பெண்கள் மீதான பாலியல் கொடுமைகளுக்கு கடும் தண்டனை கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் எல்லோரிடமும் உள்ளது. அந்த எண்ணத்தின் அடிப்படையில் ஒரு அதிரடியான கதையைக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் தீரன்.
சத்யராஜ் ஒரு அரசு மருத்துவர். அவரது ஒரே மகள் ஸ்மிருதி வெங்கட் ஒரு மருத்துவ மாணவி மகள் ஸ்மிருத்திக்கும் டாக்டரான யுவன் மயில்சாமிக்கும் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. இந்நிலையில் ஸ்மிருத்தியை மூன்று இளைஞர்கள் பாலியல் பலாத்காரம் செய்து விடுகிறார்கள். தன் மகளுக்கு நேர்ந்த இந்த பெரும் கொடுமையை எதிர்த்து நீதிமன்றம் செல்கிறார் சத்யராஜ். ஆனால், அந்த மூன்று இளைஞர்களில் ஒருவரது அப்பாவான கோடீஸ்வரர் மதுசூதனன் அவரது பண பலத்தால் வழக்கை ஒன்றும் இல்லாமல் செய்துவிடுகிறார். இதனால், ஆத்திரமடையும் சத்யராஜ், அந்த மதுசூதனின் மகனைக் கடத்தி, அவரது ஆண் உறுப்பை ஆபரேஷன் செய்து எடுத்து விடுகிறார். அந்த உறுப்பைத் தர வேண்டுமென்றால் சில கொலைகளைச் செய்ய வேண்டும் என மதுசூதனனுக்கு நிபந்தனை வைக்கிறார் சத்யராஜ். அதன்பின் என்ன நடந்தது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
படத்தின் ஆரம்பக் காட்சிகளில் தடுமாற்றம் இருந்தாலும் அதன்பிறகு காட்சிகள் விறுவிறுப்பாகவே நேர்கோட்டில் தடுமாற்றம் இன்றி நகர்கின்றன. இப்படி ஒரு தண்டனையை இதுவரை எந்த ஒரு ஹீரோவும் வில்லனுக்குக் கொடுத்ததில்லையே என்பதுதான் படத்தின் சுவாரசியம்.சத்யராஜ் தன் மகள் ஸ்மிருதி மீது அவ்வளவு பாசம் வைத்துள்ளார். தாய் இல்லாத மகளை, அன்பாக வளர்த்து அவரையும் டாக்டராக்கி, நல்ல இடத்தில் திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என்ற ஒரு சராசரி அப்பவாக பாசக் காட்சிகளில் கண் கலங்க வைக்கிறார். அதே சமயம் பழி வாங்கல் எண்ணம் வந்ததும் வழக்கமான சத்யராஜை படத்தில் கொண்டுவந்திருக்கிறார் இயக்குநர் பார்க்க நேரடியாக யாருக்கும் எந்த தண்டனையும் கொடுக்காமல் எதிராளிகளின் மூலமாகவே அவர்களுக்குள் அவர்களை அடிக்க வைக்கும் திரைக்கதையுக்தி தனி ஹீரோயிசம் தான்.
அன்பான மகளாக ஸ்மிருதி வெங்கட். கொஞ்ச காட்சிகளில் வந்தாலும் அனுதாபத்தை அள்ளிக் கொள்கிறார். அவரைக் காதலித்து கை பிடிக்க நினைக்கும் கதாபாத்திரத்தில் யுவன் மயில்சாமி. மெயின் வில்லனாக மதுசூதனன். படம் முழுவதும் வருகிறார். அவருக்கு உறுதுணையாக ஹரிஷ் உத்தமன். ஒரு காலத்தில் பல படங்களில் வில்லனாக கலக்கிய சத்யராஜின் முன் இவர்களது வில்லத்தனம் தடுமாறத்தான் செய்கிறது. சார்லி, ரேணுகா ஆகியோரும் படத்தில் உண்டு.தீர்ப்புகள் விற்கப்படும்’ என்பது படத்திற்குப் பொருத்தமான தலைப்புதான்.
பெண்கள் மீதான பாலியல் குற்றங்கள் புரிபவர்களுக்கு இந்தப் படத்தில் காட்டப்படும் கடும் தண்டனைகளை சட்டப்படி நிறைவேற்றினால் அந்தக் கொடுமைகள் கண்டிப்பாகக் குறையும். குற்றம் செய்ய நினைப்பவர்களுக்கும் சரியான பயம் வரும்.
தீர்ப்புகள் விற்க்கப்படும் வரவேற்கப்பட வேண்டும்
பெயர்:தீர்ப்புகள் விற்கப்படும்
தயாரிப்பு – அல் டாரி மூவீஸ்
இயக்கம் – தீரன்
இசை – SN பிரசாத்
நடிப்பு – சத்யராஜ், ஸ்மிருதி வெங்கட்
வெளியான தேதி – 31 டிசம்பர் 2021
- அஜய் தேவ்கன் நடித்திருக்கும் ‘மைதான்’ டீசர் வெளியானதுநடிகர் அஜய் தேவ்கான் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படமாக ‘மைதான்’ இருக்கிறது. உலக அளவில் பலராலும் […]
- மின் இணைப்பில் பெயர் மாற்றம் செய்ய லஞ்சம் -உதவிசெயற்பொறியாளர் கைதுமதுரை மாவட்டம் விக்கிரமங்கலத்தில் மின் இணைப்பில் பெயர் மாற்றம் செய்ய ரூ.2500 லஞ்சம் வாங்கிய மின் […]
- பிரபாஸ் நடிக்கும்ஆதிபுருஷ் போஸ்டர் வெளியீடு சர்ச்சையை ஏற்படுத்துமா?சினிமாவில் அதிகபட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு வரும்படங்களில் பிரபாஸ் நடித்து வரும் ஆதிபுருஷ் இடம்பெற்றுள்ளது.இந்த திரைப்படம் 2023ஜூன்மாதம் 16ஆம் […]
- மதுரை காமராஜர் பல்கலை. விடுதி மாணவி மாடியில் இருந்து விழுந்து பலிமதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் விடுதியில் இருந்த கல்லூரி மாணவி மாடியில் இருந்து விழுந்து பலி தவறி […]
- நகை திருட்டு புகார் மனுவை மாற்றியஐஸ்வர்யா ரஜினிகாந்த்ஐஸ்வர்யா ரஜினிகாந்த் லாக்கரில் வைக்கப்பட்டிருந்த நகை காணாமல்போனது சம்பந்தமாக காவல் துறையில் புகார் கொடுத்தது பல்வேறு […]
- தமிழகத்தில் மீண்டும் மாஸ்க் கட்டாயம்இந்தியா முழுவதும் கொரோனா மீண்டும் அதிகரித்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக மருத்தவமனைகளில் மாஸ்க் கட்டாயம் […]
- பத்துதல- திரைவிமர்சனம்வேற்று மொழியில் வெற்றிபெற்ற படங்களை தமிழில் தயாரிப்பது அதுவும் வியாபாரம் உள்ள நடிகர்களை நடிக்க வைத்து […]
- மதுரையில் குழந்தையை தொழிலாளர் முறையை அகற்றுவதற்கான பயிற்சி முகாம்குழந்தையை தொழிலாளர் முறையை அகற்றுவதற்கான மாநில செயல் திட்டத்தை அமல்படுத்துவதற்கான பயிற்சி முகாம் மதுரையில் இன்று […]
- கச்சத்தீவில் சிவன், முனீஸ்வரன் கோவில் கட்ட வேண்டும் -அர்ஜுன் சம்பத் பேட்டிமதுரை கலெக்டரிடம் மனு அளித்தஅர்ஜுன் சம்பத் கச்சத்தீவில் சிவன், முனீஸ்வரன் கோவில் கட்ட வேண்டும் –என […]
- “சுடுகாட்டில்” பிரதமர் மோடியின் உருவ படத்தை வைத்து -காங்கிரஸ் போராட்டம்ராகுல் காந்திக்கு இரண்டாண்டு சிறை தண்டனையை எதிர்த்து நாகர்கோவிலில் காங்கிரஸ் கட்சியினர் ஒரு வித்தியாசமான போராட்டத்தை […]
- தயிர் பாக்கெட்டில் இந்தி வார்த்தை தேவையில்லை -பின்வாங்கிய ஒன்றிய அரசுதயிர் பாக்கெட்டில் இந்தி வார்த்தையை சேர்க்கவேண்டும் எனஒன்றிய அரசின் உணவு தரம் மற்றும் பாதுகாப்பு அமைப்பு […]
- வைக்கம் நூற்றாண்விழா- முதல்வர் ஸ்டாலின் முக்கிய அறிவிப்புபெரியார் நடத்திய வைக்கம் போராட்ட நூற்றாண்டுவிழா தமிழகத்தில் இன்று முதல் ஓராண்டு வரை நடைபெறும் என […]
- மஞ்சூர் -கோவை பேருந்து பழுதாகி நின்றதால் பயணிகள் அவதிநீலகிரி மாவட்டம் மஞ்சூரில் இருந்து கோவை செல்லும் பேருந்து வழக்கம்போல் தினமும் காலை 6:30 மணி […]
- அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணி தொடர்கிறது- இபிஎஸ்அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணி தொடர்ந்து வருகிறது வரும் நாடாளுமன்றதேர்தலிலும் இக்கூட்டணி தொடரும் எனவும் பேட்டிஅதிமுக […]
- விலை உயரப்போகும் மருந்துகள்..,அதிர்ச்சியில் சாமானியர்கள்..!வருகிற ஏப்ரல் 1ஆம் தேதி முதல் 800 வகை மருந்துகளின் விலை உயரப்போவதாக என்பிபிஏ அறிவித்திருப்பது […]