• Thu. Apr 25th, 2024

சிந்தனைத் துளிகள்

Byவிஷா

Apr 25, 2022

• மற்றவர்கள் தோள் மீது ஏறி நின்று தன்னை
உயரமாக காட்டிக் கொள்வதை விட..
தனித்து நின்று தன் உண்மையான உயரத்தை
வெளிக்காட்டுபவனே சிறந்த தன்னம்பிக்கையாளன்.

• நம்மை அவமானப்படுத்தும் போது.. அந்த நொடியில்
வாழ்க்கை வெறுத்தாலும்.. அடுத்த நொடியில் இருந்து
தான் நம் வாழ்க்கையே ஆரம்பமாகிறது.

• தனித்து பறக்க இறகு முளைத்தால் மட்டும் போதாது..
மனதில் தன்னம்பிக்கையும் தைரியமும் முளைக்க வேண்டும்.

• நம்மால் முடிந்தவரை செய்வதல்ல முயற்சி..
நினைத்ததை முடிக்கும் வரை செய்வதே உண்மையான முயற்சி.

• நம்மை நாமே செதுக்கிக்கொள்ள உதவும் உளி தான்
தன்னம்பிக்கை மற்றும் விடாமுயற்சி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *