விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை தாலுகா சத்திரம் கிராமத்தில் காசி விஸ்வநாதர் சமேத அன்னபூரணி அம்மன் கோவில் வளாகத்தில் காலபைரவர் தனி சன்னதி உள்ளது.

இங்கு தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. முன்னதாக தொழில் அபிவிருத்திக்காக பல்வேறு பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு வடை மாலை சாத்தப்பட்டு சிறப்பு அலங்காரம் நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது





