கோவையில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் புகுந்த சாரைப்பாம்பைக் கண்டு குடியிருப்புவாசிகள் கூச்சல் போட்டு கத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது.
கோவை காந்தி மாநகர் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பு அருகில் அடர் காடுகள் உள்ளது. நேற்று மாலை ஒரு சாரைப்பாம்பு அந்த அடுக்கு மாடி குடியிருப்பில் வந்தது. அந்த பாம்பை பார்த்த அந்த குடியிருப்பு வாசிகள் அலறி, அருகில் இருந்த வீடுகளை மூடுங்கள் என கூச்சலிட்டனர். மேலும் அந்த பாம்பு அடுக்குமாடிக் குடியிருப்பில் அருகில் உள்ள காட்டிற்குள் சென்றது.