• Fri. Apr 19th, 2024

பதவி விலக தயாரான சோனியா, ராகுல், பிரியங்கா: கலக்கத்தில் காங்கிரஸ் கமிட்டி

நேற்று நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டத்தில் சோனியா காந்தி ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் பதவி விலக முன் வந்ததாகவும் ஆனால் காங்கிரஸ் காரிய கமிட்டி அதை ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது.

நேற்று மாலை டெல்லியில் காங்கிரஸ் செயற்குழு கூட்டம் கூடியது. இந்த கூட்டத்தில் 5 மாநில தேர்தல் தோல்வி குறித்து ஆலோசிக்கப்பட்டதாகவும், 2024 பாராளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசனை செய்யப்பட்டதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் இந்த கூட்டத்தின்போது காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து விலக சோனியா காந்தி முன் வந்ததாகவும் அதேபோல் காங்கிரஸ் கட்சியின் பொறுப்பிலிருந்து விலக ராகுல் காந்தி பிரியங்கா காந்தி முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது
ஆனால் காங்கிரஸ் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் காங்கிரஸ் கட்சியின் தலைவராக சோனியா காந்தியே நீடிப்பார் என்றும் அறிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *