தமிழக நில உரிமை கூட்டமைப்பின் மாநில ஆலோசனைக் கூட்டம் சேலம் மாவட்டம் தாரமங்கலத்தில் உள்ள கிராமப்புற பெண்கள் முன்னேற்ற சங்க கட்டிடத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு கூட்டமைப்பின் தலைவர் அலமேலு பன்னன் தலைமை தாங்கினார்.தலித் நிலவுரிமை இயக்க ஒருங்கிணைப்பாளர் முருகேசன் மற்றும் நில உரிமை செயல்பாட்டாளர்கள் குருசாமி,குருவை குமார், பழனிச்சாமி உட்பட பலர் பங்கேற்று கருத்துக்களை வழங்கினார்கள்.

ஆலோசனை கூட்டத்தில் நிலமில்லாத வீடு இல்லாத ஒடுக்கப்பட்ட விளிம்பு நிலை மக்களுக்கு அரசு புறம்போக்கு தரிசு நிலங்கள்,பஞ்சமி நிலங்கள்,பூமிதான நிலங்கள் மற்றும் தமிழ்நாட்டில் உள்ள உபரி நிலங்களை அரசாங்கம் கையகப்படுத்தி அதை அனைவருக்கும் பிரித்துக் கொடுக்க வேண்டும்.மேலும் ஆக்கிரமிப்பில் உள்ள பட்டியலின மக்களின் பஞ்சமி நிலங்களை மீட்டு உரியவர்களிடம் விரைந்து ஒப்படைக்க வேண்டும்.பஞ்சமி நிலங்களில் கட்டப்பட்டுள்ள வர்த்தக அடுக்குமாடி கட்டிடங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும்.தாட்கோ கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். பட்டியலின மாணவர்களின் கல்விக் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும்.

ஒரு தேசிய வங்கி குறைந்தபட்சம் ஐந்து கோடி வரை தொழில் கடன் வழங்க வேண்டும். ஒருகூட்டுறவு வங்கி 50 லட்சம் வரை தொழில் கடன் வழங்க வேண்டும் மற்றும் கொரோனா பேரிடரால் பாதிக்கப்பட்டவர்களின் குழந்தைகள் இடைநிறுத்தம் இல்லாத தொடர் கல்வியை உறுதி செய்ய வேண்டும், அதிகாலை தூய்மை பணிக்கு செல்லும் தூய்மை தொழிலாளர்களின் குழந்தைகள் கல்வி தடைபடாமல் இருக்க அவர்களுக்கான சிறப்பு திட்டங்களை உருவாக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் விருதுநகர் மாவட்டம் முனியாண்டி, ராமநாதபுரம் மாவட்டம் கண்ணதாசன், மதுரை மாவட்டம் மலைச்சாமி,சேலம் மாவட்டம் கவிதா, கிருஷ்ணகிரி மாவட்டம் ராமு உட்பட பல்வேறு மாவட்டத்தைச் சேர்ந்த அமைப்பாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- 16வயது சிறுமியை கொடூரமாக கொலை செய்த சைக்கோ காதலன் கைதுதலைநகர் டெல்லியில் 16 வயது சிறுமியை அவரது ஆண் நண்பர் கத்தியால் குத்தி படுகொலை செய்த […]
- இடிக்கப்பட்ட கள்ளர் சீரமைப்பு பள்ளியை கட்டித்தர வேண்டி கலெக்டரிடம் மனுபூதிப்புரம் கள்ளர் சீரமைப்பு பள்ளியை இடித்து விட்டு கள்ளர் சீரமைப்பு பள்ளிக்கு சொந்தமான இடத்தை முறைகேடாக […]
- முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 31-ந்தேதி இரவு சென்னை திரும்புகிறார்முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அரசு முறைப் பயணமாக சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு கடந்த 23-ந்தேதி […]
- அழகுமுத்துமாரியம்மன் கோயில் பூக்குழிவிழாஅவனியாபுரம் அழகுமுத்துமாரியம்மன் கோயில் பூக்குழிவிழா. ஏராளமான பெண்கள் குழந்தைகளுடன் தீமிதித்து நேர்த்திக் கடன் செலுத்தினர். மதுரை […]
- வழிப்பறியில் கொள்ளைக்கு திட்டமிட்ட 4 பேர் கைதுபரம்புபட்டி தேசிய நெடுஞ்சாலை பகுதிகளில் வழிப்பறியில் கொள்ளை சம்பவம் நடத்த திட்டமிட்ட நான்கு வாலிபர்கள் கையும் […]
- மதுரையில் கோடை உணவுத்திருவிழாபொழுது போக்கி விளையாட சதுரங்கம். (செஸ்) கேரம் போர்டு, ஒவியம், மெகந்தி என விளையாட்டு அம்சங்களுடன் […]
- சிலம்பம் சுற்றி ஆஸ்கர் உலக சாதனை படைத்த மாணவர்கள்ஆறுமணி நேரம் கண்ணைக் கட்டி சிலம்பம் சுழற்றிய மாணவர்கள் ஆஸ்கர் உலக புத்தக சாதனை மலரில் […]
- காளை வளர்ப்பவர்களுக்கு நிரந்தரமாக காப்பீட்டுத் திட்டம் – ஜல்லிக்கட்டு இளைஞர் பேரவை தலைவர் பேட்டிஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பதியப்பட்ட வழக்குகளை தமிழக அரசு வாபஸ் பெற வேண்டும். மேலும் […]
- பால் பற்றாக்குறையை சமாளிக்க..,பசுந்தீவன சாகுபடி செய்ய ஆவின் நிர்வாகம் முடிவு..!ஆவின் மூலமாக விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் 30 லட்சம் லிட்டர் பால் கொழுப்பு சத்து அடிப்படையில் […]
- போதை மாநிலமாக மாறிய தமிழகம் – முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி குற்றச்சாட்டுதமிழகம் போதை மாநிலமாக மாறிவிட்டதாக விருதுநகர் ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி குற்றம் சாட்டினார்.அதிமுக கழக […]
- மணிப்பூரில் மீண்டும் வன்முறை பாஜ எம்எல்ஏ வீடு தீவைத்து எரிப்புமணிப்பூரில் ராணுவ படையினருடன் நடந்த மோதலில் குக்கி தீவிரவாதிகள் 40 பேர் சுட்டு கொல்லப்பட்டதாக அந்த […]
- அமைச்சர் செந்தில்பாலாஜி வீட்டில் ரெய்டு : பரபரப்பான பின்னணி..!அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு சொந்தமான இடத்தில் வருமானவரிதுறை சோதனை நடத்தியதற்கு கண்டனம் மற்றும் இது தொடர்பான செய்தியாளர் […]
- தமிழ்நாடு சிலம்பம் கழக மாநிலபொதுக்குழு கூட்டம்தமிழ்நாடு சிலம்பம் கழகம் சார்பாக மாநிலபொதுக்குழு கூட்டம் சென்னை போரூரில் உள்ள தனியார் விடுதியில் சிறப்பாக […]
- தமிழ்நாட்டில் அக்னிநட்சத்திரம் இன்றுடன் நிறைவு..!தமிழ்நாட்டில் கடந்த மே மாதம் 4ஆம் தேதி தொடங்கிய அக்னி நட்சத்திரத்தின் கோர தாண்டவம் இன்றுடன் […]
- அரசு பள்ளிகளில் திருக்குறளை ஒப்புவிக்கும் மாணவர்களுக்கு ..,பரிசுத்தொகை உயர்வு..!தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு அனைத்து துறைகளிலும் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு […]