ஐரோப்பாவில் முதல் முறையாக ஜெர்மனி நாட்டில் டெஸ்லா நிறுவனத்தின் தொழிற்சாலை துவங்கப்பட்டுள்ளது. உலகின் முன்னணி எலக்ட்ரிக் கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யப் பெரும் முட்டுக்கட்டையாக இருப்பது உற்பத்தி தான்.
சந்தையில் டெஸ்லா கார்களுக்கு அதிகப்படியான டிமாண்ட் இருந்தாலும், போதிய கார்களை உற்பத்தி செய்ய முடியாத காரணத்தால் டெஸ்லா நிறுவனம் தவித்து வந்தது.
இதனிடையே, டெஸ்லா தனது உற்பத்தியை அதிகரிக்கச் சீனாவில் ஜிகாபேக்ட்ரியை உருவாக்கியது. அதைத்தொடர்ந்து, தற்போது ஆட்டோமொபைல் துறைக்குப் பெயர்போன ஐரோப்பாவில் முதல் தொழிற்சாலையை ஜெர்மன் நாட்டின் தலைநகரான பெர்லின்-க்கு அருகில் துவங்கியுள்ளது. இதன் மூலம் ஐரோப்பிய சந்தையில் டெஸ்லா வலுவாக கால்பதித்துள்ளது.
உலகம் முழுவதும் டெஸ்லா தயாரிப்புக்கு பிரத்யேக வரவேற்பு உண்டு. குறிப்பாக இந்தியாவில் கூட டெஸ்லா வாகன உற்பத்தி தொழிற்சாலையை தொடங்குவது குறித்த பேச்சுகள் அவ்வப்போது எழுவதுண்டு.தமிழ்நாட்டில் கூட டெஸ்லா உற்பத்தி நிறுவனத்தை கொண்டு வர சொல்லி தமிழ்நாடு அமைச்சர் தங்கம் தென்னரசு ட்வீட் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இத்தகைய சூழலில் ஜெர்மனி நாட்டில் டெஸ்லாவின் தொழிற்சாலை திறப்பு விழா நடைபெற்றுள்ளது.அந்த நாட்டின் Gruenheide உற்பத்திக் கூடத்தில் தயாரான கார்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் நிகழ்வில் பங்கேற்றுள்ளார் எலான் மஸ்க். அப்போது அங்கு இசை ஒலிக்கப்பட்டுள்ளது. அதை கேட்டு குஷியில் குத்தாட்டம் போட்டுள்ளார் மஸ்க். இந்த விழாவில் ஜெர்மனி அதிபர் ஓலாப் ஸகால்சும் பங்கேற்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தொழிற்சாலைக்கு இந்நாள் மிகவும் சிறப்பான நாள் என தெரிவித்துள்ளார் மஸ்க். ஜெர்மனியில் தொழிற்சாலை தொடங்குவதாக அறிவித்த இரண்டே ஆண்டுகளில் அதனை நிறுவி, வாகனத்தை உற்பத்தி செய்து அசத்தியுள்ளது டெஸ்லா. 30 வாடிக்கையாளர்களுக்கு டெஸ்லாவின் மாடல் Y கார்களை அதிபர் ஓலாப் ஸ்கோல்ஸ் முன்னிலையில் இந்நிகழ்வில் வழங்கியுள்ளார்.
