• Sat. Apr 11th, 2026
WhatsAppImage2026-04-10at0716401
previous arrow
next arrow
Read Now

ஸ்ரீ ஜெனகை மாரியம்மன் முகூர்த்த கால் நடும் விழா..,

ByKalamegam Viswanathan

Jun 13, 2025

மதுரை மாவட்டம் சோழவந்தானில் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. 17 நாள் நடைபெறும் திருவிழாவில் 16ஆம் நாள் மண்டகப்படியாக வரும் செவ்வாய்க்கிழமை காவல்துறை குடும்பத்தார் சார்பாக திருத்தேரோட்டம் நடைபெற உள்ளது.

தேரோட்டம் நிகழ்ச்சிக்கு தேர் தயார் படுத்துவதற்காக முகூர்த்த கால் நடும் விழா நடைபெற்றது. தேர் நிலையில் நடைபெற்ற விழாவிற்கு காவல்துறை மற்றும் திருக்கோவில் நிர்வாகத்தினர். தேர் பராமரிப்பாளர்கள் ஆசாரியார்கள் பக்தர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். தொடர்ந்து தீபாராதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. செயல் அலுவலர் இளமதி மற்றும் திருக்கோவில் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.