இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியும், தொடர்போராட்டமும் இந்தியாவுக்கு எச்சரிக்கையாக இருக்கும் என அரசியல் வல்லுனர்கள் எச்சரித்து வருகின்றனர்.
இலங்கையில் உள்நாட்டுப் போருக்கு பின் அந்த வெற்றி மிதப்பிலேயே ஆட்சியாளர்கள் இருந்துவிட்டனர். மக்களின் அன்றாடப் பிரச்சனைகளை கவனிக்காமல் ,இனவெறியை வளர்ப்பதிலும்,சொத்து சேர்ப்பதிலும் அதிகாரத்தை மையப்படுத்துவதிலும்,ஜனநாயக உரிமைகளை பறிப்பதிலும் ஆட்சியாளர்கள் கவனம் செலுத்தினால் நாடு
எ ந்த நிலைக்கு வீழும் என்பதை இலங்கையில் நடந்து வரும் போராட்டங்கள் உணர்த்துகின்றன. இந்த நிலை இந்தியாவில் ஏற்படுமா? ஆட்சியாளர்கள் உணர்வார்களா?