திராவிட இயக்கத் தமிழர் பேரவையில் தமிழ்நாடு திராவிடர் கழகம் இணையும் விழா கோவையில் நாளை நடைபெறுகிறது.
ஆர்.எஸ்.புரம், மாநகராட்சி கலையரங்கத்தில் நடைபெறும் இந்த விழாவில் திமுக கலை இலக்கிய பகுத்தறிவுப் பேரவையின் மாநில நிர்வாகி பொள்ளாச்சி மா.உமாபதி தலைமையில் கோவை மாவட்ட திமுக செயலாளர்கள் சி.ஆர்.ராமச்சந்திரன், கோவை நா.கார்த்திக், பையா ஆர்.கிருஷ்ணன், மருதமலை சேனாதிபதி, மருத்துவர் கி.வரதராஜன் முன்னிலையில் நடைபெற உள்ளது.
அமைச்சர்கள் வி.செந்தில் பாலாஜி, மு.கண்ணப்பன், பொங்கலூர் நா.பழனிசாமி, திராவிடத் தமிழர் கட்சி தலைவர் இரா.வெண்மணி, திராவிடன் அறக்கட்டளை தலைவர் கோவை பாபு வாழ்த்துரை வழங்க உள்ளனர்.
விழாவில் தமிழ்நாடு திராவிடர் கழகக் தலைமை ஒருங்கிணைப்பாளராக இருக்கும் காசு.நாகராசன் நோக்க உரையும், திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச் செயலாளரான சுப.வீரபாண்டியன் நிறைவுப் பேருரையும் ஆற்ற உள்ளனர். இந்த இரு அமைப்புகளும ஏன் இணைகின்றன என்பதற்கான காரணத்தையும் விழா ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.
அதன்படி ஒரே நோக்கம், ஒரே சிந்தனை, ஒரே கொள்கை கொண்டோர், ஒரே இயக்கமாக ஒரே தலைமையின் கீழ் இணையும் விழா என அழைப்பிதழில் பதிவிட்டுள்ளார்கள். “நம்முடைய முக்கியமான ஆசை- கொள்கை, மனித சமுதாய அமைப்பை தலைகீழாக மாற்றுவது அல்லது உடைத்தெறிவது என்பதேயாகும். அரசியலை பற்றியோ, பொருளாதாரத்தைப் பற்றியோ நமக்கு சிறதும் கவலை இல்லை.
சமூக அமைப்பை எப்படி மாற்றி அமைக்கிறோமோ எப்படி உடைத்தெறிகிறோமோ அதைப் பொருத்து அரசியலும் பொருளாதாரமும் தாமாகவே மாறுபாடு அடைந்துவிடும்” என தந்தை பெரியார் குடியரசு நாளிதழில் கடந்த 1937 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8ஆம் நாள் எழுதியதை மேற்கோள் காட்டியுள்ளார்கள்.
அது போல் பேரறிஞர் அண்ணாவின் பொன்மொழிகளும் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது. அதன்படி கட்டுப்பாடும் ஒழுங்கும் கட்டாயம் நமக்குத் தேவை, இவை சாதாரணமானவைதான். ஆனால் இம்மாதிரி சாதாரண விஷயங்களை கொண்டுதான் ஒரு சமூகத்தை எடை போட முடியும் என அழைப்பிதழில் அண்ணாவின் வாசகம் அச்சிடப்பட்டுள்ளது. திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச் செயலாளராக இருப்பவர் சுப வீரபாண்டியன். தமிழ்நாடு திராவிடர் கழகக் தலைமை ஒருங்கிணைப்பாளராக இருந்தவர் கா.சு. நாகராஜன். தற்போது இந்த இரு அமைப்புகளும் இணைவதால் திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் அமைப்புச் செயலாளராக காசு நாகராஜன் நியமிக்கப்படுகிறார். இதற்கு முன்பு கோவை ராமகிருட்டிணன் தலைமையில் பெரியார் இயக்கத்தில் பணியாற்றியவர். மேலும் திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் அமைப்புச் செயலாளராக இருக்கும் திண்டுக்கல் புலேந்திரன் அந்த அமைப்பின் முதன்மைச் செயலாளராக நியமிக்கப்படுகிறார்.
