மழை வேண்டியும் விவசாயம் செழிக்கவும் உலக நன்மை வேண்டியும் குடும்ப ஒற்றுமை வேண்டியும் திருப்பரங்குன்றத்தை அடுத்துள்ள பசுமலையில் விநாயகர் நகரில் அமைந்துள்ள ஸ்ரீ விபூதி விநாயகர் திருக்கோவிலில் சுமங்கலி பூஜையான 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது

இவ்விழாவில் 108 பெண்கள் திரு பூஜையில் கலந்து கொண்டு 108 காயத்திரி மந்திரம் சொல்லி மகாலட்சுமி அஷ்டோத்திர மந்திரம் சொல்லி திருவிளக்கு பூஜை செய்தனர் அதன் பின்பு ஸ்ரீவிபூதி விநாயகர்க்கு வெள்ளி கவசம் சாத்தப்பட்டு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தின் சார்பில் சிறப்பாக செய்திருந்தனர்.





