமிழ் திரைப்படதயாரிப்பாளர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுக்க ஏப்ரல் 30 அன்று சென்னையில் தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் தற்போதைய தலைவர் முரளி ராமசாமி தலைமையில் ஓர் அணியும், தற்போதைய செயலாளர் மன்னன் தலைமையில் ஓர் அணியும் போட்டியிடுகின்றன. மன்னன் தலைமையிலான தயாரிப்பாளர்கள் உரிமை காக்கும் அணி சார்பாக போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் சென்னை வடபழநியில் உள்ள கீரீன்பார்க் ஹோட்டலில் நேற்று மாலை நடைபெற்றது.

மூத்த தயாரிப்பாளர், இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், தயாரிப்பாளர் ஹென்றி, நடிகை தேவயானி, மற்றும் 400க்கும் மேற்பட்ட தயாரிப்பாளர்கள் கலந்துகொண்டனர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து பேசிய எஸ்.ஏ.சந்திரசேகர் சிறுபட தயாரிப்பாளர்களின் உரிமை காக்க வேண்டும் என்றால் இந்த தேர்தலில் மன்னன் தலைமையிலான அணி வெற்றிபெற வேண்டும். கார்ப்பரேட் நிறுவனங்கள் சங்கத்தை கைப்பற்ற பணத்தை வாரி இறைக்கின்றனர். இந்தப்போக்கு தடுக்கப்பட வேண்டும் என்றார். கடந்த தேர்தலில் துணை தலைவர் பதவிக்கு போட்டியிட்டு சில வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிவாய்ப்பை இழந்த P.T.செல்வகுமார் நடைபெறவுள்ள தேர்தலில் செயற்குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுகின்றார்.
எஸ்.ஏ.சந்திரசேகரிடம் அலுவலக உதவியாளர், புகழ்பெற்ற சினிமா பத்திரிகையான ஜெமினி சினிமா செய்தியாளர், ஆசிரியர், வெளியீட்டாளர், இளைய தளபதி விஜய் பத்திரிகை தொடர்பாளர், இயக்குநர், தயாரிப்பாளர், என பன்முக தன்மை கொண்ட P.T.செல்வகுமார் கலப்பை மக்கள் இயக்கத்தை தொடங்கி அதன் மூலம் பல்வேறு மக்கள் நல திட்டங்களையும் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.நேற்று நடைபெற்ற வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் அவர் பேசுகிற போது நடைபெற இருக்கின்ற தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகளுக்கான தேர்தல் அதர்மத்துக்கும் – தர்மத்துக்குமான தேர்தல் என்றார். மேலும் பேசுகிறபோது தயாரிப்பாளர்களின் பிரச்சினைகளை காது கொடுத்து கேட்பவர்கள், எந்த நேரத்திலும் தயாரிப்பாளர்களின் பிரச்சினைகளுக்காக வரக்கூடியவர்கள் சங்க நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். சிறுபட தயாரிப்பாளர்களை நிர்மூலமாக்கும் முயற்சியை கார்ப்பரேட் நிறுவனங்கள் இங்கு தொடங்கியிருக்கின்றன. எதிர் அணியில் போட்டியிடும் வேட்பாளர்களை விலைபேசி வாபஸ் வாங்க செய்யக்கூடிய குறுக்குவழியை கார்ப்பரேட் நிறுவனங்கள் கையாள்வது வெட்ககேடானது. வாக்காளர்களையும் இவர்கள் விலைபேசுவார்கள். நமது உரிமை காக்கப்பட வேண்டும். அதற்கு இந்த அணி முழுமையாக வெற்றிபெற வேண்டும் என பேசினார்.
