மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே ரயில் மோதி வாலிபர் ஒருவர் பலியானார். இவருக்கு அடுத்த மாதம் திருமணம் நடக்க உள்ள நிலையில் இந்தச் சம்பவம் மேலும் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே செல்லக்குளம் பள்ளிக்கூடத்தெருவை சேர்ந்தவர் அய்யனார் மகன் கார்த்திக் செல்வம் (வயது 26). தையல் வேலை செய்து கொண்டு 10 ஆடுகள் வளர்த்து மேய்த்து வந்தார். இவருக்கு அடுத்த மாதம் 10ந் தேதி திருமணம் நடக்க உள்ளது இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வந்தது. இவர் நேற்று மதியம் 4 மணிக்கு வாடிப்பட்டி சோழவந்தான் ரயில்நிலையங்களுக்கு இடையில் கீழ் நாச்சிகுளம் பகுதியில் ரயில்வே தண்டவாளத்தை ரயில் வருவதை கவனிக்காமல் கடக்க முயன்ற போது கூடல் நகரில் இருந்து திண்டுக்கல் சென்ற சரக்கு ரயில் வண்டி மோதி கார்த்திக் செல்வம் சம்பவ இடத்திலேயே இறந்தார். இது குறித்து தகவல் அறிந்த மதுரை ரயில்வே போலீஸ் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் கனகவள்ளி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி மதுரை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். கார்த்திக் செல்வம் இறப்பு சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
வாடிப்பட்டி அருகே ரயில் மோதி வாலிபர் பலி