ஐரோப்பிய நாட்டின் அனைத்து முன்னணி நிறுவனங்களும் தற்போது எலக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்ய உள்ளதால், ஐரோப்பிய சந்தையில் டெஸ்லாவுக்கும் அந்நிறுவனங்களுக்கும் இடையே கடும் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- சதுரகிரிக்கு பக்தர்கள் செல்ல 4 நாட்கள் அனுமதிபங்குனி மாத பிரதோஷம் மற்றும் பவுர்ணமி முன்னிட்டு சதுரகிரிக்கு பக்தர்கள் செல்ல 4 நாட்கள் அனுமதிவழங்கி […]
- தமிழகத்தில் பிரிக்கப்படும் மாவட்டங்களின் பட்டியல்தமிழகத்தில் புதிதாக 8 மாவட்டங்கள் உருவாக்கப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்தமிழகத்தில் மேலும் 8 […]
- இன்று தமிழ்நாடு முழுவதும் சுங்க கட்டணம் உயர்வு..!ஏப்ரல் முதல் நாளான இன்று முதல் தமிழ்நாடு முழுவதும் 29 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.தமிழ்நாட்டில் உள்ள […]
- உதகை ஸ்ரீராஜராஜேஸ்வரி கோயிலில் அலங்கார உபாய திருவீதி உலாஉதகை ஸ்ரீராஜராஜேஸ்வரி கோயிலில் பனிரெண்டாம் நாள் ஸ்ரீராஜராஜேஸ்வரி அம்மன் அலங்காரத்தில் திருவீதி உலா நடைபெற்றது.உதகை தாசபளஞ்சிக […]
- அதிரடியாக குறைந்த சிலிண்டர் விலை!!இன்று வணிக பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டர் விலை அதிரடியாக விலை குறைந்துள்ளது. சர்வதேச அளவில் கச்சா […]
- மதுரை காமராஜர் பல்கலை . பேராசிரியர் வன்கொடுமை சட்டத்தில் கைதுமதுரை காமராஜர் பல்கலைகழகத்தில் மாணவிகளிடம் தரக்குறைவாக பேசிய வரலாற்றுத் துறை பேராசிரியர் வன்கொடுமை சட்டத்தில் கைதுமதுரை […]
- இலக்கியம்நற்றிணைப் பாடல் 150: நகை நன்கு உடையன் பாண நும் பெருமகன்மிளை வலி சிதையக் களிறு […]
- ஆருத்ரா கோல்டு நிறுவன மோசடி பாஜக நடிகர் ஆர்.கே.சுரேஷ் வெளிநாடு தப்பி ஓட்டம்ஆருத்ரா கோல்டு நிறுவனம் ரூ.2438 கோடி மோசடி செய்த வழக்கில் திடீர் திருப்பமாக நடிகரும், பாஜக […]
- படித்ததில் பிடித்ததுசிந்தனைத்துளிகள் நிபந்தனையற்ற அன்பு! ஏழை சிறுவன், பசியால் ஒரு வீட்டின் கதவைத் தட்டினான்.கதவைத் திறந்த இளம்பெண், […]
- பொது அறிவு வினா விடைகள்
- இன்று முட்டாள் தினம் -ஒருவரை அறிவாளி /முட்டாள் என தீர்மானிப்பது யார் ?உலகம் முழுதும் “April Fools Days” என்று இன்றளவும் மக்கள் ஒருவரையொருவர் முட்டாளாக்கி கொண்டு மகிழ்ச்சியோடு […]
- குறள் 415இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றேஒழுக்க முடையார்வாய்ச் சொல்.பொருள் (மு.வ):கல்லாதவன் ஒழுக்கமுடைய சான்றோரின் வாய்ச் சொற்கள், வழுக்கல் […]
- சோழவந்தான் ரயில்வே மேம்பாலத்தை உடனடியாக திறக்க வேண்டும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கைபணிகள் நிறைவு பெற்ற நிலையில் மதுரை மாவட்டம் சோழவந்தானில் ரயில்வே மேம்பாலத்தை உடனடியாக திறக்க சமூக […]
- திருப்பரங்குன்றம் கோயிலில் அன்ன வாகனத்தில் முருகன், தெய்வானை எழுந்தருளி அருள்பாலித்தார்..!திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் பங்குனி மூன்றாவது நாள் திருவிழாவில் அன்ன வாகனத்தில் முருகன் தெய்வானை […]
- எல்லோரும் சமம் என்பதை தெரியபடுத்துவது தான் தியேட்டர்கள்-நடிகர் சூரி பேட்டிஎல்லோரும் சமம் என்பதை தெரியபடுத்துவது தான் தியேட்டர்கள், ரோகினி திரையரங்க சம்பவம் வருத்தமளிக்கிறது, எந்த சூழலில் […]