- அதிமுக வெளி நடப்பு என்பது ஒரு சடங்கு -கே.எஸ்.அழகிரிநிதிநிலை அறிக்கையின்போது அதிமுக வெளி நடப்பு குறித்த கேள்விக்கு.அதிமுக வெளி நடப்பு என்பது ஒரு சடங்கு […]
- மதுரை செல்லம்பட்டி அருகே சாலையில் பாலை கொட்டி போராட்டம்மதுரை செல்லம்பட்டி அருகே.பால் கொள்முதல் விலையை உயர்த்தி தரக் கோரி பால் உற்பத்தியாளர்கள் சாலையில் பாலை […]
- ௭ண்ணும் ௭ழுத்தும் கற்றலை போற்றுவோம் விழாமதுரை மாவட்டம் தங்களாச்சேரி கிராமத்தில் உள்ள நடுநிலைப்ள்ளியில் ௭ண்ணும் ௭ழுத்தும் கற்றலை போற்றுவோம் விழா நடைபெற்றது. […]
- ரூ.1000 உரிமைத்தொகையை பெறுவதற்கான தகுதி என்ன? எடப்பாடி பழனிசாமிஇன்று தாக்கல் செய்யப்பட்ட பொதுபட்ஜெடில் அறிவிக்கப்பட்டரூ.1000 உரிமைத்தொகையை பெறுவதற்கான தகுதி என்னவென்று தெரிவிக்கவில்லை என எடப்பாடி […]
- சோழவந்தானில் பங்குனி மாத பிரதோஷ விழா திரளான பக்தர்கள் பங்கேற்புசோழவந்தான் வைகை கரையில் அமைந்துள்ள பிரளய நாதர் சுவாமி சிவன் கோவிலில் பங்குனி மாத பிரதோஷ […]
- விஜய் சேதுபதி நற்பணி இயக்கம் நடத்திய கிரிக்கெட் போட்டிஇன்றைய இளைஞர்களை சீரழிக்கும் செல்போன், மது போதை இவைகளில் இருந்து இளைஞர்களை விடுவிக்கும் விதமாக நடிகர் […]
- திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் சிலம்பம் சுற்றிய மணமக்கள்..!கும்பகோணம் அருகே பாபநாசத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மணமக்கள் சிலம்பம் […]
- தஞ்சாவூரில் இயற்கை மாற்றுப் பொருள் கண்காட்சி..!தஞ்சாவூரில் பிளாஸ்டிக் பொருள்களுக்கு மாறாக இயற்கை மாற்றுப் பொருள் கண்காட்சி நடைபெற்று வருகின்றன.தமிழகத்தில் ஒருமுறை பயன்படுத்தப்படும் […]
- நெல்லையில் ஹெல்மெட் அவசியம் குறித்து விழிப்புணர்வு பேரணி..!நெல்லையில் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.திருநெல்வேலி மாநகர காவல் துறை, கோபாலசமுத்திரம் […]
- 8ம் வகுப்பு மாணவர் ஜம்பிங் ஜாக்ஸ் செய்து உலக சாதனை முயற்சிராஜபாளையத்தை சேர்ந்த 8ம் வகுப்பு மாணவர் மணிகண்டன் தொடர்ச்சியாக இரண்டு மணி நேரம் ஜம்பிங் ஜாக்ஸ் […]
- பேராபத்தை சந்திப்போம்-ரியல் எஸ்டேட் மாநாட்டில் சத்குரு பேச்சு!“குறைந்த நிலப்பரப்பும், அதிகப்படியான மக்கள் தொகையும் கொண்ட நம் நாட்டில் கடந்த காலங்களை போல் கட்டுமானங்கள் […]
- மதுரை மெட்ரோ திட்டம்- எஸ்எம்எஸ் அனுப்பிய தமிழக அரசுமதுரை மக்களுக்கு 8,500 கோடி மதிப்பீட்டில் மெட்ரோ ரயில் திட்டம் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் எஸ்எம்எஸ் மூலமாக […]
- அதானி பற்றி பேசினால் அது தேச துரோகமா.? மதுரை விமான நிலையத்தில் கே எஸ் அழகிரி பேட்டி..மதுரையில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே […]
- இந்தியாவிலேயே அதிக கோயில்கள் கொண்ட மாநிலங்களில்..
முதலிடம் பெற்றுத் திகழ்வது தமிழ்நாடுதான்..!இந்தியாவிலேயே அதிக கோயில்கள் கொண்ட மாநிலங்களில் முதலிடத்தில் இருப்பது தமிழ்நாடுதான் என்பது தமிழர்களுக்கு கிடைத்த பெருமை […] - லைஃப்ஸ்டைல்உடற்பருமனும் அதனைக் குறைக்கும் வழிகளும்: