தென் பிராந்திய ஏற்றுமதியாளர் விருது விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சர்வதேச வர்த்தகத்தில் தமிழகம் 3வது பெரிய மாநிலமாக திகழ்வதாக தெரவித்துள்ளார்.
விருது விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசும்போது..
இந்திய அளவில் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏற்றுமதி நிறுவனங்களை உறுப்பினர்களாகக் கொண்ட இந்த அமைப்பில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏற்றுமதியாளர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதை அறியும்போது நான் உள்ளபடியே மகிழ்ச்சி அடைகிறேன்.
கடந்த 2020-21ம் ஆண்டில், இந்தியாவின் சர்வதேச வர்த்தகத்தில் ரூ.1 லட்சத்து 93 ஆயிரம் கோடி ஏற்றுமதி செய்து 8.97 விழுக்காடு பங்களிப்புடன் இந்தியாவிலேயே மூன்றாவது பெரிய மாநிலமாகத் தமிழ்நாடு திகழ்கிறது என்பதை நான் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். இந்த விழுக்காடு என்பது ஆண்டுதோறும் அதிகமாக வேண்டும்; தமிழ்நாடு முதன்மையான மாநிலமாக ஆக வேண்டும் என்பதுதான் இந்த அரசினுடைய விருப்பம், என்னுடைய லட்சியம்.
மோட்டார் வாகனம் மற்றும் பாகங்கள், ஆடை மற்றும் அணிகலன்கள், காலணிகள், கொதிகலன்கள், ரப்பர் உள்ளிட்ட பொருட்கள் ஏற்றுமதியில் தமிழ்நாடு முன்னணியில் இருக்கிறது. இது புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குகிறது.தொழிலை மேம்படுத்துகிறது. மாநிலத்தின் பொருளாதாரத்தை வலுப்படுத்துகிறது. தொழில் அதிபர்களுக்குள் போட்டித் தன்மையை உருவாக்குகிறது. தொழில்கள் இடையே செயல்திறனை அதிகரிக்கிறது.
அதனால் தான் 2030 ம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக, மாநிலப் பொருளாதாரம் மாற வேண்டும் என்று நான் பெரிதும் நம்புகிறேன். இந்த இலக்கை அடைய வேண்டும் என்றால் ஏற்றுமதி வர்த்தகமும் அதிகமாக வேண்டும்.தமிழ்நாட்டின் தற்போதைய ஏற்றுமதி அளவு 26 பில்லியன் டாலர். அதில் இருந்து இருந்து 2030ம் ஆண்டிற்குள் 100 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்த்த வேண்டும்.இதனை அடைவதற்கான புதிய உத்தியை கடந்த ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதி நான் வெளியிட்டேன். இதற்காக, பல்வேறு முன்னெடுப்புகளை அரசு செய்து வருகிறது.தமிழ்நாட்டில் இப்போது இருக்கும் திறனையும் வளத்தையும் வைத்துப் பார்க்கும்போது, ஏற்றுமதியில் நாம் இன்னும் பல மடங்கு உயர முடியும்.
முக்கியத்துவம் வாய்ந்த இந்த மாநாட்டில் சிறப்பாக செயல்படும் ஏற்றுமதியாளர்கள் அங்கீகரிக்கப்படுவதில் நான் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். அவர்களின் வெற்றிக்காக நான் வாழ்த்துகிறேன்.இவ்வாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
- யஷ்வந்த் சின்காவுக்கு ஒவைசி கட்சி ஆதரவு..ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் யஷ்வந்த் சின்காவுக்கு அசாதுதீன் ஒவைசியின் மஜ்லிஸ் கட்சி […]
- இபிஎஸ் மனைவிக்கு கொரோனா..!தமிழக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மனைவிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தகவல்தமிழகத்தில் மீண்டும் கொரோனா […]
- நடிகை அம்பிகா ராவ் மறைந்தார்…மலையாள சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் அம்பிகா ராவ். இவர் கேரளா மாநிலம் திருச்சூரைச் […]
- அதிமுக பொதுக்குழு- இபிஎஸ் அதிரடி முடிவுஅதிமுக பொதுக்குழு கூட்டத்தை நடத்துவதில் இபிஎஸ் அதிரடியாக முடிவெடுத்துள்ளார்.கடந்த ஜூன் 23ல் ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி திருமண […]
- பிளாஸ்டிக் பைகள் மற்றும் பொருட்களுக்கு நாடு முழுவதும்தடை..!இந்தியா முழுவதும், பிளாஸ்டிக் பயன்பாடு அதிகமாக உள்ள நிலையில் பிளாஸ்டிக் உற்பத்தி மற்றும் பயன்பாட்டிற்கு மத்திய […]
- விருப்ப ஓய்வில் புதிய முறை.. தமிழக அரசு அறிவிப்புதமிழகத்தில் விருப்ப ஓய்வு பெறும் அரசு ஊழியர்களுக்கு புதிய வெயிட்டேஜ் கணக்கீட்டு முறையை தமிழக அரசு […]
- ரூ 10 ஆயிரம் மதிப்புள்ள ஆடுகள் திருட்டுமதுரையில் ரூ 10 ஆயிரம் மதிப்புள்ள ஆடு திருட்டு. ஆட்டோவில் வந்த கும்பல் கைவரிசை .மதுரை […]
- மதுரை ரயில்வே மருத்துவமனையில் காலியிடங்களில் பூர்த்தி செய்ய வேண்டும்மதுரை ரயில்வே மருத்துவமனையில் மருத்துவ காலியிடங்களில் பூர்த்தி செய்ய வேண்டும் பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி மதுரையில் […]
- அங்கன்வாடி ஊழியரின் மகனுக்கு ஃபேஸ்புக்கில் வேலைகூகுள் மற்றும் அமேசான் நிறுவனத்தில் கிடைத்த வாய்ப்பை நிராகரித்த கொல்கத்தாவைச் சேர்ந்த அங்கான்வாடி ஊழியரின் மகன் […]
- கூகுளில் அதிகம் தேடப்பட்ட பிரபலங்கள் யார்..? பட்டியலை வெளியிட்ட கூகுள்…2022-ம் ஆண்டு முதல் பாதியில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட ஆசியாவின் டாப் 100 பிரபலங்களின் பட்டியலை […]
- அதிமுக பொதுக்குழு ஏற்பாடு பணிகள் திடீர் நிறுத்தம்வரும் ஜூலை 11 அதிமுகபொதுக்குழு ஏற்பாடுகளில் இபிஎஸ் தரப்பு மும்முரமாக ஈடுபட்டு வந்த நிலையில் தற்போது […]
- சசிகலா-ஓ.பி.எஸ் சுவரொட்டிகள் கிழிப்பு -மதுரையில் பரபரப்புமதுரையில் சிசிகலா -ஓபிஎஸ் சுவரொட்டிகள் இபிஎஸ் ஆதரவாளர்களால் கிழிக்கப்பட்டதாக பரபரப்பு புகார்.அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், […]
- தமிழகத்தை உலகமே உற்று நோக்குகிறது – ஸ்டாலின்செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையில் நடைபெறுவதால் உலகமே தமிழகத்தை உற்று நோக்கிறது என ஸ்டாலின் பேச்சுசென்னையில், […]
- மாஸ்க் போடலன்னா மது இல்ல..!சென்னையில் மதுப்பிரியர்களுக்கு மாஸ்க் போடலன்னா மது இல்லை என டாஸ்மாக் நிர்வாகம் கண்டிஷன் போட்டிருப்பது மதுப்பிரியர்களை […]
- காரைக்குடியில் இ.பி.எஸ்.ஐ கண்டித்து போராட்டம்.சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் இ.பி.எஸ்.ஐக் கண்டித்து அதிமுகவினர் போராட்டம் நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது,சிவகங்கை […]