புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கம் மற்றும் திருக்கோகர்ணம் அரசு மேல்நிலைப் பள்ளி இணைந்து ஆசிரியர் தின விழா பள்ளியில் முன்னதாக 4.9.2025 வியாழக்கிழமை தலைவர் AR.முகமது அப்துல்லா தலைமையில் நடைபெற்றது.

முன்னதாக வருகை தந்த அனைவரையும் சங்க பொருளாளர் கண.மோகன் ராஜா வரவேற்றார். ரோட்டரி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் G.அந்தோணிசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பள்ளி தலைமை ஆசிரியர் B.லதா மற்றும் ஆசிரியர்களுக்கு இனிப்பு வழங்கி கௌரவம் செய்தார். நிகழ்ச்சியில் T.தயாளன், KN.செல்வரத்தினம், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர். பள்ளி முன்னாள் மாணவர் K.ஓம்ராஜ் நிகழ்ச்சி இணை ஒருங்கிணைத்தார் நிறைவாக செயலாளர் R.சங்கர் நன்றியுள்ளார்.




