மதுரை மாவட்டம் விக்கிரமங்கலத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் கோவில் வைகாசி பொங்கல் திருவிழா கடந்த 7ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இந்த நிலையில் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான திருவிளக்கு பூஜை கோவில் மண்டபத்தில் நடைபெற்றது. விக்கிரமங்கலம் பகுதியை சேர்ந்த சுமார் 200க்கும் மேற்பட்ட பெண்கள் திருவிளக்கு பூஜையில் கலந்து கொண்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து பத்திரகாளி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. திருவிழா ஏற்பாடுகளை விக்கிரமங்கலம் இந்து நாடார் உறவின்முறை சார்ந்த நிர்வாகிகள் மற்றும் திருவிழா கமிட்டியினர் செய்திருந்தனர்.