- மாமன்னனில் வடிவேலு கரை சேருவாரா?மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியாகி வெற்றிபெற்ற பரியேறும் பெருமாள்,கர்ணன்இரண்டு படங்களிலும் காமடி நடிகர் யோகிபாபு நடித்திருக்கிறார்இருந்தபோதிலும் […]
- காதர்பாட்சா@முத்துராமலிங்கம் திரைவிமர்சனம்புரியுதானு பாருங்க!ஒரு கோழிக்குச் சிக்கல்னாலே கொத்துப்புரோட்டா போடும் ஆர்யா கொழுந்தியாவுக்கு சிக்கல்னா சும்மா வுடுவாரா? அதோட […]
- மதுரை விமானநிலையம் கூகுள் மேபில் முத்தரையர் பன்னாட்டு விமான நிலையம் என உள்ளதால் சர்ச்சைமதுரை விமான நிலையத்திற்கு முத்தரையர் பன்னாட்டு விமான நிலையம் என கூகுள் மேப்பில் பெயர் பதிவாகியுள்ளதால் […]
- காங்கிரஸ் ஓ பி சி பிரிவு சார்பில் தர்ணா போராட்டம் – விஜய் வசந்த் எம் பி பங்கேற்புமத்திய அரசின் மக்கள் விரோத செயல்களை கண்டித்து காங்கிரஸ் ஓ பி சி பிரிவு சார்பில் […]
- மதுரை மாநகரில் அசுர வேகத்தில் பறக்கும் இருசக்கர வாகனங்கள்மதுரை மாநகரில் பல்வேறு இடங்களில் அசுர வேகத்தில் ஆபத்தான முறையில் இருசக்கர வாகனத்தில் சாகசம் பொதுமக்கள் […]
- மதுரையில் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்ட விழிப்புணர்வுக் கருத்தரங்குதமிழ்நாடு அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தொழில்முனைவோருக்கென செயல்படுத்தும் தனிச் சிறப்புத் திட்டமான அண்ணல் அம்பேத்கர் […]
- சோழவந்தான் பேரூர் திமுக சார்பாக கருணாநிதி பிறந்தநாள் விழாசோழவந்தான் பேரூர் திமுக சார்பாக தமிழ்நாடு முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாள் விழா இனிப்பு வழங்கி […]
- மதுரை கூடலழகர் பெருமாள் கோயில் வைகாசிப் பெருந்திருவிழா திருத்தேரோட்டம்மதுரை கூடலழகர் பெருமாள் கோயில் வைகாசிப் பெருந்திருவிழா திருத்தேரோட்டம் கோலாகலம்.ஆயிரகணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்.மதுரை அருள்மிகு […]
- ராஜபாளையத்தில் குடிநீர் குழாயில் உடைப்பு …வீணாகும் தண்ணீர்ராஜபாளையத்தில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு சுமார் 15 அடி உயரத்திற்கு பீய்ச்சு அடித்து வீணாகி […]
- இன்றுபுரத மடிப்பு குறித்த ஆய்வாளர் தர்சன் அரங்கநாதன் பிறந்த தினம்புரத மடிப்பு குறித்த முன்னோடி ஆய்வுக்காக மிகவும் பெயர்பெற்ற தர்சன் அரங்கநாதன் பிறந்த தினம் இன்று […]
- 2 நாட்களுக்கு 4 டிகிரி வரை வெப்பம் அதிகரிக்கும்தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி முதல் 41 டிகிரி […]
- மாரடைப்பால் உயிரிழந்த போதும் பயணிகள் உயிரை காப்பாற்றிய அரசு பேருந்து ஓட்டுநர்அருப்புக்கோட்டை அருகே, அரசு பேருந்து ஓட்டுநர் மாரடைப்பால் உயிரிழப்பு…வண்டியை சாலையோரமாக நிறுத்தியதால் பயணிகள் உயிர் தப்பினர்.மதுரை, […]
- மதுரையில் எஸ்டிபிஐ கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்மாநில உரிமைக்கு எதிரான கருப்புச் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தியும் பொய் வழக்குகளில் அப்பாவிகள் கைது […]
- இன்று இன்ட்டெல் நிறுவனத்தை தொடக்கிய ராபர்ட் நாய்சு நினைவு நாள்இன்ட்டெல் (Intel) என்னும் கணினிச் சில்லுகள் செய்யும் நிறுவனத்தை தொடக்கிய ராபர்ட் நாய்சு நினைவு நாள் […]
- இன்று சுற்றுச்சூழல் பாதுகாப்பு, உடல் ஆரோக்கியம் தரும் உலக மிதிவண்டி நாள்மிதிவண்டிப் பயன்பாட்டை உலக நாடுகள் ஆதரித்தால் சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்படும், மருத்துவ செலவும் குறையும். உலக மிதிவண்டி […]