• Wed. Apr 24th, 2024

போதை மாநிலமாக மாறிய தமிழகம் – முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி குற்றச்சாட்டு

Byதரணி

May 29, 2023

தமிழகம் போதை மாநிலமாக மாறிவிட்டதாக விருதுநகர் ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி குற்றம் சாட்டினார்.
அதிமுக கழக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடியார் அவர்களின் ஆணைக்கிணங்க தமிழகத்தில் தொடரும் ஊழல் முறைகேடுகள், கள்ளச்சாராயம் மற்றும் போலி மதுபானங்களால் இறப்பு, கொலை, கொள்ளை, வழிப்பறி, போதை பொருட்கள் பழக்கம் உள்ளிட்ட சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளை கட்டுப்படுத்த தவறிய விடியாத் திமுக அரசை கண்டித்தும் இவைகளுக்கு முழு பொறுப்பேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக பதவி விலக வலியுறுத்தியும் விருதுநகர் மேற்கு மாவட்ட கழகம் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்றது.
கழக அமைப்புச் செயலாளரும் விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமை வகித்து பேசினார். கழகக் கொள்கை பரப்பு துணை செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பாண்டியராஜன், கழக எம்ஜிஆர் இளைஞர் அணி துணைச் செயலாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மன எம்.எஸ்.ஆர்.ராஜவர்மன், ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் மான்ராஜ், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சந்திரபிரபா முத்தையா, அனைத்து உலக எம்ஜிஆர் மன்ற துணை செயலாளர்கள் கலாநிதி, சுப்பிரமணி, முன்னாள் அமைச்சரும் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர செயலாளருமான இன்பத் தமிழன், மாவட்ட கழக அவைத்தலைவர் வழக்கறிஞர் விஜயகுமரன், விருதுநகர் நகர செயலாளர் முகமதுநயினார், சிவகாசி வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் கருப்பசாமி, விருதுநகர் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் கண்ணன், விருதுநகர் கிழக்கு ஒன்றிய கழகச் செயலாளர் தர்மலிங்கம், விருதுநகர் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் மச்சராஜா, அமைப்புசாரா ஓட்டுனர் அணி மாவட்ட செயலாளர் சேதுராமன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் தடங்கம் நாகராஜ் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் கே.கே. பாண்டியன், விருதுநகர் முன்னாள் எம்எல்ஏ வரதராஜன், மாவட்ட கழக துணைச் செயலாளரும் மாவட்ட ஊராட்சி குழு தலைவருமான வசந்திமான்ராஜ், மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் எஸ்.என்.பாபுராஜ், மாவட்ட மகளிர் அணி செயலாளர் சுபாஷினி, மாவட்ட கழக இணை செயலாளர் அழகுராணி, மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கிருஷ்ணராஜ், ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றிய கழக செயலாளர் மயில்சாமி, மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் முத்துப்பாண்டி, மாவட்ட விவசாய அணி செயலாளர் முத்தையா, மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் முத்துராஜ், மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் பிலிப்வாசு, மாவட்ட மருத்துவர் அணி செயலாளர் டாக்டர் விஜய்ஆனந்த், மாவட்ட மீனவரனி செயலாளர் ரெங்கபாளையம் காசிராஜன், மாவட்ட கழக பொருளாளர் தேன்ராஜன், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் குறிஞ்சி முருகன், அண்ணா தொழிற்சங்க கௌரவத் தலைவர் குருசாமி, அண்ணா போக்குவரத்து விருதுநகர் மண்டல செயலாளர் குருச்சந்திரன், அண்ணா மின்சார பிரிவு செயலாளர் ஜெய்சங்கர், டாஸ்மாக் அண்ணா தொழிற்சங்க செயலாளர் மாதவன், விருதுநகர் முன்னாள் நகர் மன்ற தலைவர் சாந்திமாரியப்பன், முன்னாள் நகர்மன்ற துணைத் தலைவர் மாரியப்பன், விருதுநகர் ஒன்றிய குழு துணை தலைவர் முத்துலட்சுமி தர்மலிங்கம், விருதுநகர் நகர எம்ஜிஆர் மன்ற செயலாளர் நாகசுப்பிரமணியம், விருதுநகர் நகர அண்ணா போக்குவரத்து செயலாளர் கணேஷ்குரு, விருதுநகர் நகரமன்ற உறுப்பினர்கள் வெங்கடேஷ், சரவணன், மிக்கேல்ராஜ், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் செல்வராஜ், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு பொருளாளர் ஸ்ரீதரன், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணைச்செயலாளர் மாரீஸ்வரன், மாவட்ட இலக்கிய அணி தலைவர் என்சிஓ காலனி மாரிமுத்து, மாவட்ட எம்ஜிஆர் மன்றத் துணைச் செயலாளர் ஸ்ரீராம் பாலகிருஷ்ணன், முன்னாள் நகரக் கழக செயலாளர்கள் ரவி, சாவி நாகராஜன், முன்னாள் கழக அவைத் தலைவர் மருது, மாவட்ட மகளிர் அணி பொருளாளர் சாந்தி, மாவட்ட வழக்கறிஞர் பிரிவு துணைச் செயலாளர் ரவி, மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் பாண்டியராஜன், மாவட்ட எம் ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் வேலாயுதம், மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் ஜபருல்லாகான், முன்னாள் ஒன்றிய கழகச் செயலாளர் ஆமத்தூர் பழனி, எம்ஜிஆர் மன்ற அசரப்அலி, மாவட்ட வழக்கறிஞர் பிரிவு துணைச் செயலாளர் ராஜ்குமார், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர் ராமமூர்த்தி, மாவட்ட வழக்கறிஞர் பிரிவு துணைச்செயலாளர் சீனு ராமச்சந்திரன், அம்மா பேரவை சரவணன், மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் கந்தவேல், மாவட்ட மகளிர் அணி துணைச் செயலாளர் பத்மாவதி, முன்னாள் நகரக் கழக செயலாளர் வாடியான்பாலன், மேற்கு ஒன்றிய பிரதிநிதி கணேசமூர்த்தி, மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் பட்டாம்புதூர் சேகர் வரவேற்புரையாற்றினர்.
கூட்டத்தில் வத்திராயிருப்பு ஒன்றிய கழக செயலாளர்கள் சுப்புராஜ், சேதுவர்மன், ராஜபாளையம் ஒன்றிய கழக செயலாளர்கள் குருசாமி, நவரத்தினம், சிவகாசி ஒன்றிய கழகச் செயலாளர்கள் ஆரோக்கியராஜ், வெங்கடேஷ், லட்சுமி நாராயணன், ராஜபாளையம் நகரக் கழக செயலாளர்கள் துரை முருகேசன், பரமசிவம், சிவகாசி மாநகராட்சி பகுதி கழகச் செயலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, சரவணக்குமார், கருப்பசாமி பாண்டியன், சாம் என்ற ராஜாஅபினேஸ்வரன், பொதுக்குழு உறுப்பினர்கள் சித்துராஜபுரம் பாலாஜி, அருணா நாகசுப்பிரமணியன், தமிழரசி கனகராஜ், பேரூர் கழகச் செயலாளர்கள் சேத்தூர் பொன்ராஜ்பாண்டியன், செட்டியார்பட்டி அங்குத்துரைபாண்டியன், மம்சாபுரம் ராஜேஷ்குமார், வத்திராயிருப்பு வைகுண்டமூர்த்தி, எஸ். கொடிக்குளம் சங்கரமூர்த்தி, சுந்தரபாண்டியம் மாரிமுத்து, டபிள்யூ புதுப்பட்டி ஜெயக்கிரி, விருதுநகர் ஒன்றிய கவுன்சிலர்கள் சுந்தரபாண்டியன், சரோஜா, மாதவன், வடிவுக்கரசி, சங்கர், ராஜம்மாள், கருப்பசாமி, நாகரத்தினம் ராமலட்சுமி, விருதுநகர் நகரக் கழக நிர்வாகிகள் ஜெயபாண்டி, மாரீஸ்வரி, ஜோதிராணி, கண்ணன், ஸ்ரீதரன், அன்னலட்சுமி, சுரேஷ்குமார், சக்திவேல், சிவகாசி வடக்கு ஒன்றிய கழக நிர்வாகிகள் ராஜாதேசிங்கு, ராமர், மீனாட்சிசுந்தரி, மாரிமுத்து, தியாகராஜன், கொப்பையன், கமலாதேவி, விருதுநகர் கிழக்கு ஒன்றிய கழக நிர்வாகிகள் அனுசியா, வேல்சாமி, காளீஸ்வரி, ராஜேந்திரன், சுப்பையா, ரேவதி, நடராஜன், விருதுநகர் மேற்கு ஒன்றிய கழக நிர்வாகிகள் பாலமுருகன், ராஜேஸ்வரி, கனகவல்லி, செந்தில்குமார், செல்வகுமார், பேச்சியம்மாள், கணேசமூர்த்தி, சுப்புராம், விருதுநகர் வடக்கு ஒன்றிய கழக நிர்வாகிகள் அன்புராஜ், நாகலட்சுமி, நாச்சியம்மாள், பாண்டியராஜன், ராசாத்தி, சின்னச்சாமி, கண்ணன், அசோக்குமார் மற்றும் விருதுநகர் நகர வார்டு கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி கழக வார்டு கழக, கிளைக் கழக, நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், சார்பு பணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்


வின்னை பிளந்த கழக நிர்வாகிகள் கோஷங்கள்
திமுக அரசை கண்டித்து விருதுநகரில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கோஷங்கள் எழுப்ப தொடர்ந்து கழக நிர்வாகிகள் தொண்டர்கள் உரத்த குரலில் திமுகவிற்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். இருண்டு போச்சு இருண்டு போச்சு ஈராண்டு விடியா திமுக ஆட்சியில் தமிழ்நாடு இருண்டு போச்ச. சந்தி சிரிக்குது சந்தி சிரிக்குது ஸ்டாலின் ஆட்சியிலே சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்குது. கெட்டுப் போச்சு கெட்டுப் போச்சு விடிய அதிமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு கெட்டுப் போச்சு. காய்ச்சுறாங்க காய்ச்சிறாங்க கள்ளச்சாராயம் காய்ச்சுறாங்க. துணை போகுது துணை போகுது இந்த விடியா திமுக அரசு அதற்கு துணை போகுது. விக்கிறாங்க, விக்கிறாங்க போலி மதுபானம் விக்கிறாங்க. ஆறாத ஓடுது ஆறாக ஓடுது ஸ்டாலின் ஆட்சியில் கள்ளச்சாராயம் ஆறாக ஓடுது. உயிர் போகுது, உயிர் போகுது கள்ளச்சாராய சாம்ராஜ்யத்தில் உழைக்கும் மக்கள் உயிர் போகுது. பதில் சொல் பதில் சொல் சாராய சாவுக்கு பதில் சொல். தடுத்து நிறுத்து தடுத்து நிறுத்து போலி மதுபானங்களை தடுத்து நிறுத்து. கள்ளச்சாராய உயிரிழப்பு அதற்கு விடியா திமுக அரசே பொறுப்பு. மாறிப்போச்சு மாறிப்போச்சு தமிழ்நாடே போதைப் பொருள் நாடாக மாறிப்போச்சு. பாதுகாப்பு இல்லை பாதுகாப்பு இல்லை திமுக ஆட்சியில் அரசு அதிகாரிகளுக்கே பாதுகாப்பு இல்லை. பதவி விலகு பதவி விலகு மக்கள் விரோத ஆட்சியை நடத்தும் பொம்மை முதலமைச்சரே பதவி விலகு. எங்கும் ஊழல் எதிலும் ஊழல் ஸ்டாலின் குடும்ப ஆட்சியிலே எங்கும் ஊழல் எதிலும் ஊழல். கொள்ளை போச்சு கொள்ளை போச்சு மக்கள் வரிப்பணம் 30ஆயிரம் கோடி கொள்ளை போச்சு. அழிக்காதே அழிக்காதே ஒரு குடும்பம் வாழ அனைத்து குடும்பங்களையும் அழிக்காதே. செல்வம் கொழிக்குது செல்வம் கொழிக்குது ஸ்டாலின் குடும்பத்தில் மட்டும் செல்வம் கொழிக்குது. தள்ளி வைப்போம் தள்ளி வைப்போம் கொள்ளையடிக்கும் விடியா திமுக அரசை தள்ளி வைப்போம். என்னாச்சு என்னாச்சு ஸ்டாலின் அண்ணாச்சி தேர்தல் வாக்குறுதி என்ன ஆச்சு. என்னாச்சு என்னாச்சு நீட் தேர்வு ரத்து ரகசியம் என்ன ஆச்சு. ஒற்றை செங்கல் உதயநிதியே மாணவர்கள் மனசு புண்ணாச்சு. கண்டிக்கிறோம் கண்டிக்கிறோம் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த முடியாத பொம்மை முதலமைச்சரை கண்டிக்கிறோம். மறுக்காதே மறுக்காதே பொதுக்கூட்டங்களுக்கு அனுமதி மறுக்காதே. ஓடாதே ஓடாதே பயந்து ஓடாதே.எங்கள் விமர்சனங்களுக்கு பயந்து ஓடாதே. போடாதே போடாதே கழக நிர்வாகியின் மீது பொய் வழக்கு போடாதே. நசுக்காதே நசுக்காதே ஜனநாயகத்தின் குரல்வளையை நசுக்காதே. பதவி விலங்கு பதவி விலகு நிர்வாகத்திறன் அற்ற ஸ்டாலின் அரசே பதவி விலகு. பதவி விலகு பதவி விலகு போதை பொருட்கள் புழக்கத்தை கட்டுப்படுத்த தவறிய ஸ்டாலின் அரசே பதவி விலகு இவ்வாறு கோஷங்கள் எழுப்பப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *