• Sat. Apr 4th, 2026
WhatsAppImage2026-04-03at060700
previous arrow
next arrow
Read Now

தமிழக முதல்வர் மீது தளவாய் சுந்தரம் குற்றச்சாட்டு..,

தி.மு.க.அரசை கண்டித்தும். திமுகவின் தேர்தல் அறிக்கையில் தெரிவித்த.100_நாள்
வேலைத்திட்டத்தை 150- நாட்கள் உயர்த்துவோம் என கூறி மக்களை ஏமாற்றியதற்கு கண்டனம் தெரிவித்து. தமிழகம் தழுவிய ஆர்ப்பாட்டத்தின் பகுதியாக.

குமரி மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றியம் அலுவலகங்கள் முன் அ.தி.மு.க., பாஜக, தமிழ் மாநில காங்கிரஸ், பாட்டாளி மக்கள் கட்சி என தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகள் சார்பில் அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றியம் அலுவலகம் முன் தி.மு.க., அரசின் போலி வாக்குறுதிகளை கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று பேசிய
கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் தளவாய் சுந்தரம் பங்கேற்று இன்று மகளீர் உரிமை தொகையாக ஒவ்வொரு பெண்களின் வங்கி கணக்கில் ரூ.5000.00 செலுத்தியுள்ளது.

மு.க. ஸ்டாலினுக்கு தேர்தல் குறித்த அச்சத்தின் எதிரொலி என தெரிவித்தார் தளவாய் சுந்தரம். நிகழ்வில். அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் ஜெசிம், தாமரை தினேஷ், வழக்கறிஞர் பார்த்தசாரதி உட்பட தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சியினர் பெரும் திரளாக பங்கேற்றனர்.