• Sat. Nov 15th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

தமிழ்நாடு கவனமாகவும் விழிப்புடனும் இருக்க வேண்டும்..,

ByKalamegam Viswanathan

Nov 15, 2025

கொடைக்கானல் செல்வதற்காக மக்கள் நீதி மையம் தலைவரும் மக்களவை உறுப்பினருமான கமலஹாசன் சென்னையில் இருந்து மதுரை வந்தடைந்தார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து கமலஹாசன் கூறுகையில்:

அதை விமர்சன ரீதியாக பார்க்க வேண்டும். (Look at it critically). தமிழ்நாடு கவனமாகவும் விழிப்புடனும் இருக்க வேண்டும்.(tamilnadu will have to be careful and vigilar).

மேகதாது அணை திட்ட அறிக்கை தயார் செய்வது குறித்த கேள்விக்கு:

என்னுடைய சிறு வயதில் இருந்து நடந்து கொண்டிருக்கிறது. எனது தாடி நிறம் மாறிவிட்டது. தண்ணி கருப்பாக ஆரம்பித்துவிட்டது. தாடி வெள்ளையாக ஆரம்பித்துவிட்டது.

புதிதாக கட்சி தொடங்குபவர்கள் திமுகவை எதிரி என்று கூறுவது குறித்த கேள்விக்கு:

இலக்கை உயர்வாக வைக்க வேண்டும் உதாரணத்திற்கு நடிக்க வேண்டும் என்று சொன்னால் இருப்பதிலேயே சிறந்த நடிகர் போல எனது பிள்ளை வரவேண்டும் என்று நினைப்பார்கள். ஏழையாக இருப்பவர்கள் கூட தனது பிள்ளையை கொஞ்சம் போது மகராசன் என்றுதான் கொஞ்சுவார்கள் ஆசை அனைவருக்கும் இருக்கும்.

2026 தேர்தல் திமுக தமிழக வெற்றி கழகத்திற்கு தான் போட்டி என்று கூறுவது குறித்த கேள்விக்கு:

எங்களது பார்வை தான் வாக்கு அவர்களுடையது என கமல்ஹாசன் கூறினார்.