• Sat. May 9th, 2026
WhatsAppImage2026-05-08at053925
previous arrow
next arrow
Read Now

தமிழ்நாடு சௌராஷ்டிரா அரசியல் எழுச்சி மாநாடு..,

ByKalamegam Viswanathan

Nov 30, 2025

மதுரையில் டிசம்பர் 28ம் தேதி ராஜா முத்தையா மன்றத்தில் “தமிழ்நாடு செளராஷ்ட்ர அரசியல் எழுச்சி மாநாடு” நடைபெற உள்ளது. இதன் தொடக்கமாக www.sourashtrapac.com வெப்சைட், மாநாட்டுக்கான ஹுடிஅவோ என்ற செளராஷ்ட்ர மொழி பாடல் வெளியீடு மற்றும் ஆட்டோ விளம்பரங்கள் துவக்கி வைக்கப்பட்டன.

பின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இதில் SPAC தலைவர் திரு.K.R.M.கிஷோர்குமார் (IPS) பேட்டியளித்தார். மாநாட்டு தலைவர் தினேஷ், செயலாளர் பிரசாந்த் ஷர்மிளா பிரகாஷ், மாநாட்டு ஒருங்கிணைப்பாளர் ராஜ்குமார் (IFS), இணைச்செயலாலர்கள்வி.வி.சுரேஷ், பி.எம்.முரளி, இளைஞர் அணி செயலாளர் “அறம்” உதயா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியில் மதுரை நிலையூர், பரமக்குடி எமனேஸ்வரம் பகுதி கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.