• Tue. Apr 30th, 2024

கிணற்றில் சீறிய பாம்பு, மீட்ட பாம்பு பிடி வீரர்

ByKalamegam Viswanathan

Jan 24, 2024

மதுரை மாவட்டம் திருநகர் மாணிக்க நகர் பகுதியில் வசித்து வரும் என்பவரின் வீட்டில் கிணத்தில் இருந்து விசித்திரமான சத்தம் ஒன்று வந்துள்ளது. கிணற்றுக்குள் பார்க்கும் பொழுது பாம்பு ஒன்று படம் எடுத்தவாறு நின்று உள்ளது. இதை கண்டு அதிர்ந்து போன அவர் மதுரை திருநகரை சேர்ந்த பாம்பு பிடி வீரரான சகா தேவனுக்கு தகவல் தெரிவித்தார். விரைந்து வந்த சகாதேவன் கிணற்றில் சீறியபடி இருந்த பாம்பை பத்திரமாக மீட்டு அடர்ந்த வனப்பகுதியில் கொண்டு விட்டார். கடந்த இரண்டு நாட்களாகவே வீட்டில் இரவில் சத்தம் வருவதை கேட்ட அவர், எங்கிருந்து வருவது என்று தெரியாமல் கிணற்றுக்குள் எட்டிப் பார்த்தபோது பாம்பு படம் எடுத்து ஆடுவதைக் கண்டு அதிர்ந்து போனார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